search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thamiraparani"

    • கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

    இதன் காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட் டத்தின் பல்வேறு பகுதி களில் பெய்த கனமழை யின் காரணமாக காட்டாற்று வெள்ளம் மற்றும் சிறிய சிறிய ஓடைகள், கால்வாய்க ளில் நீர்வரத்து அதிகரித்து அந்த நீர் அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் சேர்கிறது.

    இதன் காரணமாக வழக்கத்தை விட கூடுதலாக ஆற்றில் நீர் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதையும், வேடிக்கை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்திருந்தார்.

    இந்த நிலையில் மாவட் டத்தில் பெய்த கனமழையின் தாக்கத்தால் நெல்லை தச்சநல்லூர் மேலகரை பகுதியில் உள்ள பழமை யான வேப்பமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

    இதன் காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப் படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தை அடுத்த கருப்பன்துறை இந்திரா நகரை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 15).
    • நெல்லையப்பனுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தை அடுத்த கருப்பன்துறை இந்திரா நகரை சேர்ந்தவர் சூசை மரியான். கூலித்தொழி லாளியான இவரது மகன் நெல்லையப்பன் (வயது 15). இவனுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் அவனை பெற்றோர் வெளியே எங்கும் செல்ல அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோருக்கு தெரியாமல் நெல்லையப்பன் அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றிற்கு சென்றுள்ளான். அப்போது திடீரென அவனுக்கு வலிப்பு ஏற்படவே தண்ணீரில் விழுந்து மூழ்கி விட்டான். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அவனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நெல்லையப்பன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×