search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் சோலார் மூலம் தினமும் 3 மெகாவாட் மின் உற்பத்தி- மாநகராட்சி மேயர் தகவல்
    X

    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆய்வு செய்தார்.

    தஞ்சையில் சோலார் மூலம் தினமும் 3 மெகாவாட் மின் உற்பத்தி- மாநகராட்சி மேயர் தகவல்

    • சுத்திகரிக்கப்படும் நீர், குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வடவாற்றில் விடப்படுகிறது.
    • சுத்திகரிப்பு நிலையத்தில் மேலும் தண்ணீரை நல்லமுறையில் சுத்திகரித்து, அதனை குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடை கழிவுநீர் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 4 நீரேற்று நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் சரியாக செயல்படவில்லை.இதனால் கழிவுநீர் அப்படியே ஆற்றில் கலப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்நிலையில் நேற்று சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்ற மேயர், அங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படுகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கு மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனலையும் பார்வையிட்டார். அப்போது செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செய ற்பொறியாளர்கள் ரமேஷ், சுபாஷ்சந்திரபோஸ், தமிழ்நாடு நீர் மேலாண்மை கழக குழு தலைவர் எழிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர், மேயர் சண். ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமுத்திரம் ஏரியில் உள்ள சுத்திகரிப்புநிலையம் முறையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுத்திகரி க்கப்படும் நீர், குழாய்கள் மூலம் கொண்டு செல்ல ப்பட்டு வடவாற்றில் விடப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் மேலும் தண்ணீரை நல்லமுறையில் சுத்திகரித்து, அதனை குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்ப டுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    விஸ்தரிப்பு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில் இணைப்புகள் வழங்கப்படும். மாநகராட்சி சார்பில் சுத்திகரிப்பு நிலையத்தின் 4 ஏக்கர் பரப்பளவில் மின் உற்பத்தி க்காக சோலார் பேனல் அமைக்கப்பட்டு தினமும் 3 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் மாதம் ரூ.12 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

    இந்த மின்சாரம் மின் வாரியத்துக்கு வழங்க ப்பட்டு, அதற்கான கட்ட ணத்தை மாநகராட்சி மின் கட்டணத்தில் கழித்து க்கொள்கிறது. தஞ்சை மாநகரில் குற்றங்க ளை தடுக்கும் வகையில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகி ன்றன. அனைத்து வார்டு களிலும்இந்த கேமராக்கள் பொருத்த ப்பட்டு வருகி ன்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×