என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சபரிமலையில் மண்டல பூஜை, மகர திருவிளக்கு: 2 மாதங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    சபரிமலையில் மண்டல பூஜை, மகர திருவிளக்கு: 2 மாதங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • நிகழாண்டு பக்தா்கள் கூடுதலாக பயணம் செய்வாா்கள் எதிா்பாா்க்கப்படுகிறது.
    • குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பஸ் வசதி செய்து தரப்படும்.

    அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்கு, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தா்கள் சென்று வர ஏதுவாக, முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி முதல் 2026 ஜன.16-ந்தேதி வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூா் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பஸ்கள், குளிா்சாதன பஸ்கள் மற்றும் குளிா் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30-ந்தேதி வரை மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிச.26-ந்தேதி முதல் டிச.29-ந் தேதி வரை இந்த சிறப்புப் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.

    நிகழாண்டு பக்தா்கள் கூடுதலாக பயணம் செய்வாா்கள் எதிா்பாா்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பஸ் வசதி செய்து தரப்படும்.

    60 நாள்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பஸ்களுக்கு இணையதளம் மூலமாக, மற்றும் டி.என்.எஸ்.டி.சி. எனப்படும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி: 9445014452, 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×