search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே  கரைக்க  வேண்டும்
    X

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  

    களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்

    • களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.
    • பெயிண்ட் பூசப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்ற பின் அந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும். சிலைகளின் உயரம் மற்றும் அவை வைக்கப்பட வேண்டிய மேடை போன்றவற்றின் அளவு அந்த இடத்தின் அமைப்பாளரால் குறிப்பிடப்பட வேண்டும்.

    சிலை வைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விழா ஏற்பாட்டாளர்கள் குழாய் வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை செய்யப்படும் நேரங்களில் முறையே 2 மணிநேரம் மட்டுமே ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.ஒவ்வொரு சிலையையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் நியமனம் செய்வார்கள்.

    ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் செய்ய வேண்டும். அனைத்து ஊர்வலங்களும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மத ரீதியான பகுதிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்து செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வேதிப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டும் பயன்படுத்தக் கூடாது.

    மேலும், பெயிண்ட் பூசப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது. சிலைகள் நிறுவப்படும் பந்தல் கட்டுமானத்தை எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருட்களை கொண்டு செய்வதை தவிர்க்க வேண்டும். வழிபாடு இடத்தின் அருகில் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×