என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்காட்டில் அரசு பஸ் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
Byமாலை மலர்27 March 2019 10:03 AM GMT (Updated: 27 March 2019 10:03 AM GMT)
ஏற்காட்டில் அரசு பஸ் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் சேலம் சின்னத்திருப்பதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்காடு காவல் நிலையத்திற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆட்கள் இல்லாததால் இன்று காலை மீண்டும் அவர் பணிக்காக ஏற்காடு நோக்கி அவசரமாக வந்து கொண்டிருந்தார்.
அவர் ஏற்காடு மலை பாதை 20-வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X