search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free bus"

    • வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும்.
    • மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளை திருப்பதி அடுத்த கூடூரில் கொண்டாடினார்.

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம் அமல்படுத்தப்படும்.

    தகுதியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் மாதந்தோறும் முதல் தேதியில் ரூ.4 ஆயிரம் வீட்டிலேயே நேரடியாக வழங்கப்படும். மகா சக்தி திட்டத்தின் மூலம் பெண்களை நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றப்படுவார்கள். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் ஏமாற்றிவிட்டார்.

    வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும். அப்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    தனது ஆட்சியில் மஞ்சள், குங்குமம் திட்டத்தில் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் பெண் ஒருவர்தான் நிதி அமைச்சராக இருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்கள் தான் நிதி அமைச்சர்.

    ஏழைகள் மற்றும் தெலுங்கு சமூகத்தின் மேம்பாட்டிற்காக எப்போதும் தனது நேரத்தை செலவிடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 90 லட்சம் குடும்பங்களுக்கு ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
    • அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும்

    தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

    அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்றும், மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மொத்தம் 40 லட்சம் குடும்பங்கள் இதில் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.

    தெலுங்கானாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை வழங்கும் திட்டத்தையும், ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தையும் டிசம்பர் 9-ஆம் தேதி காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
    • திட்டம் மிகவும் முற்போக்கான எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    2021 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, தமிழ்நாடு அரசு பெண்களுக்கான "கட்டணமில்லா அரசுபேருந்து" திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 2021-இல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டமானது பாராட்டுகளையும் விமர்சனங்களையும் சமமாக பெற்றுள்ளது. பெண்கள் அதை ஏற்றுக்கொண்டனர், வல்லுநர்கள் அதைப் பாராட்டினர், ஆனால் விமர்சனர்களோ பெண்களுக்கான இந்த 'இலவசம்' கடினமாக உழைக்கும் ஆண்களால் மட்டுமே சாத்தியமானது, இத்திட்டம் இயல்பாகவே நியாயமற்றது, பாரபட்சமானது, பெண்கள் இந்த திட்டத்தை உபயோகமில்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்று குறை கூறினர். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG)பல ஆண்டுகளாக நிலையான போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில், திட்டத்தின் தாக்கம் மற்றும் நிலையான பொது போக்குவரத்திற்கான அணுகலை இது எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்து உள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் பயனடைந்த 3000 பெண்களை சிஏஜி நேர்காணல் செய்தது. தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய ஆறு நகரங்களில் இருந்து பல்வேறு வயது மற்றும் சமூக-பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த பெண்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.

    இந்த ஆய்வின் மூலம், ஆறு நகரங்களிலும் கண்டறியப்பட்டவை:-

    ● இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர். இப்பெண்கள் ஏற்கனவே பேருந்து சேவையை வழக்கமாகப் பயன்படுத்திய நிலையில், இத்திட்டத்தின் விளைவாக ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் போன்ற பிற போக்குவரத்து வகைகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    ● இந்த ஆய்வில், பெண்கள் ஒரு மாதத்தில் சுமார் 800 ரூபாய் சேமிப்பதால், அந்தப் பணம் வீட்டுத் தேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்குச் செலவழித்து, குடும்பம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சிறந்த பலன்களை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ● ஆய்வில் இருந்து மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தை அணுகுவதும், பொது இடங்களில் காணப்படுவதும், இது பாலின நிலைப்பாடுகள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு தொடர்புடைய தடைகளை உடைக்க உதவியது என்பது தெரியவந்துள்ளது.

    பிப்ரவரி 20 ஆம் தேதி நடந்த நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், I.A.S இந்த அறிக்கையை வெளியிட்டார்.

    இந்த ஆய்வை வரவேற்ற டாக்டர். ஆல்பி ஜான், "இந்தத் திட்டம் பெண்களுக்குச் சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது, ஏனெனில் அவர்களில் பலர் சொந்த வாகனங்களை வைத்திருக்கவில்லை. அதிகமான பேருந்துகளின் தேவையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கு இத்தேவையை பூர்த்தி செய்ய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது" என்றார்.

