search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water bodies"

    • அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜீத் வலியுறுத்தினார்.
    • அரசின் அறிவுரையின்படி பொது மக்கள் கடைபிடித்திடல் வேண்டும்.

    சிவகங்கை

    முதலமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு தல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    அதில், கீழ்கண்ட நடைமுறைகளை அரசின் அறிவுரையின்படி பொது மக்கள் கடைபிடித்திடல் வேண்டும்.

    களிமண்ணால் செய்யப் பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவை யற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட் களால் மட்டுமே செய்யப் பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப் படுகிறது.

    சிலைகளின் ஆபர ணங்கள் தயாரிப்ப தற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட் களை பயன்படுத்த கண்டிப் பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணை வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சு களை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

    மேலும், விநாயகர் சிலைகளை சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சிவகங்கை தெப்பக்குளம், மானாமதுரை, ஆலங்ககுளம், இளை யான்குடி சாலை கிராமம் டேங்க், சிவன்கோவில் ஊரணி, சிலம்பனி ஊரணி, சிங்கம்புணரி ஊரணி இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    விநாயக சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா டும்படி பொதுமக்கள் கொண்டாடிட வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகி யோர்களை அணுகலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
    • 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை வழக்கமாக பெய்யும். இக்காலக் கட்டத்தில் தமிழகத்துக்கு தேவையான அளவு மழை பொழிவு இருக்கும்.

    பருவ மழை காலம் நெருங்கி வருவதால் கால்வாய்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நீர் வழிகளில் தடையின்றி வெள்ள நீரை கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக நீர் வளத்துறை கிட்டத்தட்ட 30 சதவீத பணிகளை முடித்து உள்ளது. 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போரூர், செங்குன்றம், சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணி தொடங்கி நீர்வாழ்களை களை அழிக்கும் பணி நடந்து வருகிறது. 184.45 கி.மீ. தொலைவுக்கு செல்லும் கால்வாய்களில் 77 பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அடையாறு ஆற்று முகத் துவாரம் மற்றும் முட்டுக் காடு, புதுப்பட்டினம் கடல் முகத்துவாரங்களில் குவிந்துள்ள மணல் அகற்றப்படுகிறது. கண்டலேறு-பூண்டி வாய்க்கால் முற்றத்தின் அரிக்கப்பட்ட கரைகளை மூடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த் தேக்கத்திற்கு செல்கிறது.

    பருவமழையை கருத்தில் கொண்டு நீர் வழிகளில் உள்ள செடிகள், கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை 137 எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயில் உள்ள குப்பைகளை 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அதிகாரிகள் அகற்ற வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூவம் பகுதிகளிலும், குறுகிய பகுதிகளிலும் துப்புரவு பணியை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

    விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நுல்லா பகுதியில் சென்னை மாநகராட்சி உதவியுடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 72 லாரிகளில் காய்கறி கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த பணியை கண்காணிக்க என்ஜினியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட செடிகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.

    அகற்றப்பட்ட செடிகள், மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும் அதேவேளையில் அழிக்கப்பட்ட தாவரங்களை உரமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இணையலாம்.
    • 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நீர் நிலைகள் பாதுகாப்புக்குழு செயல் திட்டக்கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் பணிகள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்று தல், தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    நீர் நிலைகளில் கொள்ள ளவினை நிலை நிறுத்துதல் போன்ற பணிகளில் தொடர் நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகளை பாதுகாத்தல் பணியில் தொடர்புடைய துறைகள் மட்டுமன்றி, பொது தொண்டு நிறுவ னங்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நீர் நிலைகள் பாதுகாப்பு நடவ டிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வரும் பொது அமைப்புக்கள், விவசாய சங்க கூட்டமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகி யோர்களை ஒருங்கிணைத்து நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதன்படி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில், நீர் நிலைகள் குழு மூலம் மாவட்டத்தில் 2 நீர் நிலைகள் தேர்ந்தெடுக் கப்பட்டு, அதில் மாபெரும் தூய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமி டப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், வருகின்ற செப்டம்பர் 9-ந் தேதியன்று திருப்புவனம் நகரை ஒட்டியுள்ள வைகை நகர் பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் பணியாற்றிட ஆர்வமுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர தன்னார்வ தொண்டு அமைப்புக்களை சார்ந்தோர்கள், மாவட்ட நிர்வாக தொலைபேசி எண்ணான 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இய்குநர் சிவராமன், செயற் பொறியாளர்கள் (சருகனியாறு, மணிமுத்தாறு, பெரியாறு வடிநிலக் கோட்டங்கள்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (நில அளவை), சிவகங்கை வன சரக அலுவலர், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் இதர குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.
    • மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன.

