search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்
    X

    பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம், பேராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்

    • தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • இதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

    முகாமில் பேரூராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர்செல்வம், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    இதில், பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வாறுதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×