search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dredging"

    • அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
    • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கான 5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின்போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன.

    அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக 2 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் ரூ.1 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    • ராமேசுவரத்தில் கோவில் குளம் தூர்வாரும் பணி நடந்தது.
    • இந்த குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முத்துராமலிங்கத்தேவர் நகர் பகுதியில் அங்காளபரமேஸ்வரி கோவில் குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிடும் முன்பு குளங்களை தூர் வரி தண்ணீர் சேமிக்கும் வகையில் குளம் தூர் வாரும் பணியை நகர்மன்ற தலைவர் நாசர்கான் தொடங்கி வைத்தார். இதில் ஆணையர் கண்ணன், துணைத்தலைவர் தட்சிணமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் அர்ச்சணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
    • கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை யொட்டி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து ஜே.சி.பி வாகனங்கள் மூலம் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திட வேண்டும். மேலும் கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகள், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து அந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    கடலூர் வண்டிப் பாளையம், முது நகர், பச்சையாங்குப்பம், நத்தவெளி சாலை, திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணியை மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பாலசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
    • பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரியை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரி விக்கையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை தூர்வாரிடவும், மழைக்கா லத்திற் குள்ளாகவே ஏரிக்கு நீர் வரும் வழித்தட பகுதி களில் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணி களை மேற்கொண்டு ஏரி யில் அதிகப்படியான நீர் நிரம்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும், ஏரியில் பெரியவர்களுக் கான நடைபாதை அமைத் திடவும், சிறியவர்கள் விளை யாடும் வகையில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகர ணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.

    மேலும், சுற்றுலாத்தள மாக உருவாக்கிடும் வகை யில், ஏரியில் படகுகுழாம் அமைப்பதற்கு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட் டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், வருவாய் அலு வலர் தெய்வீகன்.சுற்று லாத்துறை அலுவலர் ஜனார்த்தனன், பொதுப் பணித்துறை உதவி பொறி யாளர் அய்யப்பன், கோலி யனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் வினோத். மற்றும் பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
    • 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை வழக்கமாக பெய்யும். இக்காலக் கட்டத்தில் தமிழகத்துக்கு தேவையான அளவு மழை பொழிவு இருக்கும்.

    பருவ மழை காலம் நெருங்கி வருவதால் கால்வாய்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடி செலவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நீர் வழிகளில் தடையின்றி வெள்ள நீரை கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக நீர் வளத்துறை கிட்டத்தட்ட 30 சதவீத பணிகளை முடித்து உள்ளது. 2 வாரத்தில் பணிகளை முடிக்க இலக்கு வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போரூர், செங்குன்றம், சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணி தொடங்கி நீர்வாழ்களை களை அழிக்கும் பணி நடந்து வருகிறது. 184.45 கி.மீ. தொலைவுக்கு செல்லும் கால்வாய்களில் 77 பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

    அடையாறு ஆற்று முகத் துவாரம் மற்றும் முட்டுக் காடு, புதுப்பட்டினம் கடல் முகத்துவாரங்களில் குவிந்துள்ள மணல் அகற்றப்படுகிறது. கண்டலேறு-பூண்டி வாய்க்கால் முற்றத்தின் அரிக்கப்பட்ட கரைகளை மூடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த் தேக்கத்திற்கு செல்கிறது.

    பருவமழையை கருத்தில் கொண்டு நீர் வழிகளில் உள்ள செடிகள், கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை 137 எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாயில் உள்ள குப்பைகளை 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அதிகாரிகள் அகற்ற வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூவம் பகுதிகளிலும், குறுகிய பகுதிகளிலும் துப்புரவு பணியை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

    விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நுல்லா பகுதியில் சென்னை மாநகராட்சி உதவியுடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 72 லாரிகளில் காய்கறி கழிவுகள் அகற்றப்பட்டன. இந்த பணியை கண்காணிக்க என்ஜினியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட செடிகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.

    அகற்றப்பட்ட செடிகள், மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும் அதேவேளையில் அழிக்கப்பட்ட தாவரங்களை உரமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    • ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.
    • கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகள் மூலம் பூர்த்தி செய்யப் படுகிறது.

    சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையை சமாளிக்கும் வகையில் நீர்நிலை தேக்கத்தை அதிகப்படுத்த நீர்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

    ரெட்டேரியில் தூர்வாரி வண்டல் மண்ணை அகற்றி நீர்தேக்க அளவை 32 மில்லியன் கன அடியில் இருந்து 45.13 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோர முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.43.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரெட்டேரியில் இருந்து சுமார் 7 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட உள்ளது. ஏரிக்கரையில் உள்ள வண்டல் மண்ணை அகற்றிய பிறகு அங்கு பறவைகள் வந்து செல்ல 3 தீவுகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.

    சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர்தேக்கங்களை அதிகரிக்க சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதன்படி ரெட்டேரி, பெரும்பாக்கம், முடிச்சூர், செம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், போரூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 ஏரிகளை ரூ.100 கோடி புணரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இன்னும் சில நாட்களில் டெண்டர் பணிகள் முடி வடைந்து இந்த மாத இறு திக்குள் பணிகள் தொடங் கப்பட உள்ளது. 18 மாதங்க ளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். ஏரிக்கரை பகுதி யில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.

    இப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பூண்டி, புழல் செம்பரம் பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை ஏரிகளில் மொத்தம் 13.213 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். சென்னை யின் குடிநீர் மற்றும் தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 22 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் இது அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் 32 டி.எம்.சி. ஆக அதிகரிக்கும் என்று அரசு கணித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

    • மேட்டூரில் தண்ணீர் திறப்புக்கு முன்பாகவே தூர்வாரும் பணி அதிரடியாக திட்டமிட்டு 100 சதவீதம் கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூரில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லின் தண்ணீரை திறந்து விட்டார் .இதனைத்தொடர்ந்து அனைத்து டெல்டா மாவட்ட பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்க ப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வழி காணப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் டெல்டா பகுதிகளில் பாசனம் பெறும் காட்டுமன்னா ர்கோயில், பரங்கிப்பேட்டை, மேல் புவனகிரி, குமராட்சி, கீரப்பாளையம் ஆகிய வட்டாரங்களில் இத்தொகுப்பு திட்டம் ரூ. 8.41 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த ப்படுகிறது. முன்னதாக கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறுவைத் தொகுப்பு திட்டத்தை கடலூர் மாவட்ட விவசாயிகள் 15 பேருக்கு முதல் கட்டமாக வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    எம்.எல்.ஏ.க்க ள்வேல்முருகன்,சபா ராஜே ந்திரன், ராதாகிருஷ்ணன், சிந்தனை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன் வரவேற்றார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், வேளாண்மை துறை அதிகாரிகள் ரவிச்சந்திரன் ,கென்னடி ஜெபக்குமார், ஜெயக்குமார் ,கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா,துணை மேயர் தாமரைச்செல்வன் ,கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வேளாண்மை த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது-

    மேட்டூர் அணை திட்டமிட்டு படி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்தில் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஏக்கருக்கு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்க ரூ. 75 .95 கோடி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. மேட்டூரில் தண்ணீர் திறப்புக்கு முன்பாகவே தூர்வாரும் பணி அதிரடியாக திட்டமிட்டு 100 சதவீதம் கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது தண்ணீர் தேவையில்லை. ஆனால் 2 மாதங்களுக்கு பின்பு தான் தண்ணீர் தேவை என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிகரித்து 5 லட்சம் ஏக்கர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் இருந்து பாசனத்திற்கு காவேரி தண்ணீர் பெறும் வேலையை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். அதே போன்று கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டிய உரிமை நமக்கு இருக்கிறது. பருவ நிலையில் தற்போதுகர்நாடகாவிலும் மழைப்பொழிவு தொடங்கியுள்ளது. எனவே விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். குருவை சாகுபடி நடவு பணி கிட்டத்தட்ட 3.5 லட்சம் ஏக்கருக்கு மேல் நடந்து கொண்டிருக்கிறது. நடவு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு எந்திர நடவிற்கு வேளாண் துறை சார்பில் உரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. எந்திரம் மூலம் நடவு செய்தால் விதையின் தேவை குறையும். மேலும் செலவும் குறைவு ஏற்படும். அ.தி.மு.க.கட்சி நடத்துவதற்காக எது வேண்டுமானாலும் சொல்லுவார்கள். கடந்த காலங்களில் எங்கு தூர்வாரும் பணி நடைபெற்றது. தண்ணீர் வரும்போது அவசர நிலையில் தூர்வாரினார்கள். ஆனால் தற்போது முன்கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 99 சதவீதம் தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.