    நெல்லை:

    மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலக் கருங்குளம் பகுதி. இங்கு விவசாய தோட்டங்கள் அதிகம் இருப்பதால் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.

    இறந்து கிடந்த 20 நாய்கள்

    இந்நிலையில் இன்று காலையில் மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இவற்றில் பல நாய்கள் நீர்நிலைகளின் அருகே இறந்து கிடக்கிறது.

    எனவே அந்த நீர்நிலைகளில் விஷம் கலக்கப்பட்டு அதை குடித்ததால் நாய்கள் இறந்ததா? அப்படி என்றால் அந்த நீரை மற்ற விலங்குகள் குடித்து அசம்பாவித சம்பவம் நிகழும் முன்பாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்க வேண்டும், இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    • 500 கி.மீட்டருக்கு நீர்நிலைகளில் பல்வேறு நாட்டு மரங்களை நடவு செய்ய உள்ளோம்.
    • பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சந்திரப்பாடி ஊராட்சியில் தொண்டு நிறுவனம் சார்பில் கடல்நீர் உட்புகுதலை தடுத்து நிலத்தடி நீரினை நன்னீராக மாற்றம் செய்திடும் முயற்சியாக குளம் வெட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    ராமலிங்கம் எம்.பி., நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ்குமார் வரவேற்றார்.

    இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குளம் வெட்டும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டா லின், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடல்நீர் உள்ளே புகாத வகையில் கடல் முகதுவாரத்தில் தடுப்பணைகள் கட்டி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களில் அதிகமான நீளமான கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    அந்த வகையில் தமிழகத்தில் 14 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன.

    இந்த கடற்கரையோர மாவட்டங்களை பாதுகா ப்பதற்காக கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டருக்கு நீர்நிலைகளில் பல்வேறு நாட்டு மரங்களை நடவு செய்ய உள்ளோம்.

    நீர் நிலைகளையும், நீராதாரங்களையும் பாதுகாக்க அரசு, அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இந்த ஊராட்சியில் விரைவில் கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்க மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது இங்கு பணி செய்ய உள்ள தொண்டு நிறுவனம் நீர் நிலைகளை காப்பாற்றும் வகையில் பல்வேறு இடங்களில் குளங்களை வெட்டி உள்ளன.

    எனது சொந்த ஊரிலேயும் இந்த தொண்டு நிறுவனம் குளங்களை வெட்டி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் மீனா, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தொண்டு நிறுவன நிர்வாகி நமல்ராகவன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, தாசில்தார் காந்திமதி, ஒன்றிய கவுன்சிலர் செல்வம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
    • நீர்வள ஆதாரத்துறை சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில மாதங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட சுள்ளிக்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள 58 வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறை சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றனர். இந்நிலையில் அப்பகுதியில் 8 வீட்டினர் மட்டும் பலமுறை கூறியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இதையடுத்து நீர்வள துறை ஆய்வாளர் செல்வராஜ், திருமுருகன் பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், கிராம நிர்வாக அலுவலர் யுகேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோர் முன்னிலையின் பொக்லைன் எந்திரம் மூலம் நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 8 வீடுகளை அகற்றினர். முன்னதாக வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் அகற்றி மாற்று இடங்களில் வைத்தனர்.  

    • பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் நவநீதகிருஷ்ணபுரத்தில் இயங்கி வருகிறது.
    • குப்பை கழிவுகள் அனைத்தையும் நாகல்குளத்தின் கரையோர பகுதிகளில் கொட்டி வருகிறார்கள்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் நவநீதகிருஷ்ணபுரத்தில் இயங்கி வருகிறது. ஊராட்சிமன்ற தலைவராக பெத்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராணி கலைச்செல்வன் என்பவர் உள்ளார்.

    குப்பை கழிவுகள்

    ஊராட்சி மன்றத்தின் சார்பாக சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் அனைத்தையும் நாகல்குளத்தின் கரையோர பகுதிகளில் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே விவசாய நிலங்களுக்கு செல்லும் குளக்கரைகளில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் சூழ்நிலை மற்றும் குளங்களில் வாழும் மீன்களும் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    விவசாயிகள் கோரிக்கை

    இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.
    • பெயிண்ட் பூசப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்ற பின் அந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும். சிலைகளின் உயரம் மற்றும் அவை வைக்கப்பட வேண்டிய மேடை போன்றவற்றின் அளவு அந்த இடத்தின் அமைப்பாளரால் குறிப்பிடப்பட வேண்டும்.

