search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "firefighters"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லைஸ்பர்க் பார்க்கின் விரிவாக்கமாக ஓஷியானா பார்க் உருவாகியது
    • காணாமல் போன ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

    வட ஐரோப்பாவில் உள்ள நாடு, ஸ்வீடன். இதன் தலைநகரம் ஸ்டாக்ஹோம் (Stockholm).

    ஸ்வீடனின் மேற்கு கடற்கரையோர நகரம், கோதன்பர்க் (Gothenburg).

    இந்நகரில் "ஓஷியானா வாட்டர் பார்க்" (Oceana water park) எனும் புதிய தண்ணீர் பூங்கா கட்டப்பட்டு வந்தது. "லைஸ்பர்க் அம்யூஸ்மென்ட் பார்க்" (Liseberg Amusement Park) எனும் பொழுதுபோக்கு பூங்காவின் விரிவாக்கமாக இது உருவாகி வந்தது.

    நேற்று, ஓஷியானா தண்ணீர் பூங்காவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுமானம் முடிந்து, பயன்பாட்டிற்கு இன்னும் வராத பல நீர்சறுக்கு அமைப்புகள் தீக்கிரையாகின.


    அப்பகுதி முழுவதும் கருமண்டலம் போல் புகை சூழ்ந்தது.

    இந்த தீ விபத்தில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. ஆனாலும், ஒருவர் காணவில்லை என்றும் அவரை தேடும் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.


    தண்ணீர் பூங்காவை சுற்றியுள்ள ஒரு ஓட்டல் மற்றும் அருகிலிருந்த அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மேலும், தீ முழுவதுமாக அணைக்கும் வரை தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும், ஜன்னல்களையும் கதவுகளையும் தாழிட்டு கொள்ளவும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

    அப்பகுதி முழுவதும் எரிந்த பிளாஸ்டிக் வாடை வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • எல்லோரையும் போல் முதியவர் பாக்கெட்டை விரல்களால் திறக்க முயன்றார்
    • தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல் பராமரிப்பு பணியாளர்கள் செயல்பட்டனர்

    அமெரிக்காவின் தென்மேற்கில் உள்ளது ஜியார்ஜியா (Georgia) மாநிலம். இங்குள்ள நகரம், டால்டன் (Dalton).

    இங்கு வசித்து வந்த 75 வயது முதியவர் ஒருவர், உண்பதற்காக ஒரு சிப்ஸ் பாக்கெட்டை வாங்கினார். ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவர், எல்லோரையும் போல் அந்த பாக்கெட்டை தனது விரல்களால் திறக்க முயன்றார்.

    ஆனால், அவரால் அந்த பாக்கெட்டை திறக்க முடியவில்லை.

    சிறிது நேரம் போராடி பார்த்து பொறுமையிழந்த அவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டரை எடுத்து, அந்த பாக்கெட் ஓரத்தில் தீயை காட்டினார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உடலில் தீ பற்றி, மளமளவென அவரது உடல் எரிய தொடங்கியது.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த பராமரிப்பு பணியாளர்கள் சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் வரும் வரையில் காத்திருக்காமல், பராமரிப்பு பணியாளர்கள், ஒரு பெரிய நீர் குழாய் வழியாக, எரிந்து கொண்டிருந்த அந்த முதியவர் மீது நீரை பாய்ச்சி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதற்குள் தீயணைப்பு வீரர்களும், மருத்துவ அவசர சேவை பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர்.

    தொடர்ந்து, டென்னிசி மாநில சட்டனூகா (Chattanooga) பகுதியில் உள்ள எர்லாங்கர் பேரோனெஸ் மருத்துவமனையில் (Erlanger Baroness Hospital) அவர் சேர்க்கப்பட்டார்.

    தீ விபத்து காரணமாக அந்த முதியவருக்கு உடலில் 75 சதவீத காயங்கள் ஏற்பட்டிருப்பதாக, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மட்டுமே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.

    சிப்ஸ் பாக்கெட்டில் தீ பற்றி, அது அவர் மேல் பரவியதா அல்லது அவர் தன் உடல் மேல் கவனக்குறைவாக தீ வைத்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    ஆனால், சிப்ஸ் தயாரிப்பில் எண்ணெய் மற்றும் மாவு பயன்படுத்தப்படுவதால், அவை தீப்பற்ற கூடிய பொருட்கள்தான் என உணவு பொருள் தயாரிப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது.

    திருவொற்றியூர்:

    மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் குடோன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

    அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். குடோனில் உள்ளே இருக்கக்கூடிய மூலப் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பற்றக்கூடியவை கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தீயிலிருந்து வெளியேறிய புகை திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர் போன்ற சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. மணலி, எண்ணூர், மாதவரம் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 100-க் கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தண்ணீர், தீயணைப்பான் திரவம் போன்றவர்களைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து ரசாயன புகை சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

    • சம்பத்குமாருக்கு சொந்தமாக அண்ணா கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது.
    • இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    அண்ணா கிராமம் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருக்கு சொந்தமாக அண்ணா கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் கரும்பு எரிந்து சேதமடைந்தது.இந்த தீ மேலும் அதே பகுதியை சேர்ந்த சத்திய நாராயணன் என்பவரது கரும்பு தோட்டத்திற்கும் பரவியது. இதனால் அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலை அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • தற்கொலைக்கு முயன்ற மனைவியை கிணற்றில் குதித்த ராணுவவீரர் காப்பாற்றினார்.
    • சாத்தூர் தீய–ணைப் புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்த–னர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சின்னத்தம்பியாபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (வயது 32). இவருக் கும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது.

