என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "crocodile"
- மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
- தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் விதவிதமாக புதுப்புது வகையில் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பெரும்பாலானவை பாலியல் குற்றங்கள் ஆகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வகையில் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதாவது 52வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இதுவரை 39 நாய்கள் உயிரிழந்துள்ளன. நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஆடம் பிரிட்டோன். இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் இவையனைத்தையும் ஆடம் பிரிட்டோன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/16/3359745-dog1.webp)
விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஆடம். பாரப்பிலியா paraphilia என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் , உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். விலங்குகளை வன்புறவு செய்வதை படம்பிடிக்கும்போது பல்வேறு கோணங்களில் பல சாதனைகளை பயன்படுத்தி படம்பிடித்துள்ளார்.
மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். தனது நாய் துன்புறுத்தப்படுவதை வீடியோவில் பார்த்த முன்னாள் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.
- பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
- கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீராம் நகர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதலை குட்டி ஒன்று புகுந்தது. பிளாட்பாரத்தில் அதிக அளவில் பயணிகள் இல்லை. இதனால் முதலை குட்டி பிளாட்பாரத்தில் ஏறி ஊர்ந்து சென்றது.
இதனைக்கண்ட ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து முதலை குட்டியை லாவகமாக பிடித்தனர்.
இந்த குட்டிக்கு 6 மாதம் வயது என தெரிவித்தனர். முதலை குட்டியை பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இந்த ரெயில் நிலையம் அருகே உள்ள கிராமத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரிய முதலை ஒன்று புகுந்தது. அதனை கிராம மக்கள் கயிறு கட்டி பிடித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். அடுத்தடுத்து முதலைகள் புகுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சாவித்ரி காது கேளாத வாய் பேச முடியாத தனது மகன் வினோத் குறித்து அவரது கணவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
- குழந்தையின் உடலை ஒரு முதலையின் தாடையில் இருந்து தீயணைப்பு துறையினர் மீட்டனர்
கர்நாடகாவில் உத்தர கன்னடா பகுதியில் கணவருடன் ஏற்பட்ட சண்டையில் தனது 6 வயது மகனை முதலைகள் வசிக்கும் கால்வாயில் தூக்கி வீசி கொலை செய்த தாயை போலீஸ் கைது செய்துள்ளனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கால்வாயில் குழந்தையின் உடலை தீவிரமாக தேடினர். அப்போது குழந்தையின் உடலை ஒரு முதலையின் தாடையில் இருந்து அவர்கள் மீட்டனர். அப்போது குழந்தையின் வலது கையை கிட்டத்தட்ட முதலை விழுங்கியிருந்தது.
சாவித்திரியின் கணவர் ரவிகுமார் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் காது கேளாத வாய் பேச முடியாத மூத்த மகன் வினோத் தொடர்பாக இவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தான் தனது மகனை சாவித்திரி கொலை செய்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக சாவித்ரியிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். அப்போது, எனது கணவர் தொடர்ந்து என்னை கேலி செய்தார், காது கேளாத, வாய் பேச முடியாத தனது மகனை கொலை செய்து விடுமாறு என்னிடம் கூறினார். என் மகன் எவ்வளவு சித்திரவதைகளை தான் தங்குவான். இந்நிலையில், கடந்த மே 4 அன்றும் இதே போல் எனக்கும் என் கணவருக்கும் சண்டை நடந்தது. அதனால் என் மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் தூக்கி வீசினேன். என் மகனின் மரணத்துக்கு என் கணவரே காரணம் என்று சாவித்திரி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவரது கணவர் ரவிக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, இருவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
- நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
- நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலையை நாய் குரைத்து விரட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாடாலியா ரோஜாஸ் என்பவரின் பண்ணைவீடு ஒரு குளத்தை ஒட்டி உள்ளது. அதில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று அவரது வீட்டின் முற்றத்திற்கு வந்தது. கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த முதலையை வீட்டில் வளர்த்த நாய் கவனித்தது. உடனே அது பயங்கரமாக குரைக்கத் தொடங்கியதால் முதலை மிரண்டுபோய் குளத்தை நோக்கி ஓடி மறைந்தது. நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
வீட்டில் இருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலானது. பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
"நாய் குரைத்ததால் முதலை ஓடியிருக்கலாம், ஆனால் நாய்க்காகத்தான் முதலை உங்கள் வீட்டிற்கு வந்தது" என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும் பலர் நாயின் தைரியத்தை பாராட்டி பதிவிட்டு இருந்தனர்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.
வன விலங்குகள் வேட்டை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் ரசனையாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் முதலை வேட்டை தொடர்பான வீடியோ இணைய பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ஒரு ஓடையில் பெரிய முதலை மெதுவாக தண்ணீரில் மிதந்து செல்கிறது. அப்போது அங்கு ஒரு சிறிய முதலை செல்வதையும், திடீரென பெரிய முதலை அந்த குட்டி முதலையை பிடித்து உண்ணும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இணையத்தில் வைரலாகி 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், இதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
- முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.
குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.
முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.
- விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
சிறுமுகை அருகே உள்ள மொக்கைமேடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.
அப்போது வாழைமரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று மாறுபட்ட கலரில் தென்பட்டுள்ளது. உற்றுப் பார்த்தபோது அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது. ஆறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் அங்கு இருந்து முதலை வெளியேறி வாழைத்தோட்டத்தில் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.
- பாலத்துக்கு அடியில் முதலை இருப்பதாக ஒரு படம் சமூகவலை தளங்களில் பகிரப்பட்டது.
- கனமழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படு கிறது.
புதுச்சேரி:
புதுவை உப்பனாறு வாய்க்கால் நகரின் முக்கிய பகுதிகளை இணைத்து சென்று உப்பளம் அருகே கடலில் கலக்கிறது.
