search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Official Inspection"

    • பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.
    • தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கினார்.

    பரமத்திவேலுார்:

    உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை ஆணையா் உத்தரவின் பேரில், நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவுரையின் பேரில் பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.

    பருவநிலை மாற்றத்தினால் வடிக்கையாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல், தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கி னார்.

    தொடர்ந்து பழைய எண்ணையை மீண்டும் மீண்டும் பொறிப்ப தற்கு பயன்படுத்திய 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மழைக்காலம் முடியும் வரை தொடர் ஆய்வுகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • பள்ளி மராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
    • ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி பூதமங்கலம் கிராமத்தில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கட்டிட மராமத்து பணிகள், புதிய சமையலறை கூடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனை சென்னை ஊரக வளர்ச்சி துணை ஆணையர் அருண் மணி ஆய்வு செய்தார். அப்போது மதுரை கூடுதல் கலெக்டர் சரவணன், மதுரை ஊராட்சி உதவி இயக்குனர் அரவிந்த், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்ன கருப்பன், ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் தாலுக்கா, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வள்ளி அணைக்கட்டிற்கு மேல்புறம் மற்றும் கீழ்புறம், பொடங்கம் கிராமம், தடுப்பணைக்கு கீழ்புறம் மற்றும் மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு கீழ்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றும் வரும் தூர்வாரும் பணியினையும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

    • வாடிப்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக வன சாலைகள் சீர்குலைந்து காணப்படுகின்றன.
    • மாநில வனத்திட்ட அலுவலர் விசுவநாதன் அந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டியில் இருந்து கச்சைகட்டி வழியாக பாலமேடு வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இதில் சாத்தையாறு அணை மேற்கு பகுதியில் உள்ள மலைப்பகுதி யையொட்டி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள சாலை வனத்துறைக்கு சொந்தமானது.

    அந்த சாலை பல ஆண்டுகளாக சீர்குலைந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவது வாடிக்கையாகி வருகிறது. இது சம்பந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் மாநில வனத்திட்ட அலுவலர் விசுவநாதன் அந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாவட்ட வன அலுவலர் குருசாமி தாபாலா, வனச்சரக அலுவலர் வெங்கடேசன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் வீரபத்திரன், யூனியன் கமிஷனர் கதிரவன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.

    மேலும் பல கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட குட்லாடம்பட்டி அருவி 4 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலில் சீர்குலைந்ததில் அருவிக்கு செல்லும் பாதைகள் படிக்கட்டுகள் சேதமடைந்து புதர்மண்டி இருப்பதை பார்க்காமலும், விராலிப்பட்டியில் இருந்து சிறுமலை மீனாட்சிபுரத்திற்கு புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை தொடங்கும் இடம் பற்றி புரிதல் இல்லாமல் அது பற்றி அறிந்தவர்களிடம் கலந்து ஆலோசிக்காமாலும் அதிகாரிகள் வந்து சென்றது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    ×