செட்டேரி டேமில் வாலிபர் நீரில் மூழ்கி சாவு

மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம்7 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்
செட்டேரி டேமில் வாலிபர் நீரில் மூழ்கி சாவு
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே குனச்சியூர் பகுதியைச்சேர்ந்தவர் சிங் காரவேலன் (வயது 35), கூலி தொழிலாளி. இவருக்கு திரு மணமாகி திலகவதி என்ற மனைவி உள்ளார்.

சிங்காரவேலன் தனது மனைவியை நேற்று முன்தி னம் சேலம் மருத்துவமனை யில் சேர்த்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நாட்ட றம்பள்ளி அருகே செட்டேரி டேம் பகுதியில் 10-க்கும் மேற் பட்ட நண்பர்களுடன் மீன்பி டிக்க சிங்காரவேலன் சென் றார்.

அப்போது சிங்காரவேலன் மீன்களை பிடிப்பதற்காக வலையை எடுத்துக்கொண்டு சென்றார்.

வலையை விட்டு விட்டு கரைக்கு வரும்போது திடீரென நீரில் மூழ்கினார். உடன் வந்த நண்பர்கள் காப் பாற்ற முயன்றும் முடிய வில்லை. இதையடுத்து நாட்ட றம்பள்ளி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்த னர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பரிசல் படகு மூலம் சிங்கார வேலனை தேடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தும் நாட்டறம்பள்ளி தாசில் தார் குமார் விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வை யிட்டார். மேலும் நாட்டறம் பள்ளி போலீஸ் இன்ஸ்பெக் டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக் டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அதன் பின்னர் மாலை 5 மணியளவில் 7 மணி நேரம் போராடி சிங்காரவேலன் உடலை பிணமாக மீட்டனர்.

இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத் தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com