search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Music Festival"

    • மணச்சநல்லூர் ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவில்
    • புரட்டாசி சிறப்பு இசை விழா


    திருச்சி, 


    திருச்சி சரஸ்வதி வித்யாலயம் மற்றும் ஸ்ரீ ரங்கா நுண்கலை மையம் இணைந்து நடத்திய நாத ஸூதா ரஸம் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு இசை நிகழ்ச்சி திருச்சி மணச்சநல்லூர் வட்டம் அழகிய மணவாளன் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சவுந்தர்ராஜ பெருமாள் கோவில் பஜனை மடத்தில் நடைபெற்றது.


    இதில் ரமா நாராயணன் சிஷ்யை அனன்யா கணீர் குரலில் பாட வயலின் வித்வான் வேங்கட சுப்ரமணியன், மிருதங்க வித்வான் கம்பரசம்பேட்டை சுவாமிநாதன் ஆகியோர் இசை விருந்து அளித்தனர். இந்த புரட்டாசி சிறப்பு இசை நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வெகு நேரம் அமர்ந்து இளம் கலைஞர்களின் இசையை மெய் மறந்து ரசித்தனர். இசை விழா நிறைவு பெற்ற பின்னரே பக்தர்கள் கலைந்து சென்றனர்.


    இந்த தகவலை ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரொட்டேரியன் கே. சீனிவாசன் தெரிவித்தார்.




    • ஆடி வெள்ளி இசை விழா நிகழ்ச்சி நடைறெ உள்ளது.
    • ஸ்ரீரங்கத்தில் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளுபாகல் மடம் ஸ்ரீ ஸ்ரீ விக்ஞான நிதி சபா மந்திர் கல்யாண மண்டபத்தில் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை ஆடி வெள்ளி இசை விழா நடைபெறுகிறது.

    இது தொடர்பாக அறிவாளர் பேரவை மற்றும் ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் கூறியதாவது:-

    ஆடி வெள்ளியில் நடைபெற இருக்கும் இந்த இசை விழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது.இதில் பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி டாக்டர் ஷேக் சின்ன மௌலானாவின் சிஷ்யர்கள் நாதஸ்வர வித்வான்கள் பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா ஷேக் மெகபூப் சுபானி, பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா காலிஷாபீ மெகபூப்,எஸ். பெரோஸ் பாபு மற்றும் தவில் வித்வான்கள் ஸ்ரீரங்கம் பி.எம்.சங்கர், ஸ்ரீரங்கம் வி.ஜி. முருகன் குழுவினர் பங்கேற்கின்றார்கள்.

    மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த இசை விழா இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை திருவாரூர் குஞ்சிதபாதம், நெய்வேலி நாகசுப்பிரமணியன், சேதுராமன், சுரேஷ் வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைக்க உள்ளனர். விழாவில் பக்த கோடிகள், இசை பிரியர்கள் பங்கேற்று ஆனந்தம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். #MusicFestival #Drug
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இசைத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த இசைத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளை தின்று உற்சாகத்தில் மிதந்தனர்.

    சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் மயங்கி சரிந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    சிட்னி இன்டர்நேஷனல் ரெகாட்டா சென்டரில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இசைத்திருவிழாவில் 120 போதை மாத்திரைகளை கொண்டு வந்து வினியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து நியூசவுத் வேல்ஸ் மாகாண முதல்-மந்திரி கிளாடிஸ் கூறும்போது, “நடந்து உள்ள சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இது ஒரு பயங்கரமான சம்பவம்தான். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.

    இதேபோன்று 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் இசைத்திருவிழாவின்போது போதை மாத்திரை தின்று 2 வாலிபர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

    இசைத்திருவிழாவில் இப்படி போதை மாத்திரைகள் தின்று பாதிப்புக்கு ஆளாகும் சம்பவங்கள் பெருகுவது ஏமாற்றம் அளிக்கிறது; இசைத்திருவிழாவில் போதை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாது என விழா ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் கூறி உள்ளனர்.  #MusicFestival #Drug
    ×