என் மலர்
நீங்கள் தேடியது "Court Case"
- தமிழ்நாடு நிர்வாக பணியாளர் தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
- மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 1991-ம் ஆண்டு பலரை வேலையில் அமர்த்தியது. பின்னர், அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக பணியாளர் தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களுக்கு மாற்று பணி வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
இதன்படி சேக் அப்துல் காதர், எல். அழகேசன், பி.சர்மிளா பேகம் உள்பட 16 பேருக்கு வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இவர்கள் பணியை கடந்த 2004-ம் ஆண்டு முதல் வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால், இவர்களது பெயர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப் பட்டன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ''எங்களுக்கு பணி வழங்க சுப்ரீம் கோர்ட்டு 1999-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, எங்களது பணி 1996-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி முதல் கணக்கிட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு அந்த உத்தரவை காலதாமதமாக நிறைவேற்றி, எங்களது பெயரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முடியாது'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, ''சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, மனுதாரர்களை 1996-ம் ஆண்டு பணிவரையறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயர்களை சேர்க்க வேண்டும்'' என்று கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை. இதையடுத்து, மனுதாரர்கள் சென்னை ஐகோர்ட்டில், பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., நிதித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வருவாய் நிர்வாகத்துறை முதன்மை கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்., பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வணிகவரித்துறை கமிஷனர் டி.ஜெகன்நாதன் ஐ.ஏ.எஸ்., கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ்., ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவம திப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட 6 அதிகாரிகளையும் வருகிற ஆகஸ்டு 4-ந்தேதி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
- சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர்.
- நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் அதன் நிர்வாகத்தினர் தங்கள் மாணவர்களின் சட்டக் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.டி. முருகேசன் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை முதன்மை மாவட்ட நீதிபதி அனுமதிப் பெற்று சிவகிரியில் அமைந்துள்ள கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையைப் பார்வையிட அழைத்துச் சென்றனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் கோர்ட்டில் நடைபெற்ற உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளைப் பார்வையிட்டனர்.
மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு வழக்குகளின் விபரங்கள் பற்றி கோர்ட்டு ஊழியர்கள் சட்டமாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். முடிவில் கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் சட்ட மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.
- போலீஸ் தேடி வந்ததால் சிறுவை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு கொள்ளையர்கள் இடம்மாற்றியுள்ளனர்.
- தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் சென்று பார்த்து வந்த ஹர்ஸ் ராஜ் அதனால் கவரப்பட்டார்
பிப்ரவரி 10, 2007 :
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேர்கர் [Kheragarh] நகரில் ஹர்ஸ் ராஜ் என்ற 7 வயது சிறுவன் தந்தை மற்றும் உறவினர் முன்னிலையிலேயே துப்பாக்கி முனையில் கொள்ளையர்களால் காரில் கடத்திச் செல்லப்படுகிறான். ஆக்ராவில் இருந்து சம்பல் பகுதிக்கு சிறுவனை கடத்திச் சென்ற கொள்ளயர்கள் அவனது பெற்றோர்களிடம் ரூ.55 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீஸ் தேடி வந்ததால் சிறுவை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு கொள்ளையர்கள் இடம்மாற்றியுள்ளனர்.
சுமார் ஒரு மாத காலத்துக்குள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என சிறுவனை அழைத்துக்கொண்டு கொள்ளையர்கள் சுற்றியுள்ளனர். கடைசியாக மே 2007 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் துப்பு துலக்கி கண்டறிந்து சிறுவனை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய 14 பேரை அதற்கடுத்த ஒரு வருடத்துக்குள்ளாகவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர்கள் மீது கடந்த 14 வருடமாக வழக்கு நடந்து வந்துள்ளது.
செப்டம்பர் 17, 2024 :
கடத்தப்பட்ட அந்த சிறுவன் ஹர்ஸ் ராஜ் தற்போது 24 வயது இளைஞன். அதுமட்டுமின்றி பட்டம் பெற்ற வழக்கறிஞர். தனது கடத்தல் வழக்கில் இறுதி விசாரணையில் நீதிமன்றத்தில் தன் சார்பாக ஆஜரான ஹர்ஸ் ராஜ் இறுதி வாதத்தை முன்வைத்துள்ளார். நீதிபதியின் அனுமதி பெற்று சரியாக 55 நிமிடங்களில் தனது இறுதி வாதத்தை ஹன்ராஜ் சொல்லி முடித்துள்ளார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

14 பேரில் இருவர் வழக்கு நடக்கும்போதே இடையில் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் தகுந்த ஆதரங்கில்லாமல் விடுவிக்கப்பட்டிருந்தனர். கடந்த 2015 முதல் தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் சென்று பார்த்து வந்த ஹர்ஸ் ராஜ் அதனால் கவரப்பட்டுக் கடந்த 2022 இல் ஆக்ரா சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று தனது கடத்தல் வழக்கை வாதாடி வந்த அரசாங்க வக்கீலுக்கு உதவியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு:
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார்.
இவருக்கு போதிய மெஜாரிட்டி இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.
அதன் காரணமாக இலங்கையில் 2 மாதங்களாக அரசியலில் ஸ்திரமற்ற தன்மை நிலவியது.
இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக தக்ஷிலா லக்மாலி ஜெயவர்த்தனே என்ற பெண் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், “பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை தேவையின்றி பதவி நீக்கம் செய்து நாட்டில் 2 மாதங்களாக அதிபர் சிறிசேனா குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். எனவே அவரது மனநிலையை பரிசோதித்து உடல்நிலையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்து 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு கூறியது. மேலும் வழக்கு செலவுக்காக தக்ஷிலா வக்மாலி ஜெயவர்த்தனே ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #Sirisena
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், சமூக ஆர்வலர் வாராகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-
பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யாவின் கணவரும், முன்னாள் நகர மன்ற செயலாளருமான பன்னீர் செல்வம் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. கட்டப்பஞ்சாயத்து செய்வது, தொழிலதிபர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டுவது என்று அவர் மீது பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், பண்ருட்டி பகுதியில் உள்ள ஸ்ரீநல்லமுத்து அய்யனார் கோவிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை பன்னீர்செல்வம் அபகரித்துள்ளார்.
இதுகுறித்து கடந்த மார்ச் 6-ந்தேதி கடலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, இந்த நில அபகரிப்பு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் விசாரித்து, பதில் அளிக்கும் படி வருவாய்த் துறை செயலாளர், கடலூர் கலெக்டர், உள்ளிட்டோருக் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.#Highcourt






