search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீரில் மூழ்கி 3 வயது சிறுவன் சாவு
    X

    நீரில் மூழ்கி 3 வயது சிறுவன் சாவு

    • விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி கவுரி (32).

    சந்திரன் ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கவுரி தனது 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை கடைசி குழந்தை யான கபிலேஷ் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே இருந்த கசக்கால்வாயில் குழந்தை எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டதாகத் தெரிகிறது.

    விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் தாய் கவுரி அக்கம் பக்கத்தில் தேடினார். அந்த நேரத்தில் கபிலேஷின் பாட்டி உமா மாடுகளுக்கு தண்ணீர் காண்பிக்க குட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.

    அந்த குட்டையில் கபிலேஷ் மிதந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உறவினர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×