    மழையின் காரணமாக வரத்து குறைவால் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளது. டெல்லியிலும் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறி விலைகள் அதிகரித்து உள்ளது. இது சரி செய்யப்படும். சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக அனைத்து காலங்களிலும் காய்கறிகள் விளைவிக்க தொழி ல்நுட்பத்தின் வாயிலாகவும் பருவ நிலைக்கு ஏற்ற வகையிலும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளது குறித்து பல்கலைக்கழக ங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காய்கறிகளை யார் பதுக்கினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இவ்வாறுஅவர் கூறினார்.

    • இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
    • ஓடை முழுவதும் செடிகள் புற்கள் முளைத்து புதர் மண்டியது.

    உடுமலை :

    உடுமலை நகரின் நுழைவுப் பகுதியில் உடுமலை - பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கம்மாள் ஓடை உள்ளது.இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற உபரிநீர் செல்கிறது. இந்த ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரபட்டு அதன் இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஆனால் தூர் வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை முழுமையாக அகற்றவில்லை.இதனால் அவை சரிந்து மீண்டும் ஓடையை ஆக்கிரமித்து கொண்டது. இதன் காரணமாக தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வந்ததுடன் ஓடை முழுவதும் செடிகள் புற்கள் முளைத்து புதர் மண்டியது.இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வந்ததுடன் அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து தங்கம்மாள் ஓடையை தூர்வாரி அதில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன் பேரில் பெயரளவுக்கு மட்டுமே ஓடையில் தேங்கிய மண் அகற்றும் பணி நடைபெற்றது.இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி வருகிறது.மேலும் தங்கம்மாள் ஓடையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட தரைமட்ட பாலமும் சேதம் அடைந்தது. அதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பிறகு தரைமட்ட பாலங்கள் இடித்து அகற்றப்பட்டது.அதில் ஒரு பாலம் அபாயகரமான நிலையில் உள்ளது. பொதுமக்களும் வேறு வழியின்றி அதை கடந்து சென்று வருகின்றனர்.இடித்து அகற்றப்பட்ட பாலங்கள் புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பொதுமக்கள் தங்கம்மாள் ஓடையை கடப்பதற்கு நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    எனவே தங்கம்மாள் ஓடையை முழுமையாக தூர்வாரி சீரான முறையில் கழிவுநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓடையின் குறுக்காக தரைமட்ட பாலங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி விற்று வருகின்றனர்.
    • ஓடை முழுவதும் மண் அடைத்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி பகுதி மக்களுக்கு தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் காய்கறிகளை பயிரிட்டு, அவற்றை அறுவடை செய்து கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி விற்று வருகின்றனர்.

    இவ்வாறு விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் வெறும் மழை நீரை மட்டும் நம்பி இல்லாமல் தங்களது விளைநிலங்களுக்கு அருகே செல்லும் ஓடை நீரையே பெரிதும் நம்பி உள்ளனர்.

    இந்த ஓடைகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தூர்வாரப்படுவது வழக்கம். கோத்தகிரி பகுதியில் உள்ள ஓடைகள் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தூர் வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் அடைத்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது. மேலும் ஓடையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் ஓடை சுருங்கியதுடன், மழை காலங்களில் மழை நீரை சேமித்து வைத்து கோடை காலங்களில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் கோத்தகிரி பகுதியில் உள்ள ஓடைகளை தூர் வாரி, பராமரிப்பு பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் கோத்தகிரி பகுதியில் செல்லும் ஓடைகளை நில அளவை செய்து, ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரோடைகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் காக்கா சோலை பகுதியில் செல்லும் நீரோடையை தூர்வார சுமார் 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 1500 மீட்டர் நீளத்திற்கு தூர் வாரி ஓடை சுத்தம் செய்யப்பட்டது.

    சுமார் 30 அடி அகலமும், சராசரியாக 10 அடி ஆழத்திற்கு ஓடை தூர் வாரும் பணி நேற்று நிறைவடைந்தது.மேலும் ஒரு சில பகுதிகளில் ஓடை பராமரிப்பு திட்டத்தின் கீழ் காங்கிரீட்டாலான தடுப்புச் சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றால் வரும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு, விவசாயம் மேற்கொள்ள தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×