என் மலர்
நீங்கள் தேடியது "Employee Dead"
- ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
- பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் விபத்து.
சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஓட்டலில் லிப்ட் பழுது பார்க்கும்போது ஊழியர் உயிழிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
லிப்டை சரி செய்ய முயன்றபோது, லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து இதுகுறித்து ஆய்வு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேளி சென்ற ரெயில் மணி மீது மோதியது.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் வாகையடி குலாலர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 55). ரெயில்வேயில் ட்ராக் மேனாக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை வீட்டிலிருந்து மணி வேலைக்கு சென்றார். நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து டவுன் ரெயில் நிலையம் நோக்கி அவர் பணியில் ஈடுபட்டார். ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேளி சென்ற ரெயில் மணி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக இருந்தார்.
இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மணி இறந்தது பற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினரும் அங்கு வந்தனர். மணியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மணிக்கு மதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.
- கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. மேலும் வீடு முழுவதும் கியாஸ் புகை பரவி அந்த பகுதியை புகை மண்டலமாக காட்சி அளித்தது.
- கியாஸ் கசிவு ஏற்பட்டு, கியாஸ் நிறுவன கிளர்க் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காரக்கொரை கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி கண்ணம்மாள்(வயது58).
கோபால் அங்குள்ள வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்களது ஊரில் பண்டிகை என்று தெரிகிறது.
இதற்காக கண்ணம்மாள் இன்று வீட்டில் காலையிலேயே சமையலில் ஈடுபட்டார். அப்போது கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எரியவில்லை. இதனால் என்ன கோளாறு என்று பார்த்தார்.
அப்போது கியாஸ் சிலிண்டர் காலியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரை எடுத்து மாட்ட முடிவு செய்தார்.
இதற்காக தனது வீட்டின் அருகே வசித்தும் வரும் கியாஸ் நிறுவனத்தில் கிளர்க்காக பணியாற்றி வரும் நடராஜ்(53) என்பவரை அழைத்தார்.
அவரும் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்று சிலிண்டரை மாற்றி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. மேலும் வீடு முழுவதும் கியாஸ் புகை பரவி அந்த பகுதியை புகை மண்டலமாக காட்சி அளித்தது.
வீட்டிற்குள் கியாஸ் பரவியதும் கோபாலும், கண்ணம்மாளும் வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்று இருந்து கொண்டனர். நடராஜூம் வீட்டின் அறைக்குள் சென்று விட்டார்.
இதற்கிடையே கண்ணம்மாளின் வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஓடி சென்று பார்த்தனர். மேலும் இதுகுறித்து அருவங்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் நடராஜ், கண்ணம்மாள் ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர்.
உடனடியாக போலீசார் அவர்களை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நட்ராஜ் உயிரிழந்தார்.
கண்ணம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கியாஸ் கசிவு ஏற்பட்டு, கியாஸ் நிறுவன கிளர்க் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தூங்கிய போது இறந்து விட்டாரா?
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் பஸ் நிலையம் அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அருகில் உள்ள டீக்கடைக்கு வந்தவர்கள் ஆண் பிணமாக கிடப்பது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் பெயர் கார்த்தி, காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதும் முத்துக்கடை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்தது.
மது போதையில் இங்கு வந்து படுத்து தூங்கிய போது இறந்து விட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






