search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowned"

    • பவானி ஆற்றில் குளிக்க சென்றபோது பரிதாபம்
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வெண்ணல் வீதியைச் சேர்ந்தவர் ராஜன் (64). இவருக்கு புஷ்பலதா(58) என்ற மனைவி உள்ளார். ராஜன் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்குச்சென்றுள்ளார்.பின்னர் மாலை பணி முடிந்து ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் ஆழமான பகுதிக்குச்சென்று நீரில் மூழ்கினார். ராஜன் பணிக்கு தான் சென்றுள்ளார் என்பதால் புஷ்பலதாவும் அவரை தேடவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை குத்தாரிபாளையம் புதிய பம்பு ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் ராஜன் சடலமாக கரை ஒதுங்கி இருப்பது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் ராஜனின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி கவுரி (32).

    சந்திரன் ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கவுரி தனது 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை கடைசி குழந்தை யான கபிலேஷ் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே இருந்த கசக்கால்வாயில் குழந்தை எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டதாகத் தெரிகிறது.

    விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் தாய் கவுரி அக்கம் பக்கத்தில் தேடினார். அந்த நேரத்தில் கபிலேஷின் பாட்டி உமா மாடுகளுக்கு தண்ணீர் காண்பிக்க குட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.

    அந்த குட்டையில் கபிலேஷ் மிதந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உறவினர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊரணியில் மூழ்கி முதியவர் பலியானார்.
    • மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள சாத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் இன்று காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுபற்றி பொதுமக்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் பிணத்தை மீட்டனர்.

    விசாரணையில் ஊரணியில் மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தை அடுத்த கருப்பன்துறை இந்திரா நகரை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 15).
    • நெல்லையப்பனுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தை அடுத்த கருப்பன்துறை இந்திரா நகரை சேர்ந்தவர் சூசை மரியான். கூலித்தொழி லாளியான இவரது மகன் நெல்லையப்பன் (வயது 15). இவனுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் அவனை பெற்றோர் வெளியே எங்கும் செல்ல அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோருக்கு தெரியாமல் நெல்லையப்பன் அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றிற்கு சென்றுள்ளான். அப்போது திடீரென அவனுக்கு வலிப்பு ஏற்படவே தண்ணீரில் விழுந்து மூழ்கி விட்டான். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அவனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நெல்லையப்பன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிப்பதற்காக சென்றபோது பரிதாபம்
    • தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி பிணமாக மீட்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த அனந்தலை, எடகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் கோகுல் பிரசாத் (வயது 14) சென்னையில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கோகுல் பிரசாத் சொந்த ஊரான எடக்குப்பம் கிராமத்திற்கு வந்தார். நேற்று மதியம் கோகுல் பிரசாத் அப்பகுதி நண்பர்களோடு சேர்ந்து கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றார்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் பயந்து போய் கிராம பொது மக்களிடம் தெரிவித்தனர்.

    வாலாஜா போலீஸ் நிலையத்திற்கும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கிய சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரமாகியும் மாணவன் கிடைக்காததால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீர் குட்டையில் இறங்கி தேடுதலில் ஈடுபட்டனர்.

    சில மணி நேர தேடுதலுக்கு பின்னர் நீரில் மூழ்கி கிடந்த மாணவனை பிணமாக மீட்டனர்.

    தொடர்ந்து மாணவன் உடலை கைப்பற்றிய வாலாஜா போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • 7 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே குனச்சியூர் பகுதியைச்சேர்ந்தவர் சிங் காரவேலன் (வயது 35), கூலி தொழிலாளி. இவருக்கு திரு மணமாகி திலகவதி என்ற மனைவி உள்ளார்.

    சிங்காரவேலன் தனது மனைவியை நேற்று முன்தி னம் சேலம் மருத்துவமனை யில் சேர்த்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நாட்ட றம்பள்ளி அருகே செட்டேரி டேம் பகுதியில் 10-க்கும் மேற் பட்ட நண்பர்களுடன் மீன்பி டிக்க சிங்காரவேலன் சென் றார்.

    அப்போது சிங்காரவேலன் மீன்களை பிடிப்பதற்காக வலையை எடுத்துக்கொண்டு சென்றார்.

