என் மலர்
நீங்கள் தேடியது "Crocodile"
- அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
- ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
ஒடிசாவில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் ஜஜ்பூர் மாவட்டத்தில் பஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தைச் சேர்ந்த சௌதாமினி என்ற 57 வயது பெண் அப்பகுதியில் உள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது. ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால் ஆற்றில் முதலைகள் இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- இதுபோன்ற புதைபடிவம் இதற்கு முன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆராய்ச்சியாளர்கள் நவீன முதலைகளுடன் வலுவான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பழங்கால உயிரினத்தின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது டைனோசர்களை விட பழமையான 'பைட்டோசர்' என்ற ஊர்வனவற்றிற்கு சொந்தமானது.
ஃபதேகர் பகுதியில் உள்ள மேகா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகே கிராமவாசிகளால் இந்தப் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 21 அன்று அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியை ஆய்வு செய்து, அது ஜுராசிக் காலத்தின் புதைபடிவம் என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
பின்னர், ஜோத்பூரில் உள்ள ஜேஎன்வியூ பூமி அறிவியல் நிறுவனத்தின் டீன் டாக்டர் வி.எஸ். பரிஹார் தலைமையிலான குழு இது குறித்த ஆய்வைத் தொடங்கியது.
இது கிட்டத்தட்ட முழுமையான எலும்புக்கூடு என்பதால் இந்த கண்டுபிடிப்பு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுபோன்ற புதைபடிவம் இதற்கு முன் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் ஜுராசிக் காலத்தின் பாறைகளில் இந்த இனத்தின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.

புதைபடிவத்தைப் பற்றிப் பேசிய டாக்டர் பரிஹார், "இது பைட்டோசார் குடும்பத்தைச் சேர்ந்தது. முதலை போன்ற இந்த ஊர்வன டைனோசர்களுக்கு முன்பு, பிந்தைய ட்ரயாசிக் மற்றும் ஆரம்பகால ஜுராசிக் காலங்களில் வாழ்ந்தன. அவை சுமார் 1.5 முதல் 2 மீட்டர் நீளம் கொண்டவை" என்று கூறினார்.
இந்த உயிரினத்தின் முதுகெலும்பு ஆய்வு செய்யப்பட்டபோது, ஆராய்ச்சியாளர்கள் நவீன முதலைகளுடன் வலுவான ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர்.
இந்த புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் தற்போது வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஜெய்சால்மர் பகுதி பண்டைய உயிரினங்களின் புதைபடிவங்களுக்கு பிரபலமானது. கடந்த காலத்தில், டைனோசர் கால்தடங்கள் தையாட் அருகே காணப்பட்டன. மேலும் 180 மில்லியன் ஆண்டுகள் பழமையான மர புதைபடிவங்கள் அகல் கிராமத்தில் காணப்பட்டன.
- கனமழையால் முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம்.
- அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில், இருவேறு இடங்களில் பெண்கள், முதலைகளுடன் சண்டையிட்டு தங்கள் குழந்தை மற்றும் கணவரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் வீரப்பெண்மணிகள் தங்கள் அன்புக்குரியவர்களை காப்பாற்ற முதலைகளுடன் போராடிய சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு சம்பவம் இங்குள்ள கைரிகாட் பகுதியில் உள்ள தாகியா கிராமத்தில் நடந்தது.
இங்குள்ள காக்ரா ஆற்றின் கால்வாயில் 5 வயது சிறுவன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, அவன் திடீரென அலறும் சத்தம் கேட்டது.
உடனே அருகில் நின்ற அவனது தாய் மாயா, ஓடிச் சென்று பார்த்தபோது ஒரு ராட்சத முதலை சிறுவனை தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே எதையும் யோசிக்காமல் சட்டென்று ஆற்றில் குதித்து மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள் அந்த வீரத்தாய். குழந்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட தாய், சிறுவனை கவ்விக் கொண்டிருந்த முதலையின் தாடையை குறிவைத்து தன்னிடம் இருந்த சிறு கம்பியால் மீண்டும் மீண்டும் தாக்கினார்.
