search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The driver"

    • சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
    • சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 30). இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சீனிவாசன் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சீனிவாசனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மீண்டும் பழக ஆரம்பித்தார்.

    இந்த நிலையில் சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் சீனிவாசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் சின்னகாளியூர் வேதபாறை பள்ளம் அருகே ரேசன் அரிசி கடத்துவதாக பங்க ளாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் வேனில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பேரிசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் மேட்டு நாசுவம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்க டேஷ் (34) என்பதும், 40 கிலோ எடையுள்ள 22 மூட்டைகள் என சுமார் 1 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பிடிபட்ட ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் அவர் ஓட்டி மினி ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனர்.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.

    • பஸ் கடந்த வாரம் மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
    • இந்த நிலையில் அந்த பஸ் மீண்டும் விபத்தில் சிக்காமால் இருக்க வேண்டி பஸ் டிரைவர் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் பகுதியில் பஸ்சை நிறுத்தி பூஜைகள் செய்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. பர்கூரில் இருந்து மேற்கு மலை பகுதியான மணி யாச்சி கொங்காடை, செங்குளம், சின்ன செங்குளம், ஓசூர், ஒந்தனை உள்ளிட்ட பகுதி களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த பஸ் கடந்த வாரம் மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை அடுத்து அந்த பஸ் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டு மீண்டும் பஸ் இயக்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்த பஸ் மீண்டும் விபத்தில் சிக்காமால் இருக்க வேண்டி பஸ் டிரைவர் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் பகுதியில் பஸ்சை நிறுத்தி பூஜைகள் செய்தார்.

    மேலும் அந்தியூர் அருகே உள்ள குருநாதசாமி கோவிலிலும் பஸ்சை நிறுத்தி பூஜைகள் போடப்பட்டது. இதன் பிறகு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு மலைப் பகுதிக்கு சென்றது.

    ×