என் மலர்
நீங்கள் தேடியது "Half yearly Leave"
- தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.
- இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிச. 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. டிச. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.
அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது.
2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.
இந்நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து நாளை மாணவர்கள் பள்ளிக்கு திரும்ப உள்ளனர்.
அரையாண்டு விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஏற்காடு:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா விடுதிகள் நிரம்பியுள்ளன.
இதற்கிடையே ஏற்காட்டில் பனி மூட்டமும், அடிக்கடி மழைச்சாரலும் பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் உள்ள கடைகளில் விற்பனை களை கட்டுகின்றன.
கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் சொட்டர் அணிந்தபடி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்தது. சுற்றுலா பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடி சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிமுனை, சேர்வராயன் கோவில் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வாகனங்கள் அதிகளவில் வருவதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா விடுதிகள் நிரம்பியுள்ளன.
இதற்கிடையே ஏற்காட்டில் பனி மூட்டமும், அடிக்கடி மழைச்சாரலும் பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் உள்ள கடைகளில் விற்பனை களை கட்டுகின்றன.
கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் சொட்டர் அணிந்தபடி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்தது. சுற்றுலா பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடி சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிமுனை, சேர்வராயன் கோவில் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வாகனங்கள் அதிகளவில் வருவதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்கள் அடிக்கடி ஏற்படுகிறது.






