search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "purification"

    • ரூ.15 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பு குடிநீர் அறையை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் கட்டப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்று திறந்து வைத்தார்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. தற்போது கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு கருணாநிதி பெயரை சூட்டுகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலகங்க ளின் சிறப்பு நிதியை அந்தந்த நூலகங்களுக்கு ஒதுக்காமல் மதுரையில் உள்ள கலைஞர் நூல கத்திற்கு பயன்படுத்தி யுள்ளனர். இதனால் மற்ற நூலகங்கள் பாதிக்கப்படும்.

    மதுரையில் நிரந்தரமாக கண்காட்சி கூடம் அமைக்க வேண்டும். திருப்பரங்குன்றம் பஸ்நிலையம் அருகே உள்ள 5 மதுக்கடை களை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் தவிடன், பாலா, நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

    இதில் சிவகங்கை அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, நகர் செயலாளர் என்எம்.ராஜா, சிவகங்கை ஒன்றிய குழுத்துணைத்தலைவர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, வாணியங்குடி கிளைச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், பிச்சை, நாகராஜ், ராஜா, கருணாநிதி, முத்துக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கயல்விழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஜாம்புவானோடை தர்காவின் 721-ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடைபெறுகிறது.
    • தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்தும் துப்புர பணிகளும் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள் பட்ட ஜாம் புவானோடை தர்கா 721 ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடை பெறுவதை முன்னிட்டு தர்கா பகுதியில் துப்புரப் பணிகள் மருந்து அடித்தல் மற்றும் அனைத்துசாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் தலைமையில் சாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

    கந்திரி விழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி சந்தனக்கூடு விழா மற்றும் 8-ந் தேதி அன்று புனித கொடி இறக்கும் விழா ஜாம் புவா னோடை தர்காவில் நடைபெறுவதை ஒட்டி அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும் என பாரம்பரிய தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் கூறினார்.

    • சுத்திகரிக்கப்படும் நீர், குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வடவாற்றில் விடப்படுகிறது.
    • சுத்திகரிப்பு நிலையத்தில் மேலும் தண்ணீரை நல்லமுறையில் சுத்திகரித்து, அதனை குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடை கழிவுநீர் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 4 நீரேற்று நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் சரியாக செயல்படவில்லை.இதனால் கழிவுநீர் அப்படியே ஆற்றில் கலப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்நிலையில் நேற்று சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்ற மேயர், அங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படுகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கு மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனலையும் பார்வையிட்டார். அப்போது செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செய ற்பொறியாளர்கள் ரமேஷ், சுபாஷ்சந்திரபோஸ், தமிழ்நாடு நீர் மேலாண்மை கழக குழு தலைவர் எழிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர், மேயர் சண். ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமுத்திரம் ஏரியில் உள்ள சுத்திகரிப்புநிலையம் முறையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுத்திகரி க்கப்படும் நீர், குழாய்கள் மூலம் கொண்டு செல்ல ப்பட்டு வடவாற்றில் விடப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் மேலும் தண்ணீரை நல்லமுறையில் சுத்திகரித்து, அதனை குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்ப டுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    விஸ்தரிப்பு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில் இணைப்புகள் வழங்கப்படும். மாநகராட்சி சார்பில் சுத்திகரிப்பு நிலையத்தின் 4 ஏக்கர் பரப்பளவில் மின் உற்பத்தி க்காக சோலார் பேனல் அமைக்கப்பட்டு தினமும் 3 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் மாதம் ரூ.12 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

    இந்த மின்சாரம் மின் வாரியத்துக்கு வழங்க ப்பட்டு, அதற்கான கட்ட ணத்தை மாநகராட்சி மின் கட்டணத்தில் கழித்து க்கொள்கிறது. தஞ்சை மாநகரில் குற்றங்க ளை தடுக்கும் வகையில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகி ன்றன. அனைத்து வார்டு களிலும்இந்த கேமராக்கள் பொருத்த ப்பட்டு வருகி ன்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    சபரிமலையில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு விதிமுறைகளை மீறி, கேரளாவைச் சேர்ந்த பெண்கள் சாமி தரிசனம் செய்ததையடுத்து சன்னிதானம் மூடப்பட்டது. #SabarimalaProtest #SabarimalaWomen
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் கடந்த மாதம் 24-ம் தேதி இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி சென்றபோது பக்தர்களின் போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், எப்படியும் சபரிமலையில் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருந்த இரண்டு பெண்களும், மீண்டும் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகினர்.

    இதையடுத்து நேற்று மீண்டும் அவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு  இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். அவர்கள் 18 படி ஏறாமல் பின்வாசல் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

    இதையடுத்து கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது. கோவில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே இருந்த பக்தர்களை போலீசார் வெளியேற்றினர். கோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை செய்த பிறகு நடை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaProtest #SabarimalaWomen
    திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவிலில் வேறு மதத்தினர் நுழைந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். #PadmanabhaswamyTemple #Purification
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவில், புகழ்பெற்ற ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் ஆகும். அங்கு இந்து அல்லாத வேற்று மதத்தினர் வழிபட அனுமதி கிடையாது.

    இந்நிலையில், கடந்த 9-ந் தேதி, ஒரு பக்தர்கள் குழு பத்மநாப சாமி கோவிலுக்கு வந்தது. குழுவில் இடம்பெற்றிருந்த சில பெண்கள், தலையை முக்காடு போட்டு மறைத்து இருந்தனர். பிறகு அவர்கள் உடை மாற்றும் அறையில், பாரம்பரிய இந்து உடைகளை அணிந்து கொண்டு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக, அவர்கள் தலையில் முக்காடுடன் இருந்தபோது, அவர்களை சில பக்தர்கள் படம் பிடித்தனர். அந்த படங்களை தந்திரிகளிடம் காண்பித்து, “அவர்கள் இந்துக்கள்தானா?” என்று சந்தேகம் எழுப்பினர்.

    இதையடுத்து, அப்பெண்கள் வேற்று மதத்தினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். அதன்படி, பரிகார பூஜை நடத்தி முடிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். #PadmanabhaswamyTemple #Purification
    ×