என் மலர்
நீங்கள் தேடியது "TN Education Department"
- கலை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது.
- பயிற்சி வகுப்பு மே 1- 25ம் தேதி சதுரங்கம் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை).
பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பில் கோடை கொண்டாட்டம் 2025 நடைபெறுகிறது.
அதன்படி, அண்ணா நூற்றாண்டு நூலக குழந்தைகள் பிரிவில் விடுமுறைக்கால திருவிழா நடைபெறுகிறது. நாளை முதல் தொடங்கும் இத்திருவிழாவில் 4 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, மே-1 நாளை சென்னை ஸ்டோரி டெல்லர்ஸ் மற்றும் சக்திவேல் சார்பில் பாரம்பரிய விளையாட்டுகள், கதை செல்லுதல் மற்றும் மாயாஜாலக் காட்சி நடைபெறுகிறது.
மே 2- இந்திரதானு வால்டோர்ஃப் பள்ளியில் கலையின் மூலம் கதை செல்லுதல் நடைபெறுகிறது.
மே 3- திருமிகு.பிரியசகி சார்பில் மாயக்குரல் கதை, மே 4- திருமதி மமதி சாரி சார்பில் மாயாஜால சாகசங்கள் மற்றும் பழமை ஞானம் நடைபெறுகிறது.
மே 5- திருமிகு. அமல்ராஜ் ஓரிகாமி நடைபெறுகிறது. மே 6- திருமிகு, அமல்ராஜ் சார்பில் மாயக்குரல் கதை நடைபெறுகிறது.
மே 7- திருமணி லட்சுமி தலைமையில் கிங் ஆப் ஆர்ட்டுடன் விளையாடலாம், மே 8- நூலகக் குழு சார்பில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இதேபோல், மே 9ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
மே 9ம் தேதி சென்னை ஸ்டோரி டெல்லர்ஸ் சார்பில் பொம்மலாட்டம், காகித சிற்பி தலைமையில் கிரிகாமி.
மே 11ம் தேதி கதைசொல்லி சதீஷ் சார்பில் கோமாளி நிகழ்ச்சி.
மே 12ம் தேதி திருமணி கமர்கட்டு சக்தி சார்பில் பாரம்பரிய உணவுகள்.
மே 13ம் தேதி கவுசல்யா பாரி, பத்மப்பிரியா சுரேஷ் மற்றும் சூர்யா காயத்ரி ஆகியோர் தலைமையில் கப் ஆப் கதை.
மே 14ம் தேதி உமா சந்திரசேகரன் சார்பில் நினைவாற்றல் நுட்பங்கள்.
மே 15ம் தேதி நூலகக் குழு சார்பில் ஓவிய போட்டி.
மே 16ம் தேதி ஜெயகுமார் சார்பில் டிரம்ஸ் வகுப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.
மேலும், மே 17ம் தேதி அறிவரசன் தலைமையில் அறிவியல் சோதனை.
மே 18- சந்திரமோகன் தலைமையில் நாடகம்.
மே 19- சுந்தரமூர்த்தி தலைமையில் நாட்டுப்புறக் கலைகள்.
மே 20- விஜயராணி பிஜூ சார்பில் இலக்கியப் பரிசோதனைகள்.
மே 21- விஜயலட்சுமி சார்பில் படங்கள் மூலம் விளையாட்டு.
மே 22- நூலகக் குழு சார்பில் தமிழ் பாடல் போட்டி- பாரதியார், பாரதிதாசன் மற்றும் தேசப்பற்று பாடல்கள்.
மே 23- நூலகக் குழு சார்பில் விவாத போட்டி, மகிழ்ச்சி தருவது இணையவழியில் படிப்பதா? வகுப்பறையில் படிப்பதா?.
மே 24- முனைவர் சங்கர சரவணன் சார்பில் குழந்தைகள் வினாடிவினா நடைபெறுகிறது.
மேலும், மே 25 முதல் மே 31ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மே 25- தாமோதரன் சார்பில் நகைச்சுவை அறிதல்.
மே 26- அறிவரசன் சார்பில் அறிவியல் பரிசோதனை.
மே 27- நீதிமணி சார்பில் கோமாறி நிகழ்ச்சி.
