என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 98075"

    ஏற்காடு கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்
    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 

    இந்த மலர்க்கண்காட்சியில் மேட்டூர், அணை, வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி உள்ளிட்ட 7 மலர் வடிவமைப்புகள் 5 லட்சம் மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கம் அருகே அனைத்து துறையின் சார்பில் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்குகளையும் மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,  தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா இடங்களில் அணுகு சாலைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், கிளியூர் மலை கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகசப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகள் டென்ட் மூலம் தங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழகத்தில் சூழல் சுற்றுலா, கேரவன் சுற்றுலா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல் எட்டப்படும் என்றார்.  

    இதனையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனைத்து கிராம கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 900 கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் அரசின் செலவில் விளை நிலங்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இலவச போர்வெல், இலவச மின்சாரம், இலவச இடுபொருள்கள் உள்ளிட்டவை மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வேளாண்மை புரட்சி நிகழ்த்தப்படும் என்றார்.

    விழாவில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏற்காடு மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளும்.ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், உள்ளூர் மலைவாழ் மக்களுக்கும்,உள்ளூர் வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார். 

    திறப்புவிழா நிகழ்ச்சியில் அண்ணாபூங்கா ஊழியர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம் போட்டோ எடுத்துக்கொண்ட காட்சி.

    இவ்விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ் ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளர் டி.எம்.செல்வகணபதி. ஏற்காடு ஒன்றிய பொருப்பாளர் தங்கசாமி,ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பாலு, கிளை செயலாளர்கள் ஆட்டோ ராஜா, குணசேகரன்,வைரம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜியகுமார்.மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    ஏற்காடு கோடைவிழா மலர்கண்காட்சியில் 5 லட்சம் பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்பட்டால் இருந்தது. இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி காட்சி படுத்தப்பட்டுள்ளுது. இதற்காக இங்குள்ள கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும் ஏறி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து .விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக சின்-சான் பொம்மை, வள்ளுவர் கோட்டம், போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    சுற்றுலா பயணிகள் அமர 2 குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்கின்றனர்.

    மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கிறார்கள்.கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக இன்றும் நாளையும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரு வழி பாதையாக செய்யப்பட்டுள்ளது. . 4-வது நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
    ஏற்காடு கோடைவிழாவை ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொேரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்படவில்லை.  இந்த ஆண்டு கடந்த 25-ந்  தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து, விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக்க சின்-சான் பொம்மை ,வள்ளுவர் கோட்டம்  போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    சுற்றுலா பயணிகள் அமர இரண்டு குடில்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

    படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர் கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காடு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பபட்டது. இதை சமாளிக்க சேலத்தில் இருந்து ஏற்காடு வரும் வாகனங்கள் திரும்பி செல்ல குப்பனூர் வழியாக திரும்பி விட பட்டனர்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லவும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

    நேற்று குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 6-ம் நாளான இன்று பல்வேறு துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    8 நாள் கொண்டாட்டத்திற்கு பின் ஏற்காடு கோடை விழா இன்றுடன் நிறைவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஏற்காடு:

    ஏற்காட்டில் 45- வது  கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ெதாடர்ச்சியாக 8 நாட்கள் நடத்தப்பட்டது.   முதல் நாளான கடந்த  25-ந் தேதி (புதன்கிழமை)  அன்று கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

    கோடை விழாவின் 7-வது நாளான நேற்று ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெடல் படகு போட்டியும், படகோட்டிகளுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

    போட்டியை நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் ஏற்காடு படகு இல்ல மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 

    8-வது நாளான இன்று (புதன்கிழமை) கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நிறைவடைந்தது. காலை 11 மணிக்கு  விளையாட்டு துறை சார்பாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கலை நிகழ்ச்சி,  பிற்பகலில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக  இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெற்றது.
    விழா நிறைவு நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.   விழாவுக்கு சேலம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.  

    சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், பெரும்பாலானவர்கள் மலர் சிற்பங்கள், பழ உருவங்கள் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.   அதுபோல் மலர்கள் முன்பாக தங்கள் பெற்றோரை மழலைகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பய ணிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஏரியில் படகு சவாரி  செய்து மகிழ்ந்ததோடு, மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். காய்கறிகளால் ஆன காட்டெருமை, விமானம்,  அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீருற்று, மலர்களால் வடிவமைக்கப்பட்ட   மேட்டூர் அணை, பெண்களுக்கான இலவச பஸ், மாட்டு வண்டி, சின்-சான் பொம்மை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    இதேபோல் ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கோடை விழா- மலர் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு துறைகள் சார்பில் பல்வேறு கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

    இதில் சிறந்த கண்காட்சி அரங்கங்கள் எவை? என தேர்வு செய்யப்பட்டு, அந்த அரங்கங்களுக்கு சேலம் மாவட்ட  கலெக்டர் கார்மேகம்  சான்றிதழ்கள் வழங்கினார்.  மேலும் அரங்கங்களை சிறப்பாக அமைத்த  துறை அலுவலர்களையும் பாராட்டினார்.

    விழா நிறைவு நாளான இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட சிறப்பு பஸ்கள் அதிக எண்ணிக்கையில்  விடப்பட்டன. அதுபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், ஏற்காடு அடிவா ரத்திற்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையினால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. பின்பு அது சரிசெய்யப்பட்டு 4 நாட்களுக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

    கனரக வாகனங்கள் மற்றொரு மலைப்பாதையான குப்பனூர் பாதையில் சென்று வந்தன. கடந்த வாரம் இந்த பாதையிலும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த வழியாகவும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏற்காட்டில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. மேலும் கொண்டயனூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு மரம் வேரோடு சாய்ந்தது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கொண்டயனூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மஞ்சகுட்டை, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதைப்போல் ஏற்காடு மலைப்பகுதியில் மின்கம்பிகள் மீது மரம் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரம் ஏற்காடு முழுவதும் இருளில் மூழ்கியது. ஏற்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு ஏற்காடு-சேலம் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே ராட்சத பாறைகள் உருண்டு வந்து விழுந்தன. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் ராஜசேகர் மற்றும் சாலை ஆய்வாளர் ரமேஷ் உள்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பொக்லைன் எந்திரத்தை கொண்டு, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கியது. எனினும் ராட்சத பாறைகளை உடனடியாக அகற்ற முடியவில்லை. இதையடுத்து இன்று காலை கம்பரசர் கொண்டு கற்கள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டன.

    வழக்கமாக ஏற்காட்டுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். வெள்ளிக்கிழமை மாலையே ஏற்காட்டில் குவியும் மக்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு தங்கி இருந்து இயற்கையை ரசிப்பார்கள்.

    தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் ஏற்காட்டில் உள்ள கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தொடர் மழையால் ஏற்காட்டில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
    ஏற்காட்டில் அரசு பஸ் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் சேலம் சின்னத்திருப்பதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்காடு காவல் நிலையத்திற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

    இந்நிலையில் இவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆட்கள் இல்லாததால் இன்று காலை மீண்டும் அவர் பணிக்காக ஏற்காடு நோக்கி அவசரமாக வந்து கொண்டிருந்தார்.

    அவர் ஏற்காடு மலை பாதை 20-வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அரையாண்டு விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    ஏற்காடு:

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளா, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா விடுதிகள் நிரம்பியுள்ளன.

    இதற்கிடையே ஏற்காட்டில் பனி மூட்டமும், அடிக்கடி மழைச்சாரலும் பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா தலங்களில் உள்ள கடைகளில் விற்பனை களை கட்டுகின்றன.

    கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் சொட்டர் அணிந்தபடி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்தது. சுற்றுலா பகுதியான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடி சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சிமுனை, சேர்வராயன் கோவில் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வாகனங்கள் அதிகளவில் வருவதால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்கள் அடிக்கடி ஏற்படுகிறது.

    ஏற்காட்டிற்கு காதலனுடன் வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஏற்காடு:

    ஈரோட்டை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது32). திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலியுடன் கடந்த 26-ந் தேதி ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தார்.

