search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி
    X

    நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி

    • அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது
    • மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமி சுந்தரி தலைமையில் நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணிகள் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாமி சுந்தரி தலைமையில் நடைபெற்றது.

    இதில் நீதிமன்ற ஊழியர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நீதிமன்ற வளாகத்தில் உள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மட்கும் குப்பைகள், மட்கா குப்பைகள் என பிரிக்கப்பட்டது. மேலும் வளாகத்தில் உள்ள தேவையற்ற மரம், செடிகள் அகற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் சரோஜா, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அருள்ராஜ், அரசு வழக்கறிஞர் கண்ணன், வழக்கறிஞர்கள் வினோத்குமார், செந்தில்குமார், பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×