    சுந்தரமூர்த்தி இந்திய ராணுவத்தில் ஜம்பு பகுதி யில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு கண வன், மனைவி இருவரும் ஜம்முவில் குடியேறி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சுந்தர மூர்த்தி தன்னுடைய மனை வியுடன் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு விடுமுறை யில் சொந்த ஊருக்கு வந்தி ருந்தார். இந்த நிலையில் ராணுவ வீரர் சுந்தரமூர்த் திக்கும் அவருடைய மனைவி பொன்னு மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னுமணி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றார்.

    பின்னர் அவர் ஊருக்கு வெளியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக சுந்தரமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சுந்தரமூர்த்தி மனைவியை காப்பாற்ற தானும் கிணற் றில் குதித்தார்.

    தண்ணீரில் மூழ்கிய மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து காப்பாற் றிய பின்னரே, கிணற்றில் படிகள் இல்லாததை சுந்தர–மூர்த்தி அறிந்தார். பின்னர் தொடர்ந்து சப்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரை உத–விக்கு அழைத்தார். அவர் கள் கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் தீய–ணைப் புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்த–னர்.

    • தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆளப்பெரியானூர் கிராமத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவரின் வீட்டில் பாம்பு புகுந்தது.

    அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உடனடி யாக நாட்ட றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ½ மணி நேரம் போராடி சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தனர்.

    இதேபோல நாட்டறம்ப ள்ளி அருகே சோமநா யக்கன்பட்டி பகுதியில் உள்ள ஜெர்ரா வட்டத்தில் வசித்து வரும் முனுசாமி என்பவரின் வீட்டில் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பை பிடித்தனர். நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் 2 பாம்புக ளையும் வனத்துறை மூலம் காப்பு காட்டில் விட்டனர்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் அடிக்கடி வீடுகளில் பாம்புகள் நுழை வதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
    • மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை இன்னும் துவங்கவில்லை. மழை பொழிவு துவங்கினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுவது, வெள்ளத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கும். எனவே மழை காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், தீயணைப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மழை காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றனர்.

    மழை பெய்யும் போது மரத்தடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்வரத்தை அறியாமல் ஆறு, ஓடைகளில் நிற்பதையும், நீர்வழித்தடங்களில் வாகனங்களில் கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஈரமான சுவற்றில் உள்ள மின் சுவிட்ச்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தில், மீட்பு பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் மற்றும் பணியாளர்கள், கருவிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். 

    • இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள்  தீயில் எரிந்து சாம்பலானது.
    • காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 60). இவரது கூரை வீடு மின்சார கசிவால் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மேலும் பரவி அருகில் இருந்த மனவளப் பெருமாள்வீடும் எரிந்து சாம்பலானது. இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள்  தீயில் எரிந்து சாம்பலானது.

    இது பற்றி தகவல் பண்ருட்டி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தீயை தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.
    • கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரத்தில் இந்திரா காலனியில் உள்ள ஒரு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு தாய் நாய் சாக்கடை கால்வாய்க்குள் உள்ளே சென்று குட்டிகளுக்கு பால் கொடுத்துவிட்டு பின்னா் மேலே வருவதுமாக இருந்துள்ளது. மேலும் கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

    இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவா் சாக்கடை கால்வாய் அருகில் சென்று சிமெண்ட் சிலேப் போட்டு மூடப்பட்டிருந்த பகுதியில் இருந்த சிறிய இடைவெளி வழியாக உள்ளே பாா்த்துள்ளாா். அப்போது கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளாா்.

    அதன் பேரில் நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள் சாக்கடை கால்வாய் சந்தில் கையை விட்டு 6 நாய் குட்டிகளையும் மேலே எடுத்து வெளியே விட்டனா். அப்போது தாய் நாய் அருகிலேயே நின்று பாா்த்துக் கொண்டிருந்தது. குட்டிகள் அனைத்தும் மேலே வந்ததும் அனைத்து குட்டிகளையும் அழைத்து கொண்டு சென்றது. நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

    • விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று தவறி கிணற்றில் விழுந்து விட்டது.
    • தீயணைப்பு படையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடத்தில் சுமார் 80 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. நேற்று மாலை இதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று தவறி கிணற்றில் விழுந்து விட்டது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர், கயிறு கட்டி கிணற்றில் இறங்கி அந்த நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டு உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர். நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு போலகம் ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் லதா அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலர் திலக்பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில், ஊராட்சி செயலாளர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் எரவா ஞ்சேரி ஊராட்சி துறையூ ரில் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலத ண்டாயுதம் தலைமையிலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    • கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
    • கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர்.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த வட்டமலை அருகே சேடன்புதூர் பகுதியில் உள்ள செட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தண்ணீர் இல்லாத 80 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அதில் தோட்டத்தில் சுற்றித்திரிந்த பிறந்து 3 மாதங்களே ஆன கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது.

    பின்னர் மேலே வரமுடியாமல் கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த சத்தத்தை கேட்ட பெரியசாமி அங்கு சென்று கிணற்றை எட்டிப்பார்த்த போது கிணற்றுக்குள் கன்றுக்குட்டி விழுந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திக்கு வந்து பார்வையிட்டு கன்றுக்குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். பின்னர் கன்றுக்குட்டி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×