என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள செலந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தொடர்மழை காரணமாக செலந்தம் பள்ளி ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏரியில் அதிகளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏரியில் மீன் பிடிக்க சிவா சென்றுள்ளார். அப்போது, திடீரென அவர் ஏரியில் மூழ்கியதாக அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதுபற்றி குடும்பத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஏரிக்கு வந்து சுமார் 2 மணி நேரம் தேடியும் சிவா கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை சிவாவின் உடல் ஏரியில் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்