    வலையை விட்டு விட்டு கரைக்கு வரும்போது திடீரென நீரில் மூழ்கினார். உடன் வந்த நண்பர்கள் காப் பாற்ற முயன்றும் முடிய வில்லை. இதையடுத்து நாட்ட றம்பள்ளி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்த னர்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பரிசல் படகு மூலம் சிங்கார வேலனை தேடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தும் நாட்டறம்பள்ளி தாசில் தார் குமார் விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வை யிட்டார். மேலும் நாட்டறம் பள்ளி போலீஸ் இன்ஸ்பெக் டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக் டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    அதன் பின்னர் மாலை 5 மணியளவில் 7 மணி நேரம் போராடி சிங்காரவேலன் உடலை பிணமாக மீட்டனர்.

    இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத் தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அருள்பாண்டி வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார்.
    • எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள புத்தநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பாண்டி (வயது 23).இவர் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சொந்தமான நிலம் கெடிலம் ஆற்றுப்பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்று மாடு பிடித்துக் கொண்டிருந்த போது மாடு இழுத்து சென்றதில் அருள்பாண்டி எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் உயிர் பிழைக்க அபயக்குரலிட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர்.

    உடனே அவர்கள் அருள்பாண்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருள் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குளிக்கச் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ராமையன்தோப்பு பகுதியில் உள்ள பாலாற் றின் கிளை ஆற்றில், நூருல்லா பேட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நூர் (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கி விட்டார். மீண்டும் வெளி யில் வரவில்லை.

    இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேரம் இருட்டிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலையில் மீண்டும் தேடுதல் பணி நடந்தது. அப்போது அவர் பிணமாக மீட்கப் பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் மேஸ்வரபுரம், வீரமாங்குடி, தேவன்குடி ஆகிய கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

    மேலும், தேவன்குடி அண்ணாமலை நகர் பகுதியில் சுமார் 20 குடிசை வீடுகளில் மழைநீர் புகுந்ததால், சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டுஉரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், வீரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கனகம், சோமேஸ்வரபுரம் சாந்தி கார்த்திக், விவசாய சங்க தலைவர் விக்ரமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், வேளாண்மை துறை அதிகாரிகளும் உள்ளனர்.

    • திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 48) இவர் சக நண்பர்களுடன் சேர்ந்து ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகில் இருக்கும் குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.

    பிரகாஷ் சக நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு பிரகாஷ் நீரில் மூழ்க்கி உள்ளே சென்றுள்ளார்.

    இதனைப்பார்த்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு பார்த்த போது அவர் இறந்து தெரியவந்தது. இதனையடுத்து அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டனர்.

    தகவலறிந்து விறைந்து வந்த போலீசார் பிரகாஷ் பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அடுக்கம்பரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    • ஏரி அருகே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • எதிர்பாராத வகையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 36) ஆவார். இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் விவசாயக் கூலி வேலைக்கு சென்று இருந்தார். புளியந்தாங்கல் ஏரி அருகே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது அவர் திடீரென மயங்கி அருகில் இருந்த கிண ற்றில் விழுந்து விட்டார். 

    இது குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்து இறந்து போன ஏழுமலையின் பிரேதத்தை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து முண்டி யம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வமனை மருத்துவக் கல்லூரிக்கு ஏழுமலையின் பிரேதம் அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக இறந்து போன ஏழுமலையின் மனைவி சுசிலா கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா வயது (40). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கு சென்று இருக்கிறார் அப்போது எதிர்பாராத வகையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து இளையராஜாவின் அண்ணன் செந்தில்குமார் வயது 43 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன் பிடிக்க சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள செலந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தொடர்மழை காரணமாக செலந்தம் பள்ளி ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏரியில் அதிகளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏரியில் மீன் பிடிக்க சிவா சென்றுள்ளார். அப்போது, திடீரென அவர் ஏரியில் மூழ்கியதாக அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதுபற்றி குடும்பத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஏரிக்கு வந்து சுமார் 2 மணி நேரம் தேடியும் சிவா கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை சிவாவின் உடல் ஏரியில் கரை ஒதுங்கியது.

    இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×