இதை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலை பிடியைத் தளர்த்தி சிறுவனை விடுவித்தது. பின்னர் ஆழமான தண்ணீருக்குள் முதலை ஓடி மறைந்தது.
முதலை தாக்கியதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.சுமார் 7 அடி நீளமுள்ள அந்த முதலையைப் பிடிக்க அந்த கால்வாயில், 3 இடங்களில் வலை விரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல மோதிபூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு பெண்மணி தனது கணவரை முதலையிடம் இருந்து காப்பாற்றி உள்ளார்.
மாதவபூர் கிராமத்தில் சைபு (வயது 45) என்பவர், தனது மனைவி சுர்ஜனா மற்றும் மைத்துனியுடன் ஒரு கால்வாயை கடக்க முயன்றார். அப்போது ஒரு முதலை சைபுவின் காலைக் கடித்து இழுத்தது. இதனால் அவர் கூச்சலிட்டார்.
உடனே சுர்ஜனா தனது புடவையை தண்ணீரில் வீசி, கணவரை பிடித்துக் கொள்ளச் செய்தார். பின்னர் முதலையை தாக்கினார். அப்போது அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து முதலையை தடிகளால் தாக்கினார்கள். இதனால் முதலை சைபுவை விட்டுவிட்டு ஓடியது. காயம் அடைந்த சைபு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம் என்றும், அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
- முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
- கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது
மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும் பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
முதலைக்கு முத்தமிட்ட மேயர், அதனை கையில் ஏந்தி நடனமாடினார். கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது
- மீன் பிடிக்க நீர் இறைத்தபோது வெளியே வந்தது
- தீயணைப்பு வீரர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே உள்ள குருவாடி கிராமத்தில் குளத்தில் மீன் பிடிக்க நீர் இறைத்த போது முதலை சிக்கியது.உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மயக்க ஊசி செலுத்தி முதலையை பிடித்து கட்டப்பட்டுள்ளது.இதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.கொள்ளிம் ஆற்றில் இருந்து குளத்திற்கு முதலை வந்திருக்கலாம் என அந்த பகுதி நம்புகிறார்கள்.
- சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தில் அரசு மருத்துவமனை எதிரில் முதலை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது
- இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தில் அரசு மருத்துவமனை எதிரில் முதலை ஒன்று புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிதம்பரம் சரக வனவர் பிரபு தலைமையில், சிதம்பரம் வனக்காப்பாளர் அன்புமணி, புவனகிரி வனக்காப்பாளர் ஞானசேகர், வனக்காப்பாளர் அமுதபிரியன் மற்றும் ஊழியர்கள் இணைந்து இன்று அதிகாலையில் சிதம்பரம் வட்டம் கவரப்பட்டு கிராமம் அரசு மருத்துவமனை எதிரில் 5 அடி நீளமுள்ள முதலையை பிடித்து வக்கரமாரி நீர் தேக்க குளத்தில் பாதுகாப்பாக விட்டனர்.
- இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
- கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை ஆகும்.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி முட்டைகளில் கரு உருவாகியுள்ளது.
16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி பிறப்பு என்று கூறப்படுகிறது.
இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் பார்த்தீனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படும் கன்னி பிறப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னிப் பிறப்பு மூலஎஎம் முதலை ஒன்று தானே இனப்பெருக்கம் செய்து கருவுற்றுள்ளது.
இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
- ஒரு முதலை அங்கித்தை கடித்து இழுத்து சென்று கொன்றது.
- சிறிது நேரத்திற்கு பிறகு அங்கித்தின் உடலை வெளியே எடுத்தோம்.
பாட்னா:
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள ரகோபூர் தியாரா பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர் அங்கித்குமார்.
