என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு
- ராமச்சந்திரன் வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது.
- நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் குளத்துப்பாதை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி வெங்கலட்சுமி. இவரது வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு, வெளியே வந்தனர். மேலும் இதுபற்றி சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின் நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Next Story






