search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bharathiyar university"

    • வடவள்ளி பஸ் முனையத்தில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம் வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • 75-வது சுதந்திர திருநாளில் அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியேற்றும் விதமாக அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.

    வடவள்ளி:

    75- வது சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் விடுதலைப்போராட்ட வீரர்களை நினைகூறும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

    கோவை மருதமலை சாலை, வடவள்ளி பஸ் முனையத்தில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம் வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சுப்பிரமணிய சிவா, தீரன் சின்னமலை ஆகிய விடுதலைப்பேராட்ட வீரர்களின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 75-வது சுதந்திர திருநாளில் அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியேற்றும் விதமாக பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.

    இந்த பேரணியில் பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல், ஆட்சிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், வரலாற்றுத்துறை ஆசிரியர் சுந்தரபாண்டியன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் மஞ்சு புஷ்பா, கொங்குநாடு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள் வேல்முருகன், சித்ரா, மெய்யலகன், அமுதலட்சுமி உள்பட கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை சிறப்பாக செய்து இருந்தார்.

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். #MangatRamSharma #CourtDefamationCase #HighCourt
    சென்னை:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்களை வெளிநாடுகளில் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையங்களை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று 7 பேர் ஆஜராகினர். ஆனால், உயர் கல்வித்துறைச் செயலர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை

    இதையடுத்து, வழக்கை விசாரித்த ஐகோர்ட், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தமிழக உயர் கல்வித்துறைச் செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைதுசெய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தது. 

    இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அப்போது அவர், நேற்று ஆஜராகாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

    இதையடுத்து, மங்கத்ராம் சர்மாவுக்கு எதிராக பிறப்பித்திருந்த ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரண்ட்டை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. #MangatRamSharma #CourtDefamationCase #HighCourt
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #CourtDefamationCase #HighCourt #DepartmentofHigherEducation
    சென்னை:

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்களை வெளிநாடுகளில் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையங்களை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று 7 பேர் ஆஜராகினர். ஆனால், உயர் கல்வித்துறைச் செயலர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை

    இதையடுத்து, வழக்கை விசாரித்த ஐகோர்ட், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தமிழக உயர் கல்வித்துறைச் செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுதினம் ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு உள்ளது. #CourtDefamationCase #HighCourt #DepartmentofHigherEducation
    ×