இவரது குடும்பத்தினர் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளுக்கு கங்கா நதிநீர் மூலம் பூஜை செய்வதற்காகவும், கங்கை நதியில் நீராடவும் அவர்கள் ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
அங்கு ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது முதலை ஒன்று மாணவர் அங்கித் மீது பாய்ந்து அவரை தாக்கி கடலுக்குள் இழுத்து சென்று கடித்து உயிரோடு சாப்பிட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கடற்கரையையொட்டி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மாணவர் அங்கித்தின் உடல் கரை ஒதுங்கியது.
உடலை பார்த்து அங்கித்தின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் முதலை மீது ஆத்திரம் கொண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கடலில் சுற்றிய முதலையை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அதனை கம்பு மற்றும் குச்சிகளால் சரமாரியாக அடித்து தாக்கினர். இதில் முதலை இறந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சம்பவம் குறித்து அங்கித்தின் தாத்தா சகல்தீப்தாஸ் கூறுகையில், நாங்கள் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி அதற்கு பூஜை செய்வதற்காக கங்கை நதிக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரு முதலை அங்கித்தை கடித்து இழுத்து சென்று கொன்றது. சிறிது நேரத்திற்கு பிறகு அங்கித்தின் உடலை வெளியே எடுத்தோம். ஒரு மணி நேரம் கழித்து முதலையையும் வெளியே இழுத்து அடித்து கொன்றோம் என்றார்.
- நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் வைக்கப்பட்டுள்ளது.
- ஓட்டலில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது.
சீனாவில் பாம்பு கறி, தவளை கறி போன்றவற்றை உணவாக சாப்பிடுவதை கேள்வி பட்டிருக்கிறோம்.
தற்போது தைவானில் ஒரு ஓட்டலில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது. இது தொடர்பாக இனையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் வைக்கப்பட்டுள்ளது.
அந்த உணவு இளம் பெண்ணுக்கு பறிமாற படுகிறது. அதை அந்த பெண் ருசித்து சாப்பிடுவதோடு, இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்கிறார். காட்ஜில்லா ராமென் என பெயரிடப்பட்டுள்ள இந்த உணவு வகையின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,900 ஆகும்.
- முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படுகிறது.
- கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை விழுங்கியது.
கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை ஒன்று விழுங்கிவிட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவை சேர்ந்தவர் 29 வயதான இயேசு ஆல்பர்டோ லோபஸ் ஓர்டிஸ் என்ற கால்பந்து வீரர். தமது ரசிகர்களால் சுச்சோ என அறியப்படும் இவர், துரதிர்ஷ்டவசமாக முதலைக்கு இரையாகியுள்ளார்.
அந்த முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அதிகாரிகளே துணிச்சலுடன் நடவடிக்கை முன்னெடுத்து, சடலத்தை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க, பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.
- சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னர்கோவில் பகுதியை சுற்றி பல்வேறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குளங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் வட்டம் திருநாரையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று குளத்தின் கரை ஓரத்தில் கிடந்தது. இதை அந்த வழியாக கிராமத்திற்குள் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தசெய்தி கிராமத்தில் காட்டுதீ போல பரவி உடனே பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு குளத்தின் அருகே வந்து குளத்தின் ஓரத்தில் கிடந்த முதலையை பார்த்தனர். அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வனசரக அலுவலர் வசந்த், பாஸ்கரன் தலைமையிலான வன ஊழியர்கள் விரைந்தனர். பின்னர் குளத்தின் ஓரத்தில் இருந்த முதலையை லாவகமாக பிடித்து சிதம்பரம் அருகே வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளத்தில் முதலை புகுந்தது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
- சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.
- 9 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.
சமூகவலை தளங்களில் விலங்குகள் தொடர்பான புதுப்புது வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பதை காண முடிகிறது.
அந்த ஆற்றில் மோட்டார் பொருத்திய படகு ஒன்று முதலைகளின் நடுவே வேகமாக செல்வதையும் காண முடிகிறது. பார்ப்பதற்கு திகிலை ஏற்படுத்தும் இந்த வீடியோ சிசிடிவி இடியட்ஸ் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 39 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.
A terrifying boat pass through a river pic.twitter.com/PZVx55wHWM
— CCTV IDIOTS (@cctvidiots) August 16, 2023