மே 28- உமா கார்த்திகேயன் சார்பில் "பை"வரையும் கலை.
மே 29- நூலகக் குழு சார்பில் மாறுவேடப் போட்டி.
மே 30- நூலகக் குழு சார்பில் தமிழ் வார்த்தை விளையாட்டு.
மே 31- நூலகக் குழு சார்பில் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நடைபெறுகிது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
இவற்றை தவிர, பயிற்சி பட்டறை 5 நாட்கள் நடைபெறுகிறது.
அதன்படி, மே 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை ரமேஷ் வைத்யா சார்பில் தமிழில் கதை எழுதுதல்.
மே 12- 16ம் தேதி வரை விஷ்ணுபுரம் சரவணன் சார்பில் தமிழில் கதை சொல்லுதல்.
மே 12- 16 வரை விஜய் ஆனந்த் சார்பில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி திரைப்படம் தயாரித்தல்.
மே 19- 23ம் தேதி வரை சுரேந்தர் சார்பில் பாவனை நாடகம், தாமோதரன் தலையைில் ஆங்கிலத்தில் கதை எழுதுதல்.
மே 26- 30ம் தேதி வரை விஷ்வநாதன் தேவராஜ் சார்பில் கார்ட்டூன் தயாரித்தல் நடைபெறுகிறது.
கலை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறுகிறது.
மே 7- பொம்மலாட்டம், மே 10- பாசப் பயணம் நாடகம், மே 17- நாட்டுப்பற நடனம், மே 24- பாவனை நாடகம் நடைபெறுகிறது.
பயிற்சி வகுப்பு:
மே 1- 25ம் தேதி சதுரங்கம் (மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை).
மே 1- 10ம் தேதி முதல் மே 11- 20ம் தேதி வரை ரோபோடிக்ஸ் குழு- 1 மற்றும் 2 (மாலை 4 மணி முதல் 6 மணி வரை).
மே 5- 14ம் தேதி முதல் நாட்டுப்புற நடனம் (காலை 10.30 மணி முதல்- 12.30 மணி வரை), மே 5- 14ம் தேதி வரை நாடகப் பயிற்சி (காலை 10.30 மணி முதல்- பிற்பகல் 12.30) வரை நடைபெறுகிறது.
தமிழக கல்வித்துறையில் “கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்” என்ற பெயரில் தனி பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக அறிவொளி உள்ளார்.
இந்த மையத்தின் சார்பில் கல்வி துறையை மேம்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வியில் எத்தகைய புதுமைகளை கொண்டு வரலாம் என்பது பற்றி இந்த மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும்.
அந்த வகையில் ‘உலகமெல்லாம் தமிழ்’ என்ற திட்டமும் மாணவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டது. கனவு ஆசிரியர், சிட்டு ஆகிய 2 பெயர்களில் தனியாக புத்தகம் உருவாக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பொது அறிவை வளர்ப்பதற்கும், மொழித்திறனை மேம்படுத்தவும் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டன. ‘உலகமெல்லாம் தமிழ்’ திட்டத்தின் கீழ் அனிமேஷன் வீடியோக்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்துக்களை சரியாக உச்சரிப்பதற்கும், இசை மற்றும் நடனம் மூலம் எளிதாக கற்கும் வகையில் இந்த வீடியோ சி.டி. உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில்தான் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவொளியின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உலகமெல்லாம் தமிழ் திட்டத்தின் கீழ் பாடப் புத்தகங்கள் அச்சடித்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்வியியல் ஆராய்ச்சிக்காக வல்லுனர் குழுவை கூட்டாமல் போலியான ரசீதுகளை தயாரித்து மோசடி நடந்திருப்பதும் அம்பலமானது. இது தொடர்பாக ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து இயக்குனர் அறிவொளி, முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குனர் லதா, உதவி பேராசிரியை சங்கீதா, பட்டதாரி ஆசிரியை சித்ரா, இடைநிலை ஆசிரியர் அமலன் ஜெரோன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் மீதும் வழக்கு போடப்பட்டிருப்பதால் அனைவரும் விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.பி.ஐ. வளாகத்தில் சோதனை நடத்தியபோது கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அறிவொளியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. #Arivoli






