search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Resources Department"

    • மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது

    தஞ்சாவூா்:

    மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு ஆதரவான ஆணையத்தின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ராசி மணல் அணைக்கட்டுமானத்தை தொடங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதியம் தஞ்சை அருங்காட்சியகத்தில் காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து பேரணியாக விவசாய சங்க நிர்வாகிகள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டு மத்திய மற்றும் தமிழக, கர்நாடக அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறே தஞ்சை சாந்த பிள்ளைகேட் நீர்வளத்துறை காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு வந்தடைந்தனர்.

    இதையடுத்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் பேரிக்கார்டு உள்ளிட்ட தடுப்புகள் கொண்டு தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . மேலும் விவசாயிகள் நடுரோட்டில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.


    அப்போது பி. ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    இதனை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி எங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றார்.

    • ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.
    • கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகள் மூலம் பூர்த்தி செய்யப் படுகிறது.

    சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையை சமாளிக்கும் வகையில் நீர்நிலை தேக்கத்தை அதிகப்படுத்த நீர்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

    ரெட்டேரியில் தூர்வாரி வண்டல் மண்ணை அகற்றி நீர்தேக்க அளவை 32 மில்லியன் கன அடியில் இருந்து 45.13 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோர முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.43.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரெட்டேரியில் இருந்து சுமார் 7 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட உள்ளது. ஏரிக்கரையில் உள்ள வண்டல் மண்ணை அகற்றிய பிறகு அங்கு பறவைகள் வந்து செல்ல 3 தீவுகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.

    சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர்தேக்கங்களை அதிகரிக்க சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதன்படி ரெட்டேரி, பெரும்பாக்கம், முடிச்சூர், செம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், போரூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 ஏரிகளை ரூ.100 கோடி புணரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இன்னும் சில நாட்களில் டெண்டர் பணிகள் முடி வடைந்து இந்த மாத இறு திக்குள் பணிகள் தொடங் கப்பட உள்ளது. 18 மாதங்க ளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். ஏரிக்கரை பகுதி யில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.

    இப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பூண்டி, புழல் செம்பரம் பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை ஏரிகளில் மொத்தம் 13.213 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். சென்னை யின் குடிநீர் மற்றும் தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 22 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் இது அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் 32 டி.எம்.சி. ஆக அதிகரிக்கும் என்று அரசு கணித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

    • பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும்.
    • கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகரப் பகுதியில் 2035-ம் ஆண்டுக்குள் தினசரி குடிநீர் தேவை 2,522 மில்லியன் லிட்டராக உயரும் என்று அதிகாரிகள் கணக்கிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் ஆதாரங்களை அதிகரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.

    பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். இதனால் பல லட்சம் கனஅடி உபரி நீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. மேலும் அதிக அளவு உபரி நீர் திறக்கப்படும்போது கரையோர குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பலத்த வெள்ள சேதமும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஆய்வுகள் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீரை சேமித்து வைக்க பூண்டி ஏரியில் இருந்து மேல்நிலை மற்றும் கீழ்நிலை பகுதிகளில் மொத்தம் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள மானாவூர் ரெயில் பாதை மற்றும் காவேரிப்பாக்கம் குளம், பட்டரை பெருமந்தூர் இடையே 2 இடங்களில் தடுப்பு அணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    பூண்டி நீர்த்தேக்கத்தின் கீழ்நிலையில் இருளிப்பட்டு தடுப்பணைக்கும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கும் இடையிலும், பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் அணைக் கட்டுக்கு இடையே 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிக்காக ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    உபரி நீரை தேக்குவதன் மூலம் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதுடன், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல், வட சென்னையில் சடையங் குப்பம்-எடையஞ்சாவடியில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் 600 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்படும் இந்த ஆய்வு இன்னும் 6 மாதங்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் தாலுக்கா, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வள்ளி அணைக்கட்டிற்கு மேல்புறம் மற்றும் கீழ்புறம், பொடங்கம் கிராமம், தடுப்பணைக்கு கீழ்புறம் மற்றும் மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு கீழ்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றும் வரும் தூர்வாரும் பணியினையும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

    • வாய்க்கால் புனரமைப்பு பணிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    அம்மாபேட்டை:

    உலக வங்கி உதவியுடன் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அம்மாபேட்டை அருகே கருங்காடு மேட்டூர் வலது கரை வாய்க்கால் புனரமைப்பு பணி, அந்தியூர், ஆப்பக்கூடல் ஏரி புணரமைப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    அப்போது வலது கரை வாய்க்கால் பாசன விவசாயி கள் கால்வாய் புனரமைப்பு பணிகள் நல்ல முறையில் விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகவும்,

    வாய்க்கா லின் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைத்த தால் கால்வாயி லிருந்து நீர் கசிவால் வேளாண் பயிர்கள் சேதம் ஆவது தடுக்கப்பட்டி ருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடியவர் விவசாயிகளிடம் என்னென்ன பயிர்கள் எந்தெந்த சமயங்களில் பயிர் செய்துவருகிறீர்கள் என்றும், எந்த காலகட்டத்தில் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது,

    எத்தனை மாதங்கள் வரை தண்ணீர் செல்கிறது? திறக்கப்படக்கூடிய தண்ணீர் தங்கு தடை இன்றி அறுவடை சமயம் வரை விவசாயத்திற்கு கிடைக்கி றதா? என கேட்டறிந்தார்.

    இதில் நீர் மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், பவானிசாகர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் அருளழகன், செயற்பொறியாளர் சிவக்கு மார், உதவி செயற்பொ றியாளர் சாமிநாதன், பவானி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியா ளர்கள் கவுதமன், தமிழ்பா ரத், சுலைமான் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×