    சிலை வைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விழா ஏற்பாட்டாளர்கள் குழாய் வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை செய்யப்படும் நேரங்களில் முறையே 2 மணிநேரம் மட்டுமே ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.ஒவ்வொரு சிலையையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் நியமனம் செய்வார்கள்.

    ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் செய்ய வேண்டும். அனைத்து ஊர்வலங்களும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மத ரீதியான பகுதிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்து செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வேதிப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் பயன்படுத்தக் கூடாது.

    மேலும், பெயிண்ட் பூசப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது. சிலைகள் நிறுவப்படும் பந்தல் கட்டுமானத்தை எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருட்களை கொண்டு செய்வதை தவிர்க்க வேண்டும். வழிபாடு இடத்தின் அருகில் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளன.
    • குளங்களில் கரையோரத்திலுள்ள கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள் நேரடியாக கலந்து குளத்து நீரை மாசுபடுத்துகிறது.

    உடுமலை :

    உடுமலையில் ஏழு குளம் பாசனம் மற்றும் பி.ஏ.பி., தளி கால்வாய், உடுமலை கால்வாய், பிரதான கால்வாய் முக்கிய நீராதாரங்களாக உள்ளன.கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளன.

    இத்தகைய நீராதாரங்களை பாதுகாத்து பராமரிப்பதில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் நீர்நிலைகள் மாசடைந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.குறிப்பாக ஏழு குளங்களில் கரையோரத்திலுள்ள கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள் நேரடியாக கலந்து குளத்து நீரை மாசுபடுத்துகிறது.மேலும் கிராமங்களிலுள்ள பிற குளங்கள் அனைத்தும் குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் என குப்பை கொட்டும் இடமாக மாற்றப்படுகிறது.

    அதே போல் தளி கால்வாய், உடுமலை கால்வாயின் வழியோரத்திலுள்ள தளி பேரூராட்சி, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சிகளில்குடியிருப்புகளிலிருந்து நேரடியாக கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது.மேலும் கால்வாய் கரையில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதால் குப்பை கழிவுகளும் பாசன கால்வாயில் நேரடியாக கலந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தளி பேரூராட்சியிலிருந்து கழிவுகள், குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் மற்றும் வழியோர குடியிருப்புகளின் கழிவுகளும் தளி கால்வாயில் நேரடியாக கலக்கிறது.இக்கால்வாய் வழியாக 7 குளங்களுக்கு நீர் செல்வதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. வாய்க்காலில் அதிக அளவு சேறும், சகதியும் படிந்து துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுகிறது.

    பாசன நீருடன்கழிவு நீரும் கலந்து குளங்களில் தேங்குவது மற்றும் விவசாயம், குடிநீருக்கும் பயன்படுத்தும் போது, மக்களும் பாதிக்கின்றனர். ஜல்லிபட்டி ஊராட்சி கழிவுநீர் மற்றும் குப்பை, இறைச்சிக்கழிவுகள், தென்பூதிநத்தம், அம்மாபட்டி குளத்தில் நேரடியாக கலக்கப்படுகிறது. போடிபட்டி ஊராட்சி மற்றும் குடியிருப்புகளிலிருந்து, ஒட்டுக்குளத்தில் சாக்கடைக்கழிவுகள் கலப்பதோடு, குப்பை, கழிவுகள் கொட்டப்படுகிறது.பள்ளபாளையம் ஊராட்சிப்பகுதியிலிருந்து செங்குளத்தில் இதே போல், கழிவுகள் கலக்கிறது.

    எனவே, தளி கால்வாய் மற்றும் ஏழு குளங்கள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் தளி கால்வாய் வழியோரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளும், உடுமலை கால்வாய், பூலாங்கிணர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் வழியோரத்தில், நீர் நிலைகளை மாசுபடுத்தும் வகையில் அமைந்துள்ள கழிவு நீர் கலக்கும் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பை கொட்டும் மையங்களை அகற்ற வேண்டும்.உடுமலை பகுதிகளின் பாசனம், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரங்களாக உள்ள நீர் நிலைகளை காக்க, உரிய நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, நிதி ஒதுக்கீடு செய்து நீர்நிலைகள் மாசடைவதை தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×