search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கல்
    X

    தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கல்

    • தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் குளியல் சோப், சலவை சோப், பற்பசை, பல் துலக்கும் பிரஷ், தலைக்கு எண்ணெய், நாப்கின் அடங்கிய 'ஹெல்த் கிட்' எனப்படும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், தொண்டி பகுதி மேலாண்மைக்குழு உறுப்பினர் கமாலுதீன், கவுன்சிலர் அபுதாகிர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×