    சிஏஜியின் மூத்த ஆராய்ச்சியாளர் சுமனா நாராயணன், பெண்களுக்கு மட்டுமின்றி அவர்களின் முழு குடும்பத்திற்கும் இந்தத் திட்டத்தின் பொருளாதார நன்மைகளை எடுத்துரைத்தார். "இந்தத் திட்டம் பெண்களுக்கு சராசரியாக மாதம் 800 ரூபாய் சேமிக்க அனுமதித்துள்ளது. மேலும் அவர்கள் இந்த சேமிப்பை தங்கள் குடும்ப ஆரோக்கியம், கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்காக மறு முதலீடு செய்கிறார்கள். இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் நீண்டகால நன்மைகளை அளிக்கிறது, "என்று அவர் கூறினார். "கட்டணமில்லா பொது போக்குவரத்து திட்டமானது வரி செலுத்துவோரின் பணத்தால் மட்டுமே கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் இலவச டிக்கெட்டுகள் வழங்குவது சாத்தியம் என்று கருதாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பையும், மேலும் இந்தத் திட்டம் மூலம் சமூகத்தில் அனைத்து தரப்பினரின் உள்ளடக்கத்திற்கு அனுமதிக்கிறது."

    இந்தத் திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டபோது பேசப்பட்ட சில எதிர்மறைக் கருத்துக்களை சுமனா எடுத்துரைத்தார். "இந்தத் திட்டம் பெண்களை நோக்கமின்றி வீட்டை விட்டு வெளியேறவும், ஊர் சுத்தவும் ஊக்குவிக்கிறது என்று பொதுக் கருத்து உள்ளது. பெண்கள் இப்போது பொழுதுபோக்கிற்காகவும் தனிப்பட்ட நேரத்திற்காகவும் கோவில்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். பெண்களுக்கும் அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு சில 'மீ டைம்' தேவை, இது ஒரு நேர்மறையாக பார்க்கப்பட வேண்டும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

    பசுமை போக்குவரத்து தீர்வுகளை மையமாக கொண்டு செயல்படும் ஆராய்ச்சி நிறுவனமான அர்பன் ஒர்க்ஸ் நிறுவனர் ஸ்ரேயா கடப்பள்ளி, அறிக்கை வெளியீட்டு குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.

    "இந்தியாவில், ஆண்களில் 10ல் 8 பேர் வெளியே பணிபுரியும் பொழுது, பெண்களில் 10ல் 2 பேர் மட்டுமே வீட்டிற்கு வெளியே வேலை செய்கிறார்கள். இது போன்ற திட்டங்கள் தொழிலாளர் பணிக்குள் நுழைவதில் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை குறைக்கிறது," என்றார். "நீண்ட காலத்தில், பேருந்துகள் அனைவருக்கும் விருப்பமான போக்குவரத்து முறையாக இருக்க வேண்டும். அங்கு செல்வதற்கு, குடிமக்களுக்கு பேருந்து நிறுத்தங்களுக்கு எளிதான அணுகல் மற்றும் குறைந்த காத்திருப்பு நேரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

    "இந்த திட்டம் மிகவும் முற்போக்கான எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேம்பட்ட நகரங்களுக்கு இணையாக பொதுப் போக்குவரத்தின் தரம் மற்றும் பேருந்து சேவைகளின் எண்ணிக்கை தன்மையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம்" என்று UNDPன் தலைமை மேம்பாட்டு இலக்கு நிபுணர் ராஜ் செருபால் கூறினார்.

    2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கொள்கையானது, கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் நோக்கம் பெண்களை சமூகத்தில் அதிக அளவில் செயல்படுவதை ஊக்குவிப்பதாகும் என்பதை வலியுறுத்துகிறது. பொது இடங்களில் பெண்களின் வெளிக்கொணர்தல் இந்தியாவில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால், அது பொது இடங்களில் பெண்களின் இருப்பை அதிகரிக்க வழிவகுக்கும், இதன் விளைவாக, மக்கள்தொகையில் பாதி பேருக்கு அதிகத் தெரிவுநிலை ஏற்படும்.

    சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) என்பது 38 வருடங்கள் பழமையான ஒரு இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும், இது குடிமக்கள் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்காக செயல்படுகிறது. அதன் முயற்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சென்னையின் நுகர்வோர் மற்றும் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இது முதன்மையாக செயல்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.


    பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    • செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    இதை தொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இந்நிலையில், தெலுங்கானாவில் பெண்கள், அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு "6 உத்தரவாதங்கள் - மகாலட்சுமி திட்டத்தின்" கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

    டிசம்பர் 8 தேதியிட்ட அரசு ஆணையின்படி, இத்திட்டம் டிசம்பர் 9ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது மற்றும் தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளின் கீழ் பயணிக்க இது பொருந்தும், முற்றிலும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனர்களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார். அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி, இந்த இரண்டு வாக்குறுதிகளும் டிசம்பர் 9ம் தேதி (நாளை) அமலுக்கு வருகிறது.

    • 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கட்டணமில்லா இலவச பேருந்தில் மகளிர் பயணம் செய்து வருகிறார்கள்.
    • மூன்றாம் பாலினத்தவர்கள் 60 ஆயிரத்து 848 பேர் பயணம் செய்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி மாவட்டத்தில் திருப்பூர் பணிமனை-1, பணிமனை-2, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை பணிமனைகளில் மொத்தம் 254 நகர பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த மாதம் வரை மாவட்டத்தில் 12 கோடியே 34 லட்சத்து 16 ஆயிரத்து 20 மகளிரும், 7 லட்சத்து 25 ஆயிரத்து 671 மாற்றுத்திறனாளிகளும், 43 ஆயிரத்து 591 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள், 60 ஆயிரத்து 848 பேர்பயணம் செய்துள்ளனர்.மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12 கோடியே 42 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பஸ் பயணத்தால் மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • இலவச பஸ் பயணம் மூலம் 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
    • மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் பேசினார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை புதூர் பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி ஓய்வறையை திறந்து வைத்தார். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பலன்கள் மற்றும் விபத்தில்லாமல் பணியாற்றிய டிரைவர், கண்டக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1972-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிகளவில் அரசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பஸ் வசதி இல்லாத பகுதிக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் விடப்பட்டன.

    தமிழகத்தில் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் இதுவரை 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ள னர். கட்டணமில்லா பஸ்சில் சராசரியாக ஒரு நாளைக்கு 5 லட்சத்து 56 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.

    மதுரைக்கு 251 மாசு இல்லாத பஸ்கள் மற்றும் 100 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்ய திட்டம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது.
    • பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, திருப்பதி மலையில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு பேருந்தில் தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிகள் நேற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்
    • பஸ்சின் முகப்பில் இளஞ்சிவப்பு வண்ணமிட்டு சுலபமாக அடையாளம் கண ஏற்பாடு

    ராணிப்பேட்டை:

    தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2.31 கோடி மகளிர்கள் பயனடைந்துள்ளதாக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சோளிங்கர் பணிமனையில் 14 டவுன் பஸ்களும், ஆற்காடு பணிமனையில் 50 டவுன் பஸ்களும் என மொத்தமாக 64 டவுன் பஸ்களில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் என பிரத்யேகமான ஒட்டுவில்லைகளையும் ஒட்டி பஸ்சின் முகப்பில் இளஞ்சிவப்பு வண்ணமிட்டும் பெண்கள் சுலபமாக பஸ்களை அடையாளம் கண்டு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

    இத்திட்டம் மூலம் தினசரி 48,312 பெண்களும், கடந்த 08.05.2021 முதல் தற்பொழுது வரை 2.31 கோடி மகளிர்கள் மற்றும் 26.000 திருநங்கைகள் நகரப் பஸ்களில் இலவசப் பயண சலுகை பெற்றுள்ளனர் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×