search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clean"

    • அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது
    • மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமி சுந்தரி தலைமையில் நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணிகள் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமி சுந்தரி தலைமையில் நடைபெற்றது.

    இதில் நீதிமன்ற ஊழியர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நீதிமன்ற வளாகத்தில் உள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மட்கும் குப்பைகள், மட்கா குப்பைகள் என பிரிக்கப்பட்டது. மேலும் வளாகத்தில் உள்ள தேவையற்ற மரம், செடிகள் அகற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் சரோஜா, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அருள்ராஜ், அரசு வழக்கறிஞர் கண்ணன், வழக்கறிஞர்கள் வினோத்குமார், செந்தில்குமார், பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியினை நகராட்சி தலைவர் அம்பிகா தொடங்கிவைத்தார். ஆணையர் ராமர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு மேற்பார்வையில் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோர் தூய்மை பணியினை மேற்கொண்டனர். மேலும் நகராட்சி அனைத்து வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதேபோல் மத்திய அரசின் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் வாருங்கள் ஒன்றிணைவோம் என்ற நிகழ்ச்சியின் கீழ் நடந்த தூய்மை பணியினை பள்ளி முதல்வர் மேகநாதன் தொடங்கிவைத்தார். பள்ளி வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கேந்திரிய ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் மேற்பார்வையில் மாணவ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் இணைந்து திருக்கோவிலில் அனைத்து சன்னதிகளும் சுத்தப்படுத்தி தண்ணீரால் கழுவி விடப்பட்டு உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாள் நடராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உட்பட பலர்கலந்துகொண்டனர்.

    • கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
    • புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின்படி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணை யாளர் (பொறுப்பு) காளி முத்து அறிவுறுத்தலின்படி கொசு ஒழிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலாண்மை

    நெல்லையில் பரவலாக சாரல்மழை பெய்து வருவதால் மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நட ராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்து சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொ ருட்களை அகற்ற வேண்டும் என வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு அறிவுறுத்தி அதனை அகற்றினர்.

    பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.

    மேலும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    மேலும் மேலப்பாளையம் பகுதியில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கப்பட்டது. 

    • பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
    • மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் கனகராணி, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டாக்டர் சுபா வரவேற்றார்.

    இதில் கலந்துகொண்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பல்லடம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும், எதற்கெடுத்தாலும் திருப்பூர், கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், போதுமான மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் கூறினார். பின்னர் அவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பழைய துருப்பிடித்த கட்டில்கள் மற்றும் சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு பயன்பாடற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும் அரசு மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் கட்டாயம் அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும், பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை மற்றும் முன்னெச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும், மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் தலைமை டாக்டர் ராமசாமி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள்,அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
    • பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கவுள்ள நிலையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.

    மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா ஆரம்பமாகிறது.

    இந்த திருவிழாக்களின் போது மானாமதுரை நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்குள் பொழுது போக்கு அம்சங்களாக ராட்டினங்கள், திருவிழாக்கடைகள் அமைக்கப்படும். மானாமதுரை பகுதியை சேர்ந்த மக்கள் திருவிழாவை காண வைகை ஆற்றுக்குள் கூடுவார்கள்.

    திருவிழாவிற்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் நகர் பகுதி வைகை ஆறு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவிழாவின் போது பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    • குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.
    • சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் உதயமார்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிகுளம் 5-வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த தொட்டியில் ஏறி தாஜுதீன் அதன் உள்ளே இறங்கி குடிநீர் தொட்டியின் சுத்தம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.

    இதுகுறித்து நாச்சிகுளம் பகுதி உறுப்பினர்கள் அஜிரன், ராயல்காதர் ஆகியோருடன் ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து தங்கள் வார்டுகளில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் பராமரிக்கப்படாமல் உள்ளது.

    குடிநீர் வினியோக பணியாளர் முறையாக பராமறிப்பு பணிகளை செய்வது கிடையாது. நாச்சிகுளம் பகுதி நீர் தேக்க தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் .

    இதுபோல் ஒவ்வொரு மாதமும் நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

    • தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
    • அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது

    திருப்பூர் : 

    தூய்மை இந்தியா திட்டத்தில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதன்படி பிரத்யேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் சார்ந்து, உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் பொதுக்கழிப்பிடங்களில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் செய்யும் நோக்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி தூய்மை இந்தியா திட்ட இணைய தள செயலியுடன் இணைக்கப்பட்ட க்யூ ஆர் கோடு பொதுக் கழிப்பிடங்களில் முகப்பில் வைக்கப்படும்.

    பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பது, சுகாதாரம் மற்றும் தண்ணீர், விளக்கு வசதி இல்லாமல் இருப்பது போன்ற குறைகளை, தங்கள் செல்போனில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம், தூய்மை இந்தியா திட்ட இணைய செயலியில் அது பதிவாகிவிடும். அந்த தகவல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    அடுத்த 6 மணி நேரத்தில் குறை நிவர்த்தி செய்யப்படும் வகையில் இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் அளவில் இத்திட்டத்தை வேகப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பொதுக் கழிப்பிடத்திலும் தூய்மை இந்தியா திட்டத்துடன் இணைந்த க்யூ ஆர் கோடு வைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    • நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.
    • இந்த பகுதியில் வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பாலத்தின் அருகே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.

    இந்த பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து பஸ்களும் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமான கட்டிடங்கள் இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த பகுதியில் வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பாலத்தின் அருகே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் இந்த கழிப்பறையை தினமும் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அந்த தற்காலிக கழிப்பறையின் நிலை குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்வதற்காக தச்சை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ அங்கு பதிவேடு ஒன்றை வைத்துள்ளார்.

    அதில் கழிப்பறையை பயன்படுத்துபவர்கள் தங்களது கருத்துக்களை எழுதி வைத்துச் செல்கின்றனர். கடந்த 2 நாட்களாக கழிவறைக்கு வந்த பொதுமக்கள் அதனை சுத்தப்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன் அடிப்படையில் இன்று சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கழிப்பறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் தூவினர்.

    • தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் காமராஜர் காலனி உள்பட பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி அடுத்த தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் காமராஜர் காலனி உள்பட பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கூறியதாவது

    காமராஜர் காலனி பாதியில் செப்டிக் டேங்க் அருகே குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தான் பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள 400 குடும்பத்தினர் மிகவும் மோசமான குடிநீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

    எனவே பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.எனவே கலெக்டர் தலையிட்டு உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
    • இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வீரபாண்டி:

    திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடையில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் 2 ஆண்டுகளாக உள்ளது.

    திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பாலத்தின் அடியில் சாக்கடை மண் நிரம்பியுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

    இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி பலவகை வைரஸ் நோய்கள் ஏற்படுகின்றன. மக்கள் பிரதிநிதி வந்த பின்பு இதற்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் இதற்கு இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே எங்களின் நீண்டநாள் கோரிக்கையை திருப்பூர் மேயர் மற்றும் நான்காம் மண்டலத்தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீட்டில் காற்று மாசுவை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். #AirPollution
    நியூயார்க்:

    காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குலோரோபாம், பென்சீன் போன்ற ரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் உருவாகின்றன.

    அவற்றை தடுக்க அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். ‘போதோஸ் ஐவி’ எனப்படும் தாவரம் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதை வீட்டிற்குள் வளர்க்க முடியும். அந்த தாவரங்களின் இலை அதிக அகலம் உடையது. இது ‘பி 450 2இ1 அல்லது 2இ1’ எனப்படும் புரோட்டீனை வெளிப்படுத்துகிறது.

    இதன்மூலம் வீட்டிற்குள் வெளியாகும் நச்சு வாயுக்களை நீக்கி அறையின் சுற்றுச்சூழலை மாசுவில் இருந்து தடுக்கிறது.  #AirPollution



    காரைக்காலில் கழிவு நீர் செல்லும் பாதையில் ஏற்பட்ட அடைப்பை புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் சீர் செய்தார். #MinisterKamalaKannan
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்தன. இதையடுத்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    திருநள்ளாறு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலையோரம் வெட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்களால் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாய்ந்த மரங்களால் திருநள்ளாறில் கழிவு நீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பால் சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது.

    அந்த நேரத்தில் புதுவை கல்வி அமைச்சர் கமலகண்ணன் அந்த வழியாக கட்சியினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்த்தார். உடனே காரில் இருந்து இறங்கிய அவர் தன்னுடன் காரில் வந்த காங்கிரஸ் கட்சியினருடன் கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்திருந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் செல்வம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் அமைச்சர் கமலகண்ணனுடன் சேர்ந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரத்தில் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தது.

    தம்முடன் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அமைச்சர் கமலகண்ணன் நன்றி தெரிவித்தார். ஏற்கனவே கழிவு நீர் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவையில் அமைச்சர் கமலகண்ணன் ஈடுபட்டு வருகிறார். அவரின் இந்த செயல்களை பொதுமக்கள் பாராட்டினர். #MinisterKamalaKannan

    ×