என் மலர்
நீங்கள் தேடியது "மூளையை தின்னும் அமீபா"
- சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
- பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.
அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- `நேக்லரியா போலேரி' என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும்.
- ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது.
முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்பது மூளை மற்றும் மூளையைச் சுற்றி மூடியிருக்கும் சவ்வு திசுக்களில் ஏற்படும் தொற்று பாதிப்பு ஆகும். இந்த தொற்று பாதிப்புக்கு காரணம் ''நேக்லரியா போலேரி'' என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும். மூளையை தின்னும் அமீபா என்று இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

'நேக்லரியா போலேரியா' என்னும் இந்த ஒற்றை உயிரணு உயிரினம் உலகம் முழுவதும் உள்ள ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது.
குறிப்பாக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சூடான நீரிலும், சரியாக குளோரினேட் செய்யப்படாத நீச்சல் குளங்களிலும் அதிகம் காணப்படுகிறது.

வெதுவெதுப்பான நீர் உள்ள குளங்கள் அல்லது ஏரிகளில் மூழ்கி குளிக்கும்போது இந்த அமீபா மனிதனின் மூக்கு வழியாக நுழைந்து நேரடியாக மூளைக்கு செல்கிறது. பின்னர் மூளையின் திசுக்களை வேகமாக தின்று அழிக்கிறது.
இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விட்டால் ஆரம்ப அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி காணப்படும். மேலும், கழுத்து இறுக்கம், குழப்பம், மக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கவனம் இல்லாமை, சமநிலை இழப்பு, வலிப்பு மற்றும் கண் முன் மாய தோற்றங்கள் தோன்றுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். நோய் தொற்று ஏற்பட்ட 12 நாட்களில் மரணம் நேர்கிறது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் மூளை தின்னும் ''நேக்லரியா போலேரி'' அமீபா இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த அமீபா பாதிப்பை சரியான முறையில் கண்டறிய தவறுவதால், மூளைக்காய்ச்சல் என்று கருதி விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மூளையை உண்ணும் அமீபா வெதுவெதுப்பான நீரில் வாழும் ஒரு தெர்மோபிலிக் உயிரினம். இதனால், இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் அதிக அளவில் வெதுவெதுப்பான நீர் நிலைகளில் இவை பெருக ஏற்றதாக இருக்கிறது. எனவே, இந்த அமீபா தொற்று விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று தொற்று உயிரியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.






