search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், மெகா தூய்மை பணி முகாம்
    X

    சீர்காழியில், மெகா தூய்மை பணி முகாம் நடந்தது.

    சீர்காழியில், மெகா தூய்மை பணி முகாம்

    • கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.
    • கோவிலை சுற்றி 4 வீதிகிலும் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சட்டைநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற மே மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதற்காக கோவில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் நகராட்சி சார்பில் கும்பாபிஷேகத்தின் போது 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வரக்கூடும் என்பதால் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, சுகாதாரம் ஆகியவை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக முதற்கட்டமாக சட்டைநாதர் ஆலயத்தில் நான்கு வீதிகளிலும் மெகா தூய்மை பணி முகாம் துவங்கியது.

    இதில் சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்தினர்.

    மேலும் நகராட்சி சார்பில் கும்பாபிஷேகத்தின் போது நான்கு விதிகளிலும் நகராட்சி தூய்மையான குடிநீர் பக்தர்களுக்கு கிடைக்கவும், நான்கு வீதிகளிலும் தற்காலிக கழிப்பறை அமைக்கவும், நகர் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக நகராட்சி ஆணையர் வாசுதேவன் தெரிவித்தார்.

    Next Story
    ×