இந்த உப்பனாறு வாய்க்காலின் மீது பாலம் அமைத்தால் போக்கு வரத்து நெரிச லுக்கு தீர்வாக இருக்கும் என அரசு முடிவு செய்தது.
காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மேல் பாலம் அமைக்க 2008-ல் அரசு திட்ட மிட்டது.
இந்த வாய்க்கால் ஜீவா நகர் பகுதியில் தொடங்கி வாணரப் பேட்டை, வம்பா கீரப்பாளையம் வழியாக கடலுக்கு செல்கிறது. பாலம் அமைக்கும் பணி இதுவரை முழுமைய டைய வில்லை.
இந்த வாய்க்காலில் காமராஜர் சாலை பகுதி யில் பாலம் கட்டுமான பணி பாதியில் நிற்கிறது.
இந்த நிலையில் இன்று காலை காமராஜர் சாலை உப்பனார் கால்வாயை ஒட்டியுள்ள பர்னிச்சர் கடை ஊழியர் ஏழுமலை குப்பை கொட்ட சென்றார். அப்போது வாய்க்காலில் ஒரு முதலை இருப்பதை கண்டார்.
சுமார் 4 அடி நீளம் இருந்த முதலை வாய்க்காலில் கழிவுநீரில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து அவர் கடையில் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக இத்தகவல் அடுத்தடுத்த கடைக்காரர்க ளிடம் பரவியது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடியது.
இந்த நிலையில் ஆள் அரவம் கேட்ட முதலை பாலத்தின் அடியில் சென்று விட்டது. இருப்பினும் முதலையை காண பொது மக்கள் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி பாலத்தில் நிற்க தொடங்கி னர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து பொது மக்களை அங்கிருந்து அகற்றினர். சிலர் முதலை பீதியில் ஓட்டம் பிடித்தனர்.
வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் கால்வாயில் இறங்கி முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பாலத்துக்கு அடியில் முதலை இருப்பதாக ஒரு படம் சமூகவலை தளங்களில் பகிரப்பட்டது. உப்பனாறு வாய்க்காலில் முதலை என்ற தலைப்பில் அந்த படம் வைரலாக பரவியது.
இதனால்தான் அப்பகுதியில் கூட்டம் கூடியது. முதலையை முதலில் பார்த்தவரை தவிர மற்றவர்கள் யாரும் பார்க்கவில்லை. இருப்பி னும் வனத்துறையினர் முதலையை பிடிப்பதற்காக தேடி வருகின்றனர்.
கனமழை பெய்து வருவதால் பல்வேறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இவ்வாறு எங்காவது அணைக்கட்டு பகுதியி லிருந்து இந்த முதலை வந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
- காமராஜ் வீட்டு தோட்டத்தில் சுமார் 9 அடி நீளமுள்ள140 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தது.
- வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் உள்ள காமராஜ் வீட்டு தோட்டத்தில் சுமார் 9 அடி நீளமுள்ள140 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தது. மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் படி சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர்பிரபு,சிதம்பரம் பீட் வன க்காப்பாளர்அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாள ர்ஞா னசேகர்,வனகாப்பாளர் அலமேலு, வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.
- நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தங்கவேல். தொழில் அதிபரான இவர் மறைந்த பழம் பெரும் நடிகர் பாலையாவின் பேரன் ஆவார்.
பா.ஜனதா கட்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் மனைவி மற்றும் 2½ வயது மகனுடன் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நீச்சல் குளம் உள்ளது.
கடந்த சில நாட்களாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீச்சல் குளத்தில் தண்ணீர் அசுத்தம் ஆனது.
இதையடுத்து பாலாஜி தங்கவேல் இன்று காலை நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் கூடையில் அடைத்து வைத்தார். இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து அந்த முதலைகுட்டியை மீட்டு பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர்.
வண்டலூர் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை உணவுக்காக பறவைகள் தூக்கி செல்லும் போது கீழே விழுவது வழக்கம். இதேபோல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இதற்கு முன்பும் தவறி விழுந்த முதலைகள் சிக்கி உள்ளது.
சாலையில் முதலை நடந்து சென்ற சம்பவமும் நடந்து உள்ளது. பறவைகள் தூக்கி சென்ற போது இந்த முதலை குட்டியும் நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
- சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.
- 9 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.
சமூகவலை தளங்களில் விலங்குகள் தொடர்பான புதுப்புது வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பதை காண முடிகிறது.
அந்த ஆற்றில் மோட்டார் பொருத்திய படகு ஒன்று முதலைகளின் நடுவே வேகமாக செல்வதையும் காண முடிகிறது. பார்ப்பதற்கு திகிலை ஏற்படுத்தும் இந்த வீடியோ சிசிடிவி இடியட்ஸ் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 39 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.
A terrifying boat pass through a river pic.twitter.com/PZVx55wHWM
— CCTV IDIOTS (@cctvidiots) August 16, 2023
- அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.
- சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னர்கோவில் பகுதியை சுற்றி பல்வேறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குளங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் வட்டம் திருநாரையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று குளத்தின் கரை ஓரத்தில் கிடந்தது. இதை அந்த வழியாக கிராமத்திற்குள் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தசெய்தி கிராமத்தில் காட்டுதீ போல பரவி உடனே பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு குளத்தின் அருகே வந்து குளத்தின் ஓரத்தில் கிடந்த முதலையை பார்த்தனர். அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த வனசரக அலுவலர் வசந்த், பாஸ்கரன் தலைமையிலான வன ஊழியர்கள் விரைந்தனர். பின்னர் குளத்தின் ஓரத்தில் இருந்த முதலையை லாவகமாக பிடித்து சிதம்பரம் அருகே வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளத்தில் முதலை புகுந்தது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)