என் மலர்
நீங்கள் தேடியது "கோடைவிழா"
- கலை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது.
- பயிற்சி வகுப்பு மே 1- 25ம் தேதி சதுரங்கம் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை).
பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பில் கோடை கொண்டாட்டம் 2025 நடைபெறுகிறது.
அதன்படி, அண்ணா நூற்றாண்டு நூலக குழந்தைகள் பிரிவில் விடுமுறைக்கால திருவிழா நடைபெறுகிறது. நாளை முதல் தொடங்கும் இத்திருவிழாவில் 4 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, மே-1 நாளை சென்னை ஸ்டோரி டெல்லர்ஸ் மற்றும் சக்திவேல் சார்பில் பாரம்பரிய விளையாட்டுகள், கதை செல்லுதல் மற்றும் மாயாஜாலக் காட்சி நடைபெறுகிறது.
மே 2- இந்திரதானு வால்டோர்ஃப் பள்ளியில் கலையின் மூலம் கதை செல்லுதல் நடைபெறுகிறது.
மே 3- திருமிகு.பிரியசகி சார்பில் மாயக்குரல் கதை, மே 4- திருமதி மமதி சாரி சார்பில் மாயாஜால சாகசங்கள் மற்றும் பழமை ஞானம் நடைபெறுகிறது.
மே 5- திருமிகு. அமல்ராஜ் ஓரிகாமி நடைபெறுகிறது. மே 6- திருமிகு, அமல்ராஜ் சார்பில் மாயக்குரல் கதை நடைபெறுகிறது.
மே 7- திருமணி லட்சுமி தலைமையில் கிங் ஆப் ஆர்ட்டுடன் விளையாடலாம், மே 8- நூலகக் குழு சார்பில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இதேபோல், மே 9ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
மே 9ம் தேதி சென்னை ஸ்டோரி டெல்லர்ஸ் சார்பில் பொம்மலாட்டம், காகித சிற்பி தலைமையில் கிரிகாமி.
மே 11ம் தேதி கதைசொல்லி சதீஷ் சார்பில் கோமாளி நிகழ்ச்சி.
மே 12ம் தேதி திருமணி கமர்கட்டு சக்தி சார்பில் பாரம்பரிய உணவுகள்.
மே 13ம் தேதி கவுசல்யா பாரி, பத்மப்பிரியா சுரேஷ் மற்றும் சூர்யா காயத்ரி ஆகியோர் தலைமையில் கப் ஆப் கதை.
மே 14ம் தேதி உமா சந்திரசேகரன் சார்பில் நினைவாற்றல் நுட்பங்கள்.
மே 15ம் தேதி நூலகக் குழு சார்பில் ஓவிய போட்டி.
மே 16ம் தேதி ஜெயகுமார் சார்பில் டிரம்ஸ் வகுப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.
மேலும், மே 17ம் தேதி அறிவரசன் தலைமையில் அறிவியல் சோதனை.
மே 18- சந்திரமோகன் தலைமையில் நாடகம்.
மே 19- சுந்தரமூர்த்தி தலைமையில் நாட்டுப்புறக் கலைகள்.
மே 20- விஜயராணி பிஜூ சார்பில் இலக்கியப் பரிசோதனைகள்.
மே 21- விஜயலட்சுமி சார்பில் படங்கள் மூலம் விளையாட்டு.
மே 22- நூலகக் குழு சார்பில் தமிழ் பாடல் போட்டி- பாரதியார், பாரதிதாசன் மற்றும் தேசப்பற்று பாடல்கள்.
மே 23- நூலகக் குழு சார்பில் விவாத போட்டி, மகிழ்ச்சி தருவது இணையவழியில் படிப்பதா? வகுப்பறையில் படிப்பதா?.
மே 24- முனைவர் சங்கர சரவணன் சார்பில் குழந்தைகள் வினாடிவினா நடைபெறுகிறது.
மேலும், மே 25 முதல் மே 31ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மே 25- தாமோதரன் சார்பில் நகைச்சுவை அறிதல்.
மே 26- அறிவரசன் சார்பில் அறிவியல் பரிசோதனை.
மே 27- நீதிமணி சார்பில் கோமாறி நிகழ்ச்சி.
மே 28- உமா கார்த்திகேயன் சார்பில் "பை"வரையும் கலை.
மே 29- நூலகக் குழு சார்பில் மாறுவேடப் போட்டி.
மே 30- நூலகக் குழு சார்பில் தமிழ் வார்த்தை விளையாட்டு.
மே 31- நூலகக் குழு சார்பில் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நடைபெறுகிது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
இவற்றை தவிர, பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெறுகிறது.
அதன்படி, மே 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை ரமேஷ் வைத்யா சார்பில் தமிழில் கதை எழுதுதல்.
மே 12- 16ம் தேதி வரை விஷ்ணுபுரம் சரவணன் சார்பில் தமிழில் கதை சொல்லுதல்.
மே 12- 16 வரை விஜய் ஆனந்த் சார்பில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி திரைப்படம் தயாரித்தல்.
