search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

    • போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு.

    உடுமலை :

    உடுமலையில் தமிழ்நாடு காவல்துறை, உடுமலை அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை, பொன்விழா குழு, நாட்டு நலப்பணித் திட்ட தேசிய மாணவர் படை, உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு உடுமலை டிஎஸ்பி. தேன்மொழி வேல் தலைமை வகித்தார்.

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய பேரணி எல்லையம்மன் பிரிவு வழியாக குற்றச்சிடல் பழைய பஸ் நிலையம் சென்று புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அப்போது போதை பொருள் தடுப்பு மற்றும் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ,வெங்கடாசலம் மற்றும் போலீசார் ,கல்லூரி பேராசிரியர்கள் , உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×