என் மலர்
நீங்கள் தேடியது "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"
- குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
- ஒரு வாரம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் ஒருவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒரு வார சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த லீலா வர்மா என்பவர், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், தெருநாய்களுக்கு உணவளித்து வந்தார். இதற்கு குடியிருப்பு நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களுக்கும், லீலா வர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடியிருப்பு நலச்சங்கத்தினர் தன்னை துன்புறுத்தி வருவதாகக் மும்பை உயர் நீதிமன்றத்த்தில் லீலா மனுதாக்கல் செய்தார்.
கடந்த ஜனவரியில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக, குடியிருப்பு நலச்சங்கத்தினருக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், அவர்கள் மாநகராட்சியை தான் அணுக வேண்டும். அதை விடுத்து, குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது' என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை விமர்சித்து, குடியிருப்பு நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வினீதா ஸ்ரீநந்தன், மற்ற உறுப்பினர்களுக்கு இ - மெயில் அனுப்பினார். அதில், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள், 'நாய் மாபியா' போல் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, நீதித்துறையை விமர்சித்ததற்காக வினீதா ஸ்ரீநந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றத்தை, 'நாய் மாபியா' என்று அழைப்பது போன்ற கருத்தை படித்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
இந்த விவகாரத்தில் வினீதாவின் மன்னிப்பை ஏற்க முடியாது. அவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. மேலும் அவர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, இந்த உத்தரவு எட்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார்.
இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சீராய்வு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தனது நிலைப்பாடு தொடர்பாக ராகுல் காந்தி இன்று பதில் மனு தாக்கல் செய்தார். #RahulGandhi #ContemptNotice #Rafale #Rahulcontemptcase #SCcontemptcase #MeenakshiLekhi
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது. அதன்பின்னர், ஆங்கில நாளிதழில் வெளியான ரகசிய ஆவணங்களை சுட்டிக்காட்டி, ரபேல் விவகாரம் குறித்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் என ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். அத்துடன், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சீராய்வு மனு மீதான விசாரணை ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். #RahulGandhi #ContemptNotice #Rafale

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம். நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 12ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனில் அம்பானி நேரில் ஆஜரானார். மேலும், அவரது சார்பில் 118 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அனில் அம்பானி மற்றும் அந்த நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களை குற்றவாளிகள் என அறிவித்தது.
அத்துடன், அனில் அம்பானி மற்றும் 2 இயக்குனர்களும் இன்னும் 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடியை செலுத்த வேண்டும், தவறினால் 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதுதவிர 3 பேருக்கும் தலா 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால், ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. #RelianceCommunication #AnilAmbani
நாகப்பட்டினம் மாவட்டம், கடினல்வயல் பஞ்சாயத்து தலைவராக இருந்த டி.மலர்விழி, தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:
குஜராத் ஹெவி கெமிக்கல் நிறுவனம், கடினல் வயல் பஞ்சாயத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, கடந்த 2003-ம் ஆண்டு முதல் உப்பளம் நடத்தி வருகிறது.
இந்த நிலத்தை மீட்டுத் தருமாறு பொதுமக்கள் சார்பிலும், பஞ்சாயத்து சார்பிலும் மாவட்ட கலெக்டர் முதல் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பிலும், பஞ்சாயத்து சார்பிலும் பல மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனுமதி இல்லாமல் நிலத்தில் உப்பளம் நடத்துவதால் பஞ்சாயத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புறம்போக்கு நிலம் பயன்படுத்துவோர் வரி கட்டணம் விதிகளின்படி, புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவோரிடம் வரி வசூலிக்கலாம். அதன்படி, கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்திடம் இருந்து வரி வசூலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு பல அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘குஜராத் ஹெவி கெமிக்கல் நிறுவனம், பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்தி வருவது குறித்து வேதாரண்யம் தாசில்தார் ஆய்வு செய்து, அந்த நிறுவனத்துக்கு விதிக்கவேண்டிய வரியை கணக்கிட்டு, அதுகுறித்து அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கு 6 வாரத்துக்குள் அனுப்பிவைக்கவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் வரி வசூலிக்கவேண்டும்’ என்று கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. எனவே, வேண்டும் என்றே உத்தரவை அமல்படுத்தாமல் இருக்கும் நாகப்பட்டினம் கலெக்டர், வேதாரண்யம் தாசில்தார் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.முருகபாரதி ஆஜராகி, ‘வேதாரண்யம் தாசில்தாரர் ஏற்கனவே இரு முறை சரியான ஆய்வுகள் செய்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வரி தொகையை குறைத்து மதிப்பிட்டுள்ளார்’ என வாதிட்டார்.
இதையடுத்து, வேதாரண்யம் தாசில்தார் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நேரில் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். #MadrasHC
கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷா. இவர் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருந்ததாவது:-
"எனக்கு வயது 18. 18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் ஷோபாவுக்கு மகப்பேறு நேரத்தில் அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.
18 ஆண்டுகளாகியும் எனது தாயாரை கோமா நிலையில் இருந்து மீட்க முடியவில்லை. நானும் உடல் நலகுறைவாக உள்ள தாயாரும் வாழவழியின்றி கஷ்டப்பட்டு வருகிறோம்.
தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், தவறான சிகிச்சை அளித்ததற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
அதைத்தொடர்ந்து ஷோபா குடும்பத்திற்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயை குமரி மாவட்ட கலெக்டர் வழங்க கடந்த அக்டோபர் 10-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால் அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால், நீதிமன்றம் தானாக முன்வந்து குமரி மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குமரி மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஆதர்ஷாவின் தாயார், ஷோபாவிற்கு பிரசவம் நடைபெற்ற குலசேகரம் கூட்டுறவு மருத்துவமனை தற்போது மூடப்பட்டுவிட்ட நிலையில், அவர்களிடம் இது தொடர்பாக இழப்பீடு கோர இயலுமா? என்பது குறித்து அறிய வக்கீல் ஆணையராக லஜபதி ராயை நியமித்தும், தமிழக சுகாதாரத்துறை செயலர், கூட்டுறவுத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இந்த வழக்கை ஜனவரி 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். #HCMaduraiBench
விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்தும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். அவரது பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

‘உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது தவறுதலாக சில வார்த்தைகளை கூறிவிட்டேன். இப்படி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறாக பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்’ என எச்.ராஜா கூறியிருந்தார்.
இதையடுத்து எச்.ராஜா மீதான அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதிக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் தனபால் வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். யுவராஜ் வருகையை முன்னிட்டு நாமக்கல் கோர்ட்டு வளாகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை அடுத்து, அறிவிப்பாணையை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக-வும் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதுவரை உள்ளாட்சி நிர்வாகிகளை நிர்வாகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர். #TNLocalBodyElection #TamilNaduCivicPolls