search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை நோய் தடுப்பு பயிற்சி முகாம்
    X

    முகாமில் மண்டல இணை இயக்குனர் சாந்தி பேசிய காட்சி. 

    கால்நடை நோய் தடுப்பு பயிற்சி முகாம்

    • கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக அஸ்காட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு கால்நடை நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தப் பட்டது.
    • கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக அஸ்காட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு கால்நடை நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தப் பட்டது. இதில் சேலம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை தாங்கி கால்நடை பராம ரிப்புத் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட் டங்கள் குறித்து விவசாயி களுக்கு எடுத்துரைத்தார்.

    கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து கால்நடை மருத்துவப் பல்க லைக்கழக உதவி பேராசிரி யர் டாக்டர் கோபி, மாடுகளில் பெரியம்மை நோய் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ஆர்.எஸ்.டி பாபு, கறவை மாடு கள் பராமரிப்பு குறித்து சங்ககிரி உதவி இயக்குனர் டாக்டர் முத்துக்குமார்,

    வெறி நோய் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து டாக்டர் ரகுபதி, செல்லப் பிராணிகள் பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து டாக்டர் அருள் பிரகாஷ்ராஜ் ஆகியோர் எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் கிருபாநாத் மற்றும் டாக்டர் ஆஷா செய்திருந்தனர். கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×