என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அடுத்த சிம்பொனி அறிவிப்பை வெளியிட்டார் இளையராஜா
    X

    அடுத்த சிம்பொனி அறிவிப்பை வெளியிட்டார் இளையராஜா

    • லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றி இருந்தார்.
    • அண்மையில் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். வரவிருக்கும் புதிய படங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகின.

    இந்த நிலையில், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துடன் அடுத்த சிம்பொனி குறித்த அறிவிப்பை இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இசையராஜா கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள். அடுத்த சிம்பொனிக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளேன். Symphonic Dances என்ற புதிய இசைக் கோர்வையையும் எழுத உள்ளேன் என்றார்.

    முன்னதாக, லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றி இருந்தார். இதனை தொடர்ந்து, அண்மையில் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×