search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
    X

    ஜெட்டா. 

    சாத்தான்குளம் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

    • சாத்தான்குளம் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் ஒருவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    சாத்தான்குளம்:

    மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்த ஜெரி. இவரது மகன் ஜெட்டா (வயது 17) இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தந்தை ஜெரி வெளிநாட்டில் வேளை செய்து வருகிறார்.

    ஜெட்டா நேற்று தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக இடைச்சிவிளை அருகே உள்ள தனியார் கல்லூரி நீச்சல் குளத்திற்கு குளிக்கச் சென்றார்.

    நீச்சல் குளத்தில் ஜெட்டா குளிக்கும் பொழுது திடீரென மூழ்கி மூச்சுத்திணறி பலியானார். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×