search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை"

    • பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    • பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை தவிர்க்க வேண்டும்.

    சீர்காழி:

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி சீர்காழி அருகே காரைமேடு பகுதியில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 100,க்கும் மேற்பட்டோர் பூம்புகார் கடற்கரையில் தூய்மை பணியை தொடங்கினர்.

    பூம்புகார் பீச் மணல் பரப்பில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், ஐஸ்கிரீம் கப், பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள், போன்றவற்றை ஒவ்வொ ன்றாக எடுத்து சுத்தம் செய்தனர்.

    இதுகுறித்து ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் கூறுகையில்:

    நம் பாரத பிரதமரின் முக்கிய நோக்கம் தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள 14 மையத்தில் சேர்மன் சாமி தலைமையில் அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    காரைமேடு ராஜீவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திலும், அதனைத் தொடர்ந்து பூம்புகார், தொடுவாய் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இம்மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களிலும் அகில இந்திய அளவில் இப்பணி நடைபெற உள்ளது.

    குறிப்பாக கடற்கரை பகுதியில் வீசப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறி கடலில் கலந்து மீன்கள் உண்ணும் பொழுது அந்த மீன்களை சாப்பிடும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    பீச் பகுதியில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

    • புதுக்கோட்டையில் சிறப்பு தூய்மை முகாம்
    • கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாபெரும் சிறப்பு தூய்மை முகாம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குப்பை அதிகமாக சேரும் பகுதிகள் கண்டறியப்பட்டு, பொதுமக்களின் பங்களிப்போடு தூய்மை பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் இந்தத் தூய்மைப் பணியில் ஈடுபடுத்திட நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, சாலையோ ரங்கள், தெருக்கள், நீர்நி லைப் பகுதிகள், பொது நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி பகுதிகள், சுகாதார மையங்கள் அங்கன்வாடிப் பகுதிகள், பேருந்து நிறுத்த ங்கள், சந்தைகள் மற்றும் குப்பைகள் சேரும் பகுதிகள் கண்டறியப்பட்டு இப்ப ணிகள் மேற்கொள்ள ப்பட்டது.

    எனவே பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து த்தர ப்பினரும், தங்களின் சுற்று ப்புறப் பகுதிகளை தூய்மை செய்து, சுற்றுசுழலை தூய்மையாக பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.

    அதனைத்தொடர்ந்து 'தூய்மையே சேவை" எனும் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அரசு அலுவல ர்களும், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவி தப்பிரியா, புதுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், திருமயம் ஒன்றியக்குழுத் தலைவர் அழ.ராமு, வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் நளினி, சங்கர் தாசில்தார் புவியரசன்,

    ஊராட்சிமன்றத் தலைவர் சிக்கந்தர் உள்ளா ட்சி அமைப்புகளின் பிரதி நிதி கள், தூய்மைப் பணி யாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொ ண்டனர்.

    திருமயம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாபெரும் தூய்மையே சேவை என்ற சிறப்பு தூய்மை முகாமை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்ட காட்சி.

    • அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது
    • மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமி சுந்தரி தலைமையில் நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணிகள் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமி சுந்தரி தலைமையில் நடைபெற்றது.

    இதில் நீதிமன்ற ஊழியர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நீதிமன்ற வளாகத்தில் உள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மட்கும் குப்பைகள், மட்கா குப்பைகள் என பிரிக்கப்பட்டது. மேலும் வளாகத்தில் உள்ள தேவையற்ற மரம், செடிகள் அகற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் சரோஜா, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அருள்ராஜ், அரசு வழக்கறிஞர் கண்ணன், வழக்கறிஞர்கள் வினோத்குமார், செந்தில்குமார், பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியினை நகராட்சி தலைவர் அம்பிகா தொடங்கிவைத்தார். ஆணையர் ராமர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு மேற்பார்வையில் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோர் தூய்மை பணியினை மேற்கொண்டனர். மேலும் நகராட்சி அனைத்து வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதேபோல் மத்திய அரசின் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் வாருங்கள் ஒன்றிணைவோம் என்ற நிகழ்ச்சியின் கீழ் நடந்த தூய்மை பணியினை பள்ளி முதல்வர் மேகநாதன் தொடங்கிவைத்தார். பள்ளி வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கேந்திரிய ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் மேற்பார்வையில் மாணவ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் இணைந்து திருக்கோவிலில் அனைத்து சன்னதிகளும் சுத்தப்படுத்தி தண்ணீரால் கழுவி விடப்பட்டு உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாள் நடராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உட்பட பலர்கலந்துகொண்டனர்.

    • மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை நகராட்சி ஆணையர் வெங்கடலெட்சுமணன் தொடங்கி வைத்தார்.

    இதில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன், ஆசிரியர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற கட்டணமில்லா தொலை பேசி எண். 14420 பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இணையலாம்.
    • 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நீர் நிலைகள் பாதுகாப்புக்குழு செயல் திட்டக்கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் பணிகள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்று தல், தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    நீர் நிலைகளில் கொள்ள ளவினை நிலை நிறுத்துதல் போன்ற பணிகளில் தொடர் நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகளை பாதுகாத்தல் பணியில் தொடர்புடைய துறைகள் மட்டுமன்றி, பொது தொண்டு நிறுவ னங்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நீர் நிலைகள் பாதுகாப்பு நடவ டிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வரும் பொது அமைப்புக்கள், விவசாய சங்க கூட்டமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகி யோர்களை ஒருங்கிணைத்து நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதன்படி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில், நீர் நிலைகள் குழு மூலம் மாவட்டத்தில் 2 நீர் நிலைகள் தேர்ந்தெடுக் கப்பட்டு, அதில் மாபெரும் தூய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமி டப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், வருகின்ற செப்டம்பர் 9-ந் தேதியன்று திருப்புவனம் நகரை ஒட்டியுள்ள வைகை நகர் பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் பணியாற்றிட ஆர்வமுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர தன்னார்வ தொண்டு அமைப்புக்களை சார்ந்தோர்கள், மாவட்ட நிர்வாக தொலைபேசி எண்ணான 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இய்குநர் சிவராமன், செயற் பொறியாளர்கள் (சருகனியாறு, மணிமுத்தாறு, பெரியாறு வடிநிலக் கோட்டங்கள்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (நில அளவை), சிவகங்கை வன சரக அலுவலர், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் இதர குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.
    • அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சம்பளம் தரவில்லை என வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இது குறித்து நேற்று அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்களையும், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மகளிர் சுய உதவி குழு மூலம் துப்புரவு பணியை மேற்கொள்ளும் ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் தூய்மை பணியாளர்கள் அனைவருமே சம்பள பாக்கி எதுவும் இல்லை. சம்பள தொகை வங்கிக் கணக்கில் கடந்த 5-ந் தேதி வந்துவிட்டது என தெரிவித்தனர்.

    இதனால் பணியாளர்க ளுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என சம்பள பாக்கி உள்ளதாக வாட்ஸ் அப் குழுவில் வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு விடம் கேட்டபோது:-

    வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சம்பள பாக்கி என வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் . அது முற்றிலும் தவறான தகவல். தூய்மை பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பள பாக்கி நிலுவையில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

    தர்ணா போராட்டம்

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 50-க்கும்

    மேற்பட்ட தூய்மை பணி யாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகை யில், எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.720 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.320 என்ற அடிப்படையிலேயே சம்பளம் வழங்குகின்றனர்.

    மேலும் விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனர்.

    எங்களுக்கு நிர்ண யிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை அளிக்க வேண்டும். பி.எப். பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார்.
    • விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், கலெக்டர் குலோத் துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, பொதுப்பணித்துறையை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் டாக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார். பின்னர், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து சில ஆலோசனை களை வழங்கினார்.

    மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், கூடுதல் டயாலிசிஸ் மையங்களை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அறி வுறுத்தினார். குறிப்பாக, இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார். அதேபோல், அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளும் தினசரி தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர் வழங்கவும், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் 24 மணி நேரமும் ஆஸ்பத்திரியில் இருக்கவும் கண்காணிப் பாளரிடம் அறிவுறுத்தினார்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    தர்ணா

    தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு ரூ.720 என தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இப்போது ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை பிடித்தம் செய்கின்றனர். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்து வமனையில் தூய்மை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காகாபாளையம்:

    சேலம் இடங்கணசாலை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.

    ஒப்பந்த தொழிலாளர்

    இந்த பகுதியில் சேரும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் 83 ஒப்பந்த தொழிலாளர்களும், 4 நிரந்தர தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து, குறிப்பிட்ட ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படுகிறது.

    மறியல்

    இந்த நிலையில், தங்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கேகே நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    இதனை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால், அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு தாதப்பநாயக்கன்பட்டியில் தூய்மைக்கான மக்கள் இயக்க தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் சரசுராம் வரவேற்றார். தூய்மைப் பணி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி செயல்முறை விளக்கத்துடன் எடுத்துக் கூறப்பட்டது. கவுன்சிலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.

    ×