search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspected"

    திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவிலில் வேறு மதத்தினர் நுழைந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். #PadmanabhaswamyTemple #Purification
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவில், புகழ்பெற்ற ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் ஆகும். அங்கு இந்து அல்லாத வேற்று மதத்தினர் வழிபட அனுமதி கிடையாது.

    இந்நிலையில், கடந்த 9-ந் தேதி, ஒரு பக்தர்கள் குழு பத்மநாப சாமி கோவிலுக்கு வந்தது. குழுவில் இடம்பெற்றிருந்த சில பெண்கள், தலையை முக்காடு போட்டு மறைத்து இருந்தனர். பிறகு அவர்கள் உடை மாற்றும் அறையில், பாரம்பரிய இந்து உடைகளை அணிந்து கொண்டு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக, அவர்கள் தலையில் முக்காடுடன் இருந்தபோது, அவர்களை சில பக்தர்கள் படம் பிடித்தனர். அந்த படங்களை தந்திரிகளிடம் காண்பித்து, “அவர்கள் இந்துக்கள்தானா?” என்று சந்தேகம் எழுப்பினர்.

    இதையடுத்து, அப்பெண்கள் வேற்று மதத்தினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். அதன்படி, பரிகார பூஜை நடத்தி முடிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். #PadmanabhaswamyTemple #Purification
    உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர். #UttarPradesh #ISIAgent
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், புலந்த்சாகர் மாவட்டம், குர்ஜா நகரை சேர்ந்தவர் ஜாகித். இவர் அங்கு மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டினார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட போலீசார், ரகசியமாக கண்காணித்தனர். அதில் அவர் பாகிஸ்தான் உளவுப்படை ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    அவரது செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில் பாகிஸ்தானை சேர்ந்த 19 செல்போன் எண்கள் இடம் பெற்றுள்ளன. அவரிடம் காசியாபாத், மீரட் வரைபடங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. 
    ஆஸ்திரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். #MusicFestival #Drug
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இசைத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த இசைத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளை தின்று உற்சாகத்தில் மிதந்தனர்.

    சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் மயங்கி சரிந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    சிட்னி இன்டர்நேஷனல் ரெகாட்டா சென்டரில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இசைத்திருவிழாவில் 120 போதை மாத்திரைகளை கொண்டு வந்து வினியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து நியூசவுத் வேல்ஸ் மாகாண முதல்-மந்திரி கிளாடிஸ் கூறும்போது, “நடந்து உள்ள சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இது ஒரு பயங்கரமான சம்பவம்தான். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.

    இதேபோன்று 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் இசைத்திருவிழாவின்போது போதை மாத்திரை தின்று 2 வாலிபர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

    இசைத்திருவிழாவில் இப்படி போதை மாத்திரைகள் தின்று பாதிப்புக்கு ஆளாகும் சம்பவங்கள் பெருகுவது ஏமாற்றம் அளிக்கிறது; இசைத்திருவிழாவில் போதை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாது என விழா ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் கூறி உள்ளனர்.  #MusicFestival #Drug
    அமெரிக்காவின் நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் கொடூரமான சுறா தாக்கியதில் வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். #SharkAttack #SwimmerDies
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம், நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவரை கொடூரமான சுறா தாக்கியது. அவரது அலறல் கேட்டு அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்து, ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.



    அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்து உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்துக்கு நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் நீச்சல் வீரர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 1936-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த மாகாணத்தில் ஒருவர் சுறா தாக்கி உயிரிழந்து இருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன.

    இருப்பினும் நியூகோம்ப் ஹாலோ கடற்கரையில் கடந்த ஆகஸ்டு மாதம் 61 வயதான நரம்பியல் மருத்துவ நிபுணர் வில்லியம் லிட்டன் சுறா தாக்குதலுக்கு ஆளானார். கால்களில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Facebook #ElectionMeddling
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதியும், இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதியும் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில் இருந்து, அதன் கோடிக்கணக்கான உபயோகிப்பாளர்களின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும், பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    இந்த நிலையில், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வரும் நவம்பர் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் சதி செய்து ‘பேஸ்புக்’கில் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

    அந்த வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளது. அதே நேரத்தில் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டதின் பின்னணியில் எந்தக் குழுவினர் உள்ளனர் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த கணக்குகளை உருவாக்கியவர்கள் மறைந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கணக்குகள் அஜ்ட்லான் வாரியர்ஸ், பிளாக் எலிவேசன், மைன்ட்புல் பீயிங், ரெசிஸ்டர்ஸ் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்டு இருந்தனவாம். ஒரு கணக்கை மட்டுமே 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் தொடர்ந்து வந்து உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது.  #Facebook #ElectionMeddling #tamilnews 
    சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. #HeadPontiff #LakshmivaraTeertha
    மங்களூரு:

    சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், எனவே உரிய விசாரணை நடத்த கோரியும் மடாதிபதியின் தம்பி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிரூரில் அமைந்துள்ளது சிரூர் மடம். பிரசித்திபெற்ற இந்த மடத்தின் 30-வது மடாதிபதியாக இருந்து வந்தவர் லட்சுமிவரதீர்த்த சுவாமி ஆவார். தற்போது 54 வயதான லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை மடத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 5 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

    மரணம் அடைந்த லட்சுமிவரதீர்த்த சுவாமியின் உடல் நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவருடைய சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அவர்கள் மடாதிபதியின் உடலை சிரூர் மடத்தின் வளாகத்திலேயே வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு அஞ்சலி செலுத்தினர். அதைதொடர்ந்து இந்து சம்பிரதாய முறைப்படி அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டது. அதையடுத்து மடத்தின் வளாகத்திலேயே லட்சுமிவரதீர்த்த சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    அவரது உடல் அமர்ந்த கோலத்தில் வைக்கப்பட்டு, தங்க ஆபரணங்கள் அணிவித்து அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம்? என்றும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி மடாதிபதியின் தம்பி லதாவியா ஆச்சார்யா, இரியடுக்கா போலீசில் பரபரப்பு புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகளின் மரணம் குறித்து அவரது வக்கீல் ரவிகிரண் முருடேஷ்வர் கூறுகையில்‘ மடாதிபதியின் மரணத்தில் சந்தேகமும், மர்மமும் உள்ளது. கடந்த மாதம் அவர் எனது அலுவலகத்துக்கு வந்தார். அப்போது புத்திகே மடத்தை மட்டும் விட்டுவிட்டு, கிருஷ்ணா மடம் உள்பட மற்ற 6 மடங்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். அதற்கான பணிகளில் நான் ஈடுபட்டு இருந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்து உள்ளார். அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்‘ என்றார்.

    இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அவினாஷ் ஷெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘மடாதிபதி திடீரென ரத்த வாந்தி எடுத்ததாகவும், மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும் கூறி அவரை எங்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு எங்களால் முடிந்த வரையில் சிறப்பாக சிகிச்சை அளித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்து விட்டார். அவர் சாப்பிட்ட உணவில் விஷம்(நச்சுத்தன்மை) கலக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அவருடைய ரத்த மாதிரியை சேகரித்து சோதனைக்கு அனுப்பி உள்ளோம். இதுபற்றி போலீசுக்கு தெரிவித்து உள்ளோம்’ என்றார்.

    இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி குமாரசாமியும், துணை முதல்-மந்திரி பரமேஸ்வரும் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிரூர் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகள் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு எங்களது இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அதனால் தேவைப்பட்டால் இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். மடாதிபதியின் மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விரைவில் முடிவு தெரியவரும்’ என்றனர்.  #HeadPontiff #LakshmivaraTeertha #tamilnews 
    ×