search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court case"

    • சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர்.
    • நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் அதன் நிர்வாகத்தினர் தங்கள் மாணவர்களின் சட்டக் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி. முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி அனுமதிப் பெற்று சிவகிரியில் அமைந்துள்ள கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையைப் பார்வையிட அழைத்துச் சென்றனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர்.

    மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். முடிவில் கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் சட்ட மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.

    இலங்கை அதிபரின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என்று தக்ஷிலா லக்மாலி ஜெயவர்த்தனே என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். #Sirisena

    கொழும்பு:

    இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார்.

    இவருக்கு போதிய மெஜாரிட்டி இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.

    அதன் காரணமாக இலங்கையில் 2 மாதங்களாக அரசியலில் ஸ்திரமற்ற தன்மை நிலவியது.

    இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக தக்ஷிலா லக்மாலி ஜெயவர்த்தனே என்ற பெண் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

     


     

    அதில், “பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை தேவையின்றி பதவி நீக்கம் செய்து நாட்டில் 2 மாதங்களாக அதிபர் சிறிசேனா குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். எனவே அவரது மனநிலையை பரிசோதித்து உடல்நிலையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு கூறியது. மேலும் வழக்கு செலவுக்காக தக்ஷிலா வக்மாலி ஜெயவர்த்தனே ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #Sirisena

    கோவில் நிலம் அபகரிப்பு தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணவருக்கு எதிராக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Highcourt

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், சமூக ஆர்வலர் வாராகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

    பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யாவின் கணவரும், முன்னாள் நகர மன்ற செயலாளருமான பன்னீர் செல்வம் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. கட்டப்பஞ்சாயத்து செய்வது, தொழிலதிபர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டுவது என்று அவர் மீது பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில், பண்ருட்டி பகுதியில் உள்ள ஸ்ரீநல்லமுத்து அய்யனார் கோவிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை பன்னீர்செல்வம் அபகரித்துள்ளார்.

    இதுகுறித்து கடந்த மார்ச் 6-ந்தேதி கடலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, இந்த நில அபகரிப்பு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் விசாரித்து, பதில் அளிக்கும் படி வருவாய்த் துறை செயலாளர், கடலூர் கலெக்டர், உள்ளிட்டோருக் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.#Highcourt

    ×