என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
    X

    நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

    • சிறுவன் கொளத்தூரில் நீச்சல் பயிற்சி பெற்று வந்தான்.
    • சிறுவன் உயிரிழந்ததையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

    சென்னை:

    சென்னையின் புழல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார்-ராணி தம்பிதியின் மகன் கீர்த்தி சபரீஸ்கர். 10 வயதான இவர் சிறப்பு குழந்தையாவார்.

    இந்த சிறுவன் கொளத்தூரில் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். வழக்கம்போல் நீச்சல் குளத்திற்கு பயிற்சிக்கு சென்ற பள்ளி சிறுவன் கீர்த்தி நீரில் மூழ்கி பலியானார்.

    சிறுவன் உயிரிழந்ததையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரை அடுத்து நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அபிலாஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    முறையான பயிற்சி அளிக்காமல் பயிற்சியாளர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததால் சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பலியான சிறுவன் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×