search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flowed"

    • சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
    • சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 30). இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சீனிவாசன் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சீனிவாசனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மீண்டும் பழக ஆரம்பித்தார்.

    இந்த நிலையில் சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் சீனிவாசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் இவரது தம்பி ராஜகணபதி இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது.
    • ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார்.

    ேசலம்:

    சேலம் அம்மாப்பேட்டை செங்கல் அணை சாலையை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது தம்பி ராஜகணபதி (45). இவர்கள் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் செல்வம் தனது தம்பி ராஜகணபதியை கட்டையால் தாக்கினார். அதில் ராஜகணபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    ×