என் மலர்
நீங்கள் தேடியது "லிஃப்ட்"
- வினீத் பிரசன்னா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தின் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அம்ரிதா ஐயர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் லிஃப்ட். இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இயக்குனரான வினீத் பிரசன்னா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். இதனை போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. இது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 15- வது திரைப்படமாகும். படக்குழு வெளியிட்ட போஸ்டரில் முகத்தில் காயங்களுடன் கையில் ஆயுதத்துடன் இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. இப்படத்தின் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. பலதரப்பட்ட மக்களால் திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து டீசல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
- பிரியங்கா சோப்ரா கால் இடறி விழ முற்பட்டார்.
- சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.
நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது, லிஃப்டில் படம் படிக்கப்பட்டுள்ளது.
பிறகு, பிரியங்கா சோப்ரா லிஃப்டில் இருந்து வெளியில் வரும்போது அவரது குதிகால் லிஃப்டில் சிக்கிக் கொண்டது.
இதனால் பிரியங்கா சோப்ரா கால் இடறி விழ முற்பட்டார். இருப்பினும், அவர் தாமாக நிலைக்கு வந்தார் இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது. அதில், பிரியங்கா சோப்ராவின் கால் செருப்பு லிஃப்டில் சிக்கியது. பிறகு, அவர் செருப்பை லாவகமாக எடுத்து, தனது போட்டோஷூட்டை தொடரும் காட்சி பதிவாகியுள்ளது.
- நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் சிறுவன் கெஞ்சுகிறான்.
- இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நாய்க்கு பயந்து ஓடியதால், 8 வயது குழந்தையை லிஃப்டில் இருந்து வெளியே இழுத்து பெண் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறுவன் லிஃப்ட் உள்ளே நின்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் தனது செல்ல நாயுடன் உள்ளே வருகிறார். அப்போது நாயைப் பார்த்து பயமடைந்த சிறுவன் நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் கெஞ்சுகிறான்.
இதனால் கோபமடைந்த அப்பெண், சிறுவனை லிப்டிலிருந்து வெளியே இழுத்து அடித்தார். இதனையடுத்து, அந்த சிறுவன் மீண்டும் லிப்டிற்குள் நுழைந்து அழுகிறான்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், அப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.