    இருவரும் ஏற்காட்டை சுற்றி பார்த்த பின்னர் அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். அப்போது வாசுதேவன் மது அருந்தினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த காதலி தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டு அண்ணா பூங்கா பகுதிக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து வாசுதேவன் வந்தார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜெரினாக்காட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயகுமார் (37), மற்றும் கார் ஓட்டுனர் ஆரோக்கியதாஸ் (32) ஆகிய இருவரும் வாசுதேவனின் காதலியிடம் என்ன தகராறு என நைசாக பேச்சு கொடுத்தனர்.

    அவர் பேசிக்கொண்டிக்கும் போது வாசுதேவன் அங்கு வந்தார். 2 பேரையும் போலீஸ் நிலையத்தில் கொண்டு விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிய அவர்கள் வாசுதேவன் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து விட்டு அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளினர்.

    பின்னர் டிரைவர்கள் 2 பேரும் சேர்ந்து வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றனர், ஆரோக்கியதாஸ் பாதி வழியில் இறங்கிவிட்டார்.

    விஜயகுமார் ஏற்காட்டில் தனக்கு தெரிந்த தங்கும் விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். பின்னர் நேற்று அதிகாலை 1.45 க்கு அந்த பெண்ணை சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு ஏற்காடு வந்தார்.

    இது குறித்து வாசுதேவன் ஏற்காடு போலீஸ் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் காவல் புகார் கொடுத்தனர்.

    ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஒண்டிக்கடை பகுதியில் இருந்த விஜயகுமார் மற்றும் ஆரோக்கியதாஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரனை நடத்தினர். மேலும் சேலம் ரூரல் டி.எஸ்.பி. சூர்ய நாரயணன் ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு வந்து அவர்களிடம் விசாரனை நடத்தினார்.

    விசாரணை முடிவில் விஜயகுமார் மீது கற்பழிப்பு, வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும், ஆரோக்கியதாஸ் மீது வழிப்பறி, மிரட்டல் ஆகிய பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் இன்று சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.  #Tamilnews
    ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி, சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி நாளை நடைபெறுகிறது.
     ஏற்காடு:

    ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் பிரதான நிகழ்வாகவும், சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் படகு போட்டி நடைபெறுகிறது. ஏற்காடு படகு இல்ல ஏரியில் சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி நாளை நடைபெறுகிறது. வருடந்தோறும் இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுவர்.

    மேலும் நாளை மறுநாள் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்ல பிராணிகள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது செல்ல பிராணிகளை பலர் அழைத்து வருவர்.

    மேலும் பல்வேறு வகை நாய்கள் காட்சியில் இருக்கும் என்பதால், இந்த கண்காட்சியை காணவும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
    ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #TNCM #EdappadiPalanisamy
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு 43-வது கோடை விழா - மலர் கண்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    ஏற்காடு கோடை விழா மற்றும் ஏற்காடு அண்ணா பூங்காவில் தோட்டக்கலைத் துறை மூலம் 2½ லட்சம் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ள மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஏற்காடு கலையரங்கில் நடந்த விழாவில் ரூ.17.5 கோடி மதிப்பீட்டில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.4.5 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.5.12 கோடியில் 2,170 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார்.

    முன்னதாக, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    சுற்றுலா துறை, கலை பண்பாட்டு துறை சார்பில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி, சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்களுக்கு படகு போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    ஏற்காடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளதால் பிளாஸ்டிக் அல்லாத ஏற்காடு கோடை விழாவாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும், கோடை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காட்டில் இன்று காலை முதலே அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வாராயன் கோவில், பக்கோடா பயிண்ட், மான் பூங்கா உள்பட பல பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    ஏற்காட்டியில் லேசான குளிருடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இந்தாண்டு கோடை விழா முன் கூட்டியே தொடங்கி உள்ளதால் மேலும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ரோகிணி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #TNCM #EdappadiPalanisamy
    ×