

சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக பயணிகளின் வசதிக்காக வழக்கமான அரசு பஸ்களோடு, சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை அதாவது 4 நாட்களில் மொத்தம் 11 ஆயிரத்து 372 பஸ்கள் இயக்கப்பட்டதில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 780 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அத்துடன் இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 977 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.