என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரையாண்டு விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்24 Dec 2018 8:29 AM GMT (Updated: 24 Dec 2018 8:29 AM GMT)
அரையாண்டு விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஏற்காடு:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா விடுதிகள் நிரம்பியுள்ளன.
இதற்கிடையே ஏற்காட்டில் பனி மூட்டமும், அடிக்கடி மழைச்சாரலும் பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் உள்ள கடைகளில் விற்பனை களை கட்டுகின்றன.
கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் சொட்டர் அணிந்தபடி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்தது. சுற்றுலா பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடி சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிமுனை, சேர்வராயன் கோவில் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வாகனங்கள் அதிகளவில் வருவதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா விடுதிகள் நிரம்பியுள்ளன.
இதற்கிடையே ஏற்காட்டில் பனி மூட்டமும், அடிக்கடி மழைச்சாரலும் பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் உள்ள கடைகளில் விற்பனை களை கட்டுகின்றன.
கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் சொட்டர் அணிந்தபடி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்தது. சுற்றுலா பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடி சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிமுனை, சேர்வராயன் கோவில் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வாகனங்கள் அதிகளவில் வருவதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X