search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி வெள்ளி இசை விழா நிகழ்ச்சி
    X

    ஆடி வெள்ளி இசை விழா நிகழ்ச்சி

    • ஆடி வெள்ளி இசை விழா நிகழ்ச்சி நடைறெ உள்ளது.
    • ஸ்ரீரங்கத்தில் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி ஸ்ரீ முளுபாகல் மடம் ஸ்ரீ ஸ்ரீ விக்ஞான நிதி சபா மந்திர் கல்யாண மண்டபத்தில் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாத ஸூதா ரஸம் சங்கீத ஆராதனை ஆடி வெள்ளி இசை விழா நடைபெறுகிறது.

    இது தொடர்பாக அறிவாளர் பேரவை மற்றும் ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் கூறியதாவது:-

    ஆடி வெள்ளியில் நடைபெற இருக்கும் இந்த இசை விழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது.இதில் பத்மஸ்ரீ சங்கீத கலாநிதி டாக்டர் ஷேக் சின்ன மௌலானாவின் சிஷ்யர்கள் நாதஸ்வர வித்வான்கள் பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா ஷேக் மெகபூப் சுபானி, பத்மஸ்ரீ கலைமாமணி ராஜரத்னா காலிஷாபீ மெகபூப்,எஸ். பெரோஸ் பாபு மற்றும் தவில் வித்வான்கள் ஸ்ரீரங்கம் பி.எம்.சங்கர், ஸ்ரீரங்கம் வி.ஜி. முருகன் குழுவினர் பங்கேற்கின்றார்கள்.

    மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த இசை விழா இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை திருவாரூர் குஞ்சிதபாதம், நெய்வேலி நாகசுப்பிரமணியன், சேதுராமன், சுரேஷ் வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைக்க உள்ளனர். விழாவில் பக்த கோடிகள், இசை பிரியர்கள் பங்கேற்று ஆனந்தம் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×