search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்நிலைகளை பாதுகாக்க தூய்மைப்படுத்தும் பணிகள்
    X

     நீர் நிலைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜீத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நீர்நிலைகளை பாதுகாக்க தூய்மைப்படுத்தும் பணிகள்

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இணையலாம்.
    • 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நீர் நிலைகள் பாதுகாப்புக்குழு செயல் திட்டக்கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் பணிகள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்று தல், தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    நீர் நிலைகளில் கொள்ள ளவினை நிலை நிறுத்துதல் போன்ற பணிகளில் தொடர் நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகளை பாதுகாத்தல் பணியில் தொடர்புடைய துறைகள் மட்டுமன்றி, பொது தொண்டு நிறுவ னங்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நீர் நிலைகள் பாதுகாப்பு நடவ டிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வரும் பொது அமைப்புக்கள், விவசாய சங்க கூட்டமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகி யோர்களை ஒருங்கிணைத்து நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதன்படி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில், நீர் நிலைகள் குழு மூலம் மாவட்டத்தில் 2 நீர் நிலைகள் தேர்ந்தெடுக் கப்பட்டு, அதில் மாபெரும் தூய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமி டப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், வருகின்ற செப்டம்பர் 9-ந் தேதியன்று திருப்புவனம் நகரை ஒட்டியுள்ள வைகை நகர் பகுதியில் நீர் நிலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் பணியாற்றிட ஆர்வமுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர தன்னார்வ தொண்டு அமைப்புக்களை சார்ந்தோர்கள், மாவட்ட நிர்வாக தொலைபேசி எண்ணான 04575-240952 என்ற தொலைபேசி எண் மூலம் ெதாடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இய்குநர் சிவராமன், செயற் பொறியாளர்கள் (சருகனியாறு, மணிமுத்தாறு, பெரியாறு வடிநிலக் கோட்டங்கள்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (நில அளவை), சிவகங்கை வன சரக அலுவலர், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் இதர குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×