search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் நிறைவடையாத சாலை அகலப்படுத்தும் பணி
    X

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் நிறைவடையாத சாலை அகலப்படுத்தும் பணி

    • அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
    • வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையதில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு சென்று விட்டு மீண்டும் சமவெளிப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கோத்தகிரி மார்க்கமாகவே செல்கின்றனர்.

    இப்படி கோத்தகிரி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் மலைப்பாதைகளில் உள்ள வளைவுகளில் வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.

    இதனை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற நோக்கில் நெடுஞ்சா–லைத்துறை சார்பில் கோத்த–கிரியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான மலைப்பா–தையின் வளைவுகளில் உள்ள சாலைகளை அகலப்படுத்தியும், வாகனங்கள் வேகமாக செல்லக்கூடிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணியும் கடந்த 3 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்தது.

    ஆனால் பெரும்பாலான பகுதிகளில் சாலை பணி மற்றும் வேகத்தடை அமைக்கும் பணி 90 சதவிகிதம் முடிந்த பின்னரும் மீதமுள்ள 10 சதவிகித பணிகளை முடிக்காமலேயே உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மேல் தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணி 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமலேயே உள்ளது.

    இதனால் சிறிய வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×