என் மலர்
நீங்கள் தேடியது "விமான முனையம்"
- 4 வழி மேம்பாலம் மற்றும் முனைய கட்டுமானத்திற்கான நிதியை இந்திய விமான ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.
- அடையாறு ஆற்றின் வழியாக சென்று முனையத்தின் நுழைவு பகுதியை அடையும்.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் செயற்கைக்கோள் முனையம் கட்டுமானம் மற்றும் அதற்கான உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து செயல்படுத்தும் வகையில் இந்திய விமான நிலைய ஆணையம் நீர்வளத் துறையிடம் ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.
புதிய திட்டமான சாட்டிலைட் முனையத்திற்கு இணைப்பு வழங்க கூடுதல் நிலம் வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்ததை தொடர்ந்து தற்போதைய நிலத்திலேயே உயர்மட்ட மேம்பாலம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையம் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை தொடங்கும் இந்த மேம்பாலம் தண்டலம் பகுதியில் உள்ள மாதவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் தொடங்கி அடையாறு ஆற்றின் வழியாக சென்று முனையத்தின் நுழைவு பகுதியை அடையும்.
அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தூண்கள் மழைக்காலங்களில் அல்லது வெள்ள காலத்தில் நீரோட்டத்தை தடுக்குமா என்பதை ஆய்வு செய்யுமாறு மாநில அரசு கேட்டிருந்தது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்வள மையம் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையை தற்போது இந்திய விமான ஆணையம் நீர்வளத் துறையிடம் ஒப்படைத்து உள்ளது.
நீர்வளத்துறை மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன் இந்த 4 வழி மேம்பாலம் மற்றும் முனைய கட்டுமானத்திற்கான நிதியை இந்திய விமான ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.
பரந்தூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர இன்னும் 4, 5 ஆண்டுகள் ஆகும் என்பதால் தற்போதைய சென்னை விமான நிலையத்தில் நெரிசலை குறைக்க இந்த சாட்டிலைட் முனையம் திட்டம் மிகவும் அவசியமானது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவர திட்டமிடப்பட்டது. நீண்ட காலமாக தாமதமடைந்து வந்தது. 2024-ல் இதனை மீண்டும் இந்திய விமான நிலையம் கையில் எடுத்த பிறகு தற்போது வேகம் பெற்றுள்ளது.
- தலைநகர் டாக்காவில் இருந்து பயணிகள் விமானம் இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் உள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் தரையிறங்கியது.
- பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 500 மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்கள் இன்று முதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டது. இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந்தேதி திறந்து வைத்தார்.
சர்வதேச விமானங்கள் இயக்கப்பட தயார் நிலையில் இருந்த இந்த முனையத்தில் கடந்த சில நாட்களாக விமானங்களை நிறுத்தி சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து இன்று பயணிகள் விமானத்தை இறக்கி இன்று முதல் இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வங்காள தேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பயணிகள் விமானம் இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் உள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் தரையிறங்கியது.
இதற்கிடையே அந்த விமானத்தில் பயணம் செய்ய இன்று காலை புதிய விமான முனையத்திற்கு வந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
புதிய முனையத்தில் உள்ள அதிநவீன வசதிகள், மின்விளக்கு அலங்காரம் மற்றும் தமிழக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ண படங்கள் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
இந்த விமானம் மீண்டும் 1.55 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வங்களாதேசம் செல்ல இருக்கிறது. புதிய விமான முனையம் செயல்பாட்டுக்கு வந்ததால் பரிசோதனைகளை முடித்து விட்டு விரைந்து செல்ல முடியும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பயணிகள் விமானம் இயக்கப்படுவது சோதனை முறையில் தான். சில நாட்களுக்கு பிறகு முழு அளவில் விமான சேவை இந்த முனையத்தில் இருந்து செயல்பட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 500 மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்கள் இன்று முதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் தற்போது 1500 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு சோதனைகள் விரைவாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.