மே 19- 23ம் தேதி வரை சுரேந்தர் சார்பில் பாவனை நாடகம், தாமோதரன் தலையைில் ஆங்கிலத்தில் கதை எழுதுதல்.
மே 26- 30ம் தேதி வரை விஷ்வநாதன் தேவராஜ் சார்பில் கார்ட்டூன் தயாரித்தல் நடைபெறுகிறது.
கலை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது.
மே 7- பொம்மலாட்டம், மே 10- பாசப் பயணம் நாடகம், மே 17- நாட்டுப்பற நடனம், மே 24- பாவனை நாடகம் நடைபெறுகிறது.
பயிற்சி வகுப்பு:
மே 1- 25ம் தேதி சதுரங்கம் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை).
மே 1- 10ம் தேதி முதல் மே 11- 20ம் தேதி வரை ரோபோடிக்ஸ் குழு- 1 மற்றும் 2 (மாலை 4 மணி முதல் 6 மணி வரை).
மே 5- 14ம் தேதி முதல் நாட்டுப்புற நடனம் (காலை 10.30 மணி முதல்- 12.30 மணி வரை), மே 5- 14ம் தேதி வரை நாடகப் பயிற்சி (காலை 10.30 மணி முதல்- பிற்பகல் 12.30) வரை நடைபெறுகிறது.
- ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
- ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அண்ணா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள வண்ண மயமான மலர்களையும், மலர்கள், காய்கறிகள் பழங்க ளால் உருவாக்கப்பட்ட காந்தி கண்ணாடி, எறும்பின் உருவம், மேட்டூர் அணை, முயல் உருவம், புலி, செல்பி பாயின்ட் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில் மலர்களால் ஆன சின்சான் பொம்மை குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதேபோல், படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரி பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு வரும் 28-ந் தேதி வரை நாள்தோறும் பல்வேறு விதமான போட்டி கள், விளை யாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
2-வது நாளான நேற்று ஏற்காடு டவுன் பேசன் ஷோ மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியும், கலைய ரங்கத்தில் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கரகம், மான், மயில், காவடி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சியும், சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், தாரை, தப்பட்டை நிகழ்ச்சிகளும் நடந்தன. மாலை 4 மணிக்கு கல்வித்துறை சார்பில் பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.
கோடை விழாவின் 3-ம் நாளான இன்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணி களுக்கும், இளைஞர்க ளுக்கும், அரசு ஊழியர்க ளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த விழாவையொட்டி ஏற்காட்டில் தங்கும் விடுதி, ஓட்டல்களில் அறைகள் நிரம்பியுள்ளன. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு விளையும் பலாப்பழம், பச்சை மிளகு, காய்ந்த மிளகு, காப்பிக் கொட்டை, காபி தூள், ஆட்டுக்கால் கிழங்கு, ஆரஞ்சு பழம், கொய்யா, அத்தி, முள் சீத்தா, பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
இதனிடையே நேற்று மதியம் ஏற்காட்டில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள நீரோட்டங்களில் மழைநீர் ஓடியதைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால், மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.
- நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் இந்திய அரசு, கலாச்சாரதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மையமாகும். இந்தியாவின் கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாத்து வருகின்றன.
இந்த நிலையில் தென்னகப் பண்பாட்டு மைய திறந்தவெளி கலையரங்கில் கோடை விழா-2023 முன்னிட்டு பல்வேறு மாநில கலைஞர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்,
கைவினை கலைஞர்களின் பொருட்காட்சி விற்பனை மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நாளை (புதன்கிழமை ) மாலை தொடங்குகிறது. இந்த விழா வருகிற 25 ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவை எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.
மேலும் இந்த கலை விழா தென்னகப் பண்பாட்டு மையம் மட்டுமல்லாமல் பாபநாசம், மயிலாடுதுறை மற்றும் திருச்சியிலும் நடைபெறும்.
இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா ,கர்நாடகா, கேரளா, கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கலை விழாவுக்கு முன்னோட்டமாக தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் பிரதி வெள்ளிக்கிழமைகள் தோறும் மாலை 6.30 மணிக்கு வாராந்திர கலை விழா தஞ்சை மற்றும் தஞ்சைக்கு அருகில் உள்ள கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படு த்தவும், கிராமப்புற மக்களின் கலை ஆர்வத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகள் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தவும் தீர்மானிக்கப்ப ட்டுள்ளது.
நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 7 மணிக்கு உலக யோகா தினம் மற்றும் உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.
அனைவரும் கோடை விழாவுக்கு வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஐயர், அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
- வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
- இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.
ஊட்டி:
நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை கலெக்டர் அருணா இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஊட்டியில் வருகிற 10-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை என 10 நாட்கள் இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

மலர் கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.75 ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.150 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சியும் நடத்த உள்ளோம் ரோஜா கண்காட்சி வருகிற 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
பழ கண்காட்சி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. ரோஜா கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.500, பெரியவர்களுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் மொத்தம் 6.5 லட்சம் மலர்கள் மக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நீலகிரியில் அமல்படுத்தப்பட உள்ள சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் அருணா, இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.







