search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prevention"

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்புகள் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில், சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா பேசியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 111 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, 90 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 வழக்குகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் திருமணம் இல்லாத, மாவட்டமாக மாற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா பேசியதாவது:- புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாவட்டத்தில் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி அருகே கடைகளில் போதை பொருட்கள் விற்றால், அவற்றை உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து கல்விக்கு அடித்தளமிடப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய தலைவர்உறுதி கூறினார்.
    • துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ் ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் புவனேசுவரன் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பேசுகையில், பொது நிதியிலிருந்து ரூ.4.87 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் 37 ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமெனஅதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைச்சாமி நன்றியுரை வழங்கினார்.

    • டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்தல் வேண்டும்.
    • தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    திருப்பூர்,செப்.26-

    டெங்கு காய்ச்சல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகராட்சி, நகராட்சி அளவில், ஏற்கனவே வகைப்படுத்தப்பட்ட தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹாட்ஸ்பாட் ஆக கண்டறிந்து அப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து, காய்ச்சல் பாதித்தவர் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். செல்போன் குழுக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் ஒருவர் அனுமதியானால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தெரியப்படுத்தாத மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

    • சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் இவரது தம்பி ராஜகணபதி இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது.
    • ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார்.

    ேசலம்:

    சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது தம்பி ராஜகணபதி (45). இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார். அதில் ராஜகணபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    • சேலம்‌ மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோ சனைக்‌ கூட்டம் அரசு மோகன்‌ குமாரமங்கலம்‌ மருத்துவக்‌ கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு நடவடிக்கை களான கொசுப்புழு ஒழிப்புப்‌ பணி, புகை மருந்து அடிக்கும்‌ பணி, கிருமி நாசினிகள்‌ தூவுதல்‌, நிலவேம்பு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி, மாநகர நல அலுவலர் யோகானந்த், இணை இயக்குநர் நலப்பணி கள் பானுமதி, துணை இயக்கு நர்கள் சவுண்டம்மாள், ஜெமினி, மாவட்ட தொற்று நோய் தடுப்பு நிபுணர் விமா மும்தாஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தனி சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வட்டாரத்திலும் நாள்தோறும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் 3 முகாம்களும், நடமாடும் பள்ளிச்சிறார் மருத்துவக் குழுக்கள் மூலம் 6 முகாம்களும் என மாவட்டத்தில் மொத்தம் 180 சிறப்பு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலமாக காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள், விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது.

    இதனைத்தவிர்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.

    மேலும், சாதாரண சளி, காய்ச்சல் தானே என அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள மருத்துவர்களிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சேலம் மாவட்டத்தில் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் ஊராட்சிப் பகுதிகளில் 400 நபர்களும், பேரூராட்சி பகுதிகளில் 310 நபர்களும், நகராட்சி பகுதி களில் 169 நபர்களும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 250 நபர்களும் பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை களான கொசுப்புழு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடிக்கும் பணி, கிருமி நாசினிகள் தூவுதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக அஸ்காட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு கால்நடை நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தப் பட்டது.
    • கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக அஸ்காட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு கால்நடை நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தப் பட்டது. இதில் சேலம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை தாங்கி கால்நடை பராம ரிப்புத் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட் டங்கள் குறித்து விவசாயி களுக்கு எடுத்துரைத்தார்.

    கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து கால்நடை மருத்துவப் பல்க லைக்கழக உதவி பேராசிரி யர் டாக்டர் கோபி, மாடுகளில் பெரியம்மை நோய் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ஆர்.எஸ்.டி பாபு, கறவை மாடு கள் பராமரிப்பு குறித்து சங்ககிரி உதவி இயக்குனர் டாக்டர் முத்துக்குமார்,

    வெறி நோய் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து டாக்டர் ரகுபதி, செல்லப் பிராணிகள் பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து டாக்டர் அருள் பிரகாஷ்ராஜ் ஆகியோர் எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் கிருபாநாத் மற்றும் டாக்டர் ஆஷா செய்திருந்தனர். கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலாளர் தலைமை தாங்கினார்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு சமையல் கேஸ் சிலிண்டரில் நிரப்பப்பட்டு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், உள்பட பல்வேறு ஆகிய மாவட்ட மக்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

    இங்கு கேஸ் நிரப்பும் இடத்தில் மற்றும் குடோன் பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு செயல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பிளான்ட் முதன்மை மேலா ளர் சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலை துணை மேலாளர் சரத் சந்திரா, சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர், அதனைத் தொடர்ந்து கேஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால் தானாகவே அதிநவீன தண்ணீர் வெளியேறி அணைக்கும் பயிற்சியும் மற்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது,

    தொழிற்சாலை பாதுகாப்பு துறை இணை இயக்குனர் சபீனா, தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலுவ லர்கள், தொழி லாளர்கள், ஊழியர்களுக்கு விபத்து ஏற்படும்போது விழிப்பு ணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கப்பட வேண்டும் உயிர் காக்கும் கருவிகள் அணிந்து கொண்டு பணி புரிய வேண்டும் என்றார், முகாமில் கேஸ் ஏஜென்சி மேலாளர் முருகேசன்,கருப்பூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அன்பழகன், தீயணைப்பு வீரர்கள், பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் தொழிற்சாலை மேலாளர் சிவராம கிருஷ்ணன் பயிற்சி அளித்த போது எடுத்த படம் அருகில் இணை இயக்குனர் சபீனா, உள்ளார்.

    • சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஓட்டல்களில் உள்ள செக்யூரிட்டி, மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வேலு உத்தரவின் பேரில், நட்சத்திர ஓட்டல்களில் தீ தடுப்பு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தீ விபத்து ஏற்படும் போது, அதை தடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து, ஓட்டல்களில் உள்ள செக்யூரிட்டி, மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    • ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானை உள்ளது.
    • ரூ. 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானைக்கு கோவில் வளாகத்திலேயே நன்கொடையாளர் ஏற்பாட்டில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு கான்கீரிட் தளமும், நீச்சல் குளம் கட்டப்பட்டு பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நீச்சல் குளத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் ஆறுமுகம், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
    • வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையதில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு சென்று விட்டு மீண்டும் சமவெளிப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கோத்தகிரி மார்க்கமாகவே செல்கின்றனர்.

    இப்படி கோத்தகிரி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் மலைப்பாதைகளில் உள்ள வளைவுகளில் வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.

    இதனை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற நோக்கில் நெடுஞ்சா–லைத்துறை சார்பில் கோத்த–கிரியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான மலைப்பா–தையின் வளைவுகளில் உள்ள சாலைகளை அகலப்படுத்தியும், வாகனங்கள் வேகமாக செல்லக்கூடிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணியும் கடந்த 3 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்தது.

    ஆனால் பெரும்பாலான பகுதிகளில் சாலை பணி மற்றும் வேகத்தடை அமைக்கும் பணி 90 சதவிகிதம் முடிந்த பின்னரும் மீதமுள்ள 10 சதவிகித பணிகளை முடிக்காமலேயே உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மேல் தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணி 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமலேயே உள்ளது.

    இதனால் சிறிய வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு.

    உடுமலை :

    உடுமலையில் தமிழ்நாடு காவல்துறை, உடுமலை அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை, பொன்விழா குழு, நாட்டு நலப்பணித் திட்ட தேசிய மாணவர் படை, உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு உடுமலை டிஎஸ்பி. தேன்மொழி வேல் தலைமை வகித்தார்.

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய பேரணி எல்லையம்மன் பிரிவு வழியாக குற்றச்சிடல் பழைய பஸ் நிலையம் சென்று புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அப்போது போதை பொருள் தடுப்பு மற்றும் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ,வெங்கடாசலம் மற்றும் போலீசார் ,கல்லூரி பேராசிரியர